Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுடன் கலந்தாலோசிக்காமல், எவ்வித இராஜதந்திர தீர்மானங்களையும் எடுக்கக்கூடாது: வெளிநாட்டு தூதர்களுக்கு கடிவாளம் பூட்டியது இலங்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Sl-emblem-seithy-150.jpg

அரசுடன் கலந்தாலோசிக்காமல், எவ்வித இராஜதந்திர தீர்மானங்களையும் எடுக்கக்கூடா தென வெளிநாடுகளில் சேவையாற்றும் தனது அனைத்து இராஜதந்திரிகளுக்கும் இலங்கை அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சினூடாக இராஜதந்திரிகளுக்கு அரசு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என தெரியவருகின்றது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய கடந்த வாரம், கொழும்பு நிர்வாகத்துடன் கலந்துரையாடாமல் இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்கள் சம்பந்தமாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன் போது, சீனாவுக்கு எதிராகவும் அவர் கருத்து வெளியிட்டார் எனவும், அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடத் தயாராக இருந்தார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

  

இந்த விவகாரமானது இலங்கை அரசுக்கு பெரும் சர்ச்சையாக மாறியதுடன், சீனா உள்ளிட்ட பல தரப்பிடம் இருந்து எதிர்ப்புகள் வந்ததாகவும் அறிய முடிகின்றது. இதனையடுத்தே, கொழும்புடன் கலந்தாலோசிக்காது எவ்வித இராஜதந்திரச் செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டாம் என தமது இராஜதந்திரிகளுக்கு இலங்கை பணிப்புரை விடுத்துள்ளது. இதன்படி இனிவரும் காலப்பகுதியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, இராஜதந்திர கோட்பாடுகளுக்கு அப்பால் செயற்பட்டமை குறித்து அரசு, ஜாலிய விக்கிலமசூரியவை கடுமையாகக் கண்டித்திருக்கிறது என்றும் அறிய முடிகின்றது. நாட்டுக்கு எதிராக கடும் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற நிலையில், தூதுவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டால் அது மேலும் அழுத்தங்களை உண்டுபண்ணும். இந்த விடயம் உட்பட முக்கிய சில விடயங்களைக் கருத்திற்கொண்டே அரசு இராஜதந்திர செயற்பாடுகளுக்கு புதிய சுற்றறிக்கையை வகுத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.

http://www.seithy.com/breifNews.php?newsID=81009&category=TamilNews&language=tamil

இலங்கையின் இராஜதந்திரத்தில் அமெரிக்காவுடனான தொடர்புகள் இருக்கும் குழப்பத்தில் வேறு எந்த நாட்டு உறவும் இல்லை.

 

1. அமெரிக்க தூதுவராலயத்தில் சந்துலாவும் சவேந்திரவும் அடிபட்டது அகில இலங்கை புகழ் செய்தி. மகிந்தா உடனே அதில் தலையைக் கொடுத்து சவேந்திராவை மிரட்டினார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. சந்துலா அமெரிக்க கோடுகளில் சவேந்திராவுக்கு எதிராக வழக்குப் பதியாமால், சம்பவத்தை வைத்து பின் வழத்தால் நன்மைகள் அடைந்திருக்கலாம்.  சவேந்திரா மாதிரி பிரச்சனைகள் தூதுவராலயத்தில் இருப்பதனால் அமெரிக்கா இழக்கத்தக்க  நம்பிக்கையை திரும்பக் கொண்டுவர சவேந்திர ஐ.நாவுக்கு மாற்றப்பட்டார். சவேந்திரா அங்கு போன பின்னரும் இலங்கை தொடர்ந்தும் தனது காய்களை நகர்த்தி பிரச்சாரங்களை முன்னெடுத்து சவேந்திராவின் படங்களை சிங்களப் பத்திரிகைகளில் போட்டதால் அமெரிக்க தூதுவர் சவேந்திராவுடன் படங்கள் பிடிக்கும் போது இலங்கையில் தங்கள் தூதுவராலயத்தை கலந்து ஆலோசிக்கும் படி கோரிக்கைவிட்டா.

 

2. அமெரிக்காவில் இலங்கை தூதுவராலயம், அரச கடமை அல்லாத, அரச குடுபத்துக்கான முதலீட்டு முயற்சிகளில் இருப்பது வெளியே பகிரங்கப் படுத்தப்பட்டிருக்கு.

 

3. இலங்கையின் அரசு, துதுவராலயத்தை விலத்தி சென்று அமெரிக்க லொபி கம்பனிகளிடம் மிகப் பெரிய பணம் கொடுப்பு ஒப்பந்தங்களின் கீழ், தூதுராலயம் செய்ய வேண்டிய அரச கடமைகளை கையளித்திருப்பத்தாக பல செய்திகள் வெளிவந்துவிட்டன. இதன் போது தூதுவராலயமும் பணம் பெறுகிறது. தூதுவராலயம் மாதிரி செயல்ப்படும் வேறு அமைக்களும் பணம் பெறுகின்றன.

 

4. இலங்கை மத்திய வங்கி தனது பிரதான பொறுப்பான இலங்கையின் பொருளாதாரம், நிதி என்பவற்றை கைவிட்டு விட்டு அமெரிக்க தூதுவராலயத்தின் கடமைகளில் பங்கெடுப்பதாக கூறப்படுகிறது. தூதுவராலயம் கையெழுத்திட வேண்டிய ஒப்பந்தங்களில் அது கையெழுத்திடுகிறது. தூதுவராலம் தனது கடமை அல்லாமல் அரச குடும்பத்திற்காக செய்யும் முதலீடுகளை மேற்பார்வை செய்கிறது.

 

5.பாதுகாப்பு அமைச்சு அமெரிக்காவில் நடக்கும் பல இலங்கை அரசுக்கான நடவடிக்கைகளை கண்காணிக்கவும், பரிசு போன்ற இடங்களில் நேரடியாக தலையிட்டு தமிழ் அமைப்புக்களிடம் கொலை போன்ற குற்றச் செயல்களை பணம் கொடுத்து தூண்டுவது போல சிலவற்றை அமெரிக்காவிலும் நடத்த விரும்புகிறதாக இருக்கலாம். இதனால் பாதுகாப்பு அமைச்சு தூதுதுவராலயத்திற்கு மேலாக தனது கிளைகளை போல செயல்ப் படத்தக்க பொது பல சேனைக் கிளைகளை நியூயோர்க்கில் திறந்திருக்கிறது.

 

6. இவ்வளவு பணம் இலங்கை அரசால் அமெரிக்க தூதுவரால முயற்சிகளை சிக்கல் ஆக்குவதில் செலவிடப்படுகிறது. ஆனால் பல கேள்விக்குரிய விளவுகள்தான் இந்த சிக்கலான இராஜதந்திர நடவடிக்கைகளின் பின்னரும் விளைந்திருக்கிறது. உதாரணமாக இலங்கை பல கடன்களுக்குள் முக்கித் ததளிக்கும் போது அமெரிக்க இலங்கையின் செய்யும் தொண்டு நடவடிக்கைகளை 20% வீதம் வெட்டுகிறது. இலங்கையை அமெரிக்க அறிக்கை ஒன்று மனித உரிமைகள் மீறும் நாடாக வர்ணித்திருக்கிறது. ஆனால் இலங்கையை காப்பாற்றாத இத்தகை பணத்தையும் யாரை காப்பாற்ற இலங்கை அமெரிக்காவில் செலவிடுகிறது என்பதை புட்டு வைக்க இலங்கையின் சிங்கள ஆங்கில பத்திரிகைகள் தயங்குகின்றன. ஏற்கவே நெரிக்கப்படும் குரல்களை இன்னும் ஒரு மில்லி செண்டி மீட்டர் நெரிக்கப்படுமேயானால் தாம் லசந்தா பிரசுரித்த பாட்டைத்தான் எழுதிவைக்க வேண்டும் என்று நினைத்துப் பயப்படுகின்ற்ன.

 

மொத்தத்தில் இலங்கை அமெரிக்காவில் ஜெனிவா கன்வென்சன் போன்றவற்றில் உரிமைகள் வரையறுக்கப்படும் இராஜதந்திரிகளை வேலைக்கு அமர்த்தி வெளிநாட்டு உறவை கவனிக்கவில்லைவில்லை. மிக சிக்கலும், குழப்பமுமான ஒரு ஒற்றர் படைகளை அனுப்பிவைத்து பலவகையான கருமங்கள் ஆற்றிவருகிறது. இதில் சீனாவுக்கு எவ்வளவு நன்மை, அதன் பங்கு என்ன் என்பதை இதுவரயில் யாரும் சரியாக ஆராய்ந்து அறிக்கைகள் வெளிவிடவில்லை.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஷு .... அமெரிக்காவுக்கே கடிவாளமேண்டா....

நம்பவே முடியலல்ல ....  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.