Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரக்காணத்தில் பொதுமக்களுடன் பாமக மோதல்; துப்பாக்கிச்சூடு

Featured Replies

25 ஏப்ரல் 2013

 

மாமல்லபுரத்தில் பாமக நடத்தும் சித்திரைத் திருவிழாவிற்குச் சென்ற பாமகவினர் மரக்காணத்தில் பொதுமக்களுடன் சண்டையிட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேருந்துகள் மற்றும் கடைகள் உட்பட 5 வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக சித்திரை முழுநிலவுத் திருவிழா - வன்னிய இளைஞர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாகனங்களில் சென்று கொண்டிருந்த பாமகவினருக்கும், பொதுமக்களுக்குமிடையே திண்டிவனம் அருகே உள்ள மரக்காணத்தில் மோதல் ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 5 அரசு பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த கடைகள் உட்பட 5 வீடுகளு‌ம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் அந்தப்பகுதி போர்களம் போலக் காட்சியளித்தது. கலவர‌க்கார‌ர்க‌ள் அ‌ந்த வ‌ழியாக வ‌ந்த பேருந்துகள் மீது கற்களை வீசி‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌திய‌தி‌‌ல் 10 பேர் படுகாயமடைந்தனர்.

கலவரத்தை அடக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனையடு‌த்து அ‌ங்கு பெரு‌ம் பரபர‌ப்பு ‌நில‌வியது. பாமகவினரின் இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை முதலில் அனுமதி மறுத்தது. அனுமதி மறுப்புக்கான காரணத்தில் பாமகவினர் தொடர்ச்சியாக ஜாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசி தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறையை உருவாக்குகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு இதே சித்திரைத் திருவிழாவில் பாமக மாநாட்டில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, வன்னியப் பெண்களை வேறு ஜாதிக்காரர்கள் கல்யாணம் செய்தால் வெட்டுங்கள் என்று பேசியதன் விளைவே தர்மபுரியில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஜாதிவெறித் தாக்குதலுக்குக் காரணமாக அமைந்தது என்று காவல்துறை கருத்துத் தெரிவித்திருந்தது.

தர்மபுரி கலவரத்தில் 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு, பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டு, பல லட்சம் மதிப்பிலான பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/25/1130425040_1.htm

 

  • தொடங்கியவர்

மரக்காணம் கலவரம் தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு - 3000 பொலிசார் குவிப்பு!

 

fire-2742013-150.jpg

 

மரக்காணத்தில் கலவரம் தொடர்பாக 1,010 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த சித்திரை விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான வாகனங்களில் பாமகவினர் சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சென்றபோது மரக்காணம் மண்டவாய் கிராமத்தை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கும் பாமகவினருக்கும் தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. கலவரத்தில் 4 அரசு பஸ்கள் கடைகள் எரிக்கப்பட்டன. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தடியடி நடத்தியும் கலவரக்காரர்களை கலைத்தனர்.
 

அப்போது 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்தவர்கள் காலனி பகுதிக்குள் புகுந்து, தடி, அரிவாளால் தாக்கினர். வீடுகள் சூறையாடப்பட்டன. கடைகளும் எரிக்கப்பட்டன. 10 வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.இந்த கலவரத்தில் இரு தரப்பிலும் ஏராளமானோர் காயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை போன்றவற்றில் அனுமதிக்கப்பட்டனர். புதுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் (17) என்ற தஞ்சை வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கலவரத்தால் சாலைமுழுவதும் கண்ணாடி துண்டுகள், தடிகள், செருப்புகள், பாட்டில்கள் சிதறி கிடந்தன. நேற்றும் இசிஆர் சாலையில் பதற்றம் நீடித்தது. கலவரம் தொடர்பாக மொத்தம் 1,010 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடு எரிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 300 பேர் மீதும் பஸ்களை எரித்ததாக 200 பேர் மீதும், எஸ்பி மனோகரன் கார் உள்ளிட்ட வாகனங்களை உடைத்ததாக 300 பேர் மீதும், அனுமந்தை டோல்கேட்டை உடைத்த சம்பவத்தில் 200 பேர் மீதும், கூனிமேடு பகுதியில் கடைகளை சூறையாடியதாக 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே கலவரம் நடந்த பகுதிகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் நேற்று காலை பார்வையிட்டார். அவருடன் விழுப்புரம் எஸ்பி மனோகரன், மாவட்ட வருவாய் ஆய்வாளர் பிருந்தாதேவி, திண்டிவனம் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி, திண்டிவனம் வட்டாட்சியர் கோபால்சாமி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். கலவரம் நடந்த பகுதிகளான கட்டையன்தெரு, மேட்டுத்தெரு, மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

விழுப்புரம் ஐஜி கண்ணப்பன் நேற்று முன்தினம் இரவு பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினார். மாமல்லபுரத்தில் மாநாடு முடிந்து திரும்பும்போது மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோட்டக்குப்பம் டிஎஸ்பி முருகேசன் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகலுக்கு பிறகு இசிஆர் சாலை வழியாக சென்னை மற்றும் புதுச்சேரிக்கு குறைவான அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

 

http://seithy.com/breifNews.php?newsID=81361&category=IndianNews&language=tamil

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

மரக்காணம் வன்முறைக்கு ராமதாஸ் கண்டனம்

ஏப்ரல் 26, 2013

 

மரக்காணம் வன்முறை சம்பவத்தில் பா.ம.க.,வினர் 1050 பேர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ள அவர், வன்முறையில் இறந்தவர்களை விபத்தில் இறந்ததாக கூறி வன்முறையாளர்களை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

விழுப்புரம் மாவட்ட காவல்துறை நிலைமையை சரிவர கையாளவில்லை என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறை நிலைமையை கையாண்ட விதம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இதனிடையே, மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சம்பவம் நிகழ்ந்து 24மணி நேரமாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

 

http://puthiyathalaimurai.tv/ramdoss-condems-booking-of-pmk-cadres-for-marakanam-incident

 



மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

ஏப்ரல் 28, 2013

மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வன்முறையாளர்களை கைது செய்ய வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி விழுப்புரத்தில் தொடர் முழக்கப்போராட்டம் நடத்தப்படும் எனவும் ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும், மே முதல் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும் தொடர் முழுக்க போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் தேதி மரக்காணத்தில் நடந்த மோதல் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் அப்பாவிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பலர் காயம் அடைந்துள்ளதாகவும், பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

http://puthiyathalaimurai.tv/ramdoss-demand-action-against-who-involve-in-violent

 



மரக்காணம் கலவரம்; சட்டப்பேரவையில் ஜெ - குரு வாக்குவாதம்
29 ஏப்ரல் 2013

 

மரக்காணத்தில் தலித் மக்கள் மீது பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் நடந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், பாமக எம்.எல்.ஏ. குருவிற்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

கடந்த வியாழக்கிழமை பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மரக்காணம் மற்றும் கூனிமேடு பகுதிகளில் வாழும் தலித் மற்றும் இஸ்லாமிய மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தினர். தலித் மக்கள் மீதான இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் எதிப்புகள் வந்தது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தேமுதிக, இடது சாரிகள், புதிய தமிழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த தீர்மானம் தொடர்பான வாதத்தில் பாமக எம்.எல்.ஏ. குரு(காடுவெடி குரு) முதல்வர் ஜெயலலிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதத்தில் மரக்காணம் கலவரத்திற்கு பாமக காரணம் அல்ல என்றும், அதற்கு தலித் மக்களே காரணம் என்று கூறி அப்போதும் தலித் மக்களை தரக்குறைவாக பேசினார். மேலும் இப்போது பேசிய எந்த ஒரு கட்சியின் உறுப்பினரும் பாமகவை குற்றம் சாட்டவில்லை என்றும் கூறினார்.

குரு பேசியதற்கு பதில் பேசிய ஜெயலலிதா, "குரு கூறுவதிலிருந்தே எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போன்று பாமக தான் கலவரம் செய்தது என்பதற்கு ஆதாரமாக உள்ளது என்றும், தலித் மக்களை அவதூறாக குரு சட்டசபையில் பேசிய அனைத்தும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

ஜெயலலிதாவின் கோரிக்கைப்படி குரு தலித் மக்களைப் பற்றி அவதூறாக பேசிய அனைத்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன்.

பாமக மற்றும் காடுவெட்டி குருவின் தலித் விரோத எண்ணங்களை புரிந்து கொள்வதற்கு உதவும் அவரது சட்டசபை பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்காமல் இருந்தால் இதுபோன்ற கலவரங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க வசதியாக இருக்கும் என்பது முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரியாமல் போனது கவலை அளிக்கிறது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/29/1130429024_1.htm



போடு வழக்க' - ராமதாஸ் சொன்னார், ஜெ செய்தார்.
29 ஏப்ரல் 2013

 

பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

மரக்காணம் கலவரம் தெடர்பாக தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, பத்து மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக விழா அமைப்பாளர்கள் உறுதி அளித்திருந்த போதும், இவ்விழாவில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் பேசும் போது, "11½ மணிக்குப் பேசறேன் - போடு வழக்க. அதெல்லாம் நமக்குக் கவல கிடையாது" என்று கூறியுள்ளார்.

பத்து மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்திய ராமதாஸ் அவர்கள் மீது ‘வழக்குப் போடுங்கள்’ என்ற அவரது கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டு, நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று ஜெயலலிதா கூறினார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/29/1130429038_1.htm

 

  • தொடங்கியவர்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

30 ஏப்ரல், 2013

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் செய்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாமக தலைவர் கோ க மணி, சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ஜெ.குருவும் கைது.

காவல்துறையினர் வன்னியர் நலனுக்கு விரோதமாகச் செயல்படுவதாக குற்றம்சாட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தபோது ராமதாஸும் அவரது கட்சித் தொண்டர்களும் கைதாகினர்.

 

வன்னியர் சங்கம் மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நடத்திய நேரத்தில் மரக்காணத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆயிரத்துக்கும் அதிகமான வன்னியர்களுக்கு எதிராக தமிழக பொலிசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர் என்றாலும், வன்னியர்கள் தாக்கப்பட்டது குறித்து தமிழக பொலிசார் வழக்கேதும் போடவில்லை என பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டுகிறது.

வன்னியர்களுக்கு எதிராக பொலிசார் பாரபட்சம் காட்டுவதையே இது குறிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் இந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்திருந்தார்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸ், நீதிபதியின் முன்பு ஆஜர்செய்யப்பட்டு பின்னர் பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தலித்துகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வன்முறையைத் தூண்டிவருவதாக குற்றம்சாட்டியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்ஸிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சியினர், மாநிலம் தழுவிய அளவில் மே 8ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/04/130430_ramadossarrest.shtml

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.