Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பவர் ஸ்டார் கைது: சிறையில் அடைப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26-power-star111-300.jpg

 

ரூ.50 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் கைது, புழல் சிறையில் அடைப்பு.

 

சென்னை: ரூ. 50 லட்சம் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பி.எஸ். ரங்கநாதன்(60). ஹோட்டல் அதிபர். அவர் தனது தொழிலை மேம்படுத்த பலரிடம் கடன் கேட்டுள்ளார். அப்போது அவரை 2 ஏஜெண்டுகள் சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து பணம் வாங்கித் தருவதாக ரங்கநாதனிடம் கூறினர். பின்னர் ரங்கநாதனை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

 

அப்போது ரூ.20 கோடி கடன் வாங்கித் தருகிறேன் என்று உறுதியளித்த பவர் தனக்கு கமிஷனாக ரூ.50 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்திலும் பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கையெழுத்து போட்டுள்ளார்.

 

ஆனால் பல மாதங்கள் ஆகியும் பவர் கடன் வாங்கியும் கொடுக்கவில்லை, வாங்கிய கமிஷன் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து ரங்கநாதன் கடந்த அக்டோபர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இது குறித்து குற்றப்பிரிவு துணை கமிஷனர் சிவகுமார், உதவி கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தினார்.

 

பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி), 406 (நம்பிக்கை மோசடி), 120 (பி) (கூட்டு சதி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை இன்று அதிகாலை சாலிகிராமம் அருகே கைது செய்தனர். அவரை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு எழும்பூரில் உள்ள மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

பவர் இதுபோன்று பலரிடம் மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் பவரிடம் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்றும், கவர்ச்சிகரமான உறுதிமொழியை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.
 

பவரை பேயனெண்டு ஊர் சொல்லிச்சுது கடைசியை பவர் ஊரையே பேக்காட்டி விட்டுது

 

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் மனுஷன்..... அவருடைய வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்கள் அடிக்கடி அவரை மாட்டி விடுவதும் அதுவும் குறிப்பாக இந்த ஆட்சியில் இது சர்வசாதரனமாகவே நடைபெறுகின்றது.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.