Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவரிடம் கூடப் பகிர்ந்து கொள்ளாத இரகசியங்களை முதல்முறையாக அவிழ்த்து விட்டார் ஹிட்லரின் பணிப்பெண்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
hitler-2742013-150.jpg

இரண்டாம் உலகப் போரின் போது அடால்ப் ஹிட்லரின் உணவு பரிசோதகராக இருந்த பெண், அரை நூற்றாண்டை கடந்த நிலையில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது 95வது பிறந்த நாளைக் கொண்டாடிய மார்கோட் வெல்க், இதுவரை தனது கணவரிடம் கூட பகிர்ந்து கொள்ளாத பல ரகசியங்களை தற்போது வெளி உலகுக்கு தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது, ஜெர்மனின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லரின் உணவுப் பரிசோதகராக 15 இளம் பெண்கள் பணியாற்றினர். அதில் தானும் ஒருவர் என்று கூறியுள்ளார் மார்கோட் வெல்க்.

  

எனக்கு அப்போது 20 வயது இருக்கும். இரண்டாம் உலகப் போரின் போது, தற்போது போலந்து என்று அழைக்கப்படும் பகுதியில் மிக அதிக பாதுகாவலர்களுக்கு மத்தியில்தான் நாசிப் படைகளின் தலைவர் ஹிட்லர் இருந்தார். அப்போது அவருக்கு அளிக்கப்படும் உணவுகளில் விஷம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 15 இளம் பெண்களுக்கு அந்த உணவு கொடுக்கப்படும். அவர்கள் சாப்பிட்ட பிறகே ஹிட்லர் அந்த உணவை சாப்பிடுவார்.ஹிட்லர் ஒரு சைவ பிரியர். நான் அங்கு பணியாற்றிய இரண்டரை ஆண்டுகளில் அவர் ஒரு நாள் கூட அசைவ உணவுகளை சாப்பிட்டதில்லை. பிரிட்டிஷ் காரர்கள் தனக்கு உணவில் விஷம் கலந்து வைத்து விடுவார்கள் என்று ஹிட்லருக்கு அச்சம் இருந்தது. அதனால்தான் உணவு பரிசோதனை பணிக்கு 15 பெண்களை அமர்த்தியிருந்தார்.

 

ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரின் போது கடுமையான உணவுப் பஞ்சம் இருந்தது. பல வீரர்கள் உணவு இன்றியே மடிந்தனர். ஆனால், ஹிட்லருக்கு மட்டும் வகை வகையான உணவுகள் சமைத்து பரிமாறப்பட்டன. மிகவும் தேர்வு செய்த காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்கப்பட்டது. நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு உணவின் தரம் அமைந்திருக்கும். பாஸ்தா அல்லது அரிசி சாதத்தையே அவர் தினமும் விரும்பி உண்ணுவார்.எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும், ஒரு நாள் கூட நாங்கள் அதை ருசித்து உண்டது கிடையாது. இதுதான் நமது கடைசி சாப்பாடாக இருக்குமோ என்ற அச்சத்திலேயே நாங்கள் அங்கு இருந்தோம் என்று கூறுகிறார் வோல்க்.

 

இரண்டாம் உலகப் போரின் போது நாசி படைகளுடன் பணியாற்றினோம் என்று கூறுவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, இதைப் பற்றி இதுவரை நான் யாரிடமும் கூறியது கிடையாது. எனது கணவரிடம் கூட இது பற்றி சொன்னதில்லை என்கிறார் அவர். ஹிட்லர் மிகுந்த அச்ச உணர்வோடும், எப்போதும் எச்சரிக்கையாகவும் இருப்பார். அவரது அச்சத்தை அதிகரிக்கும் வகையில் 1944ஆம் ஆண்டு ஹிட்லர் தங்கியிருந்த வோல்ப்ஸ் லேயருக்குள் மிக சக்தி வாய்ந்த குண்டு வீசப்பட்டது. இதில் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆனால் ஹிட்லர் தப்பிவிட்டார். அதன் பிறகு நிலைமை வேறு விதமாக ஆனது.

 

என்னுடன் பணியாற்றியவர்களின் குடும்பத்தினர், அப்பகுதியிலேயே இருந்ததால், அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதை விரும்பவில்லை. ஆனால் நான் ஒரு வழியாக அங்கிருந்து தப்பி ரயில் மூலம் பெர்லின் சென்றேன். அங்கு சென்ற பிறகு, எனக்குக் கிடைத்த தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, ஹிட்லரின் உணவு பரிசோதகராக பணியாற்றிய 14 பெண்களையும், ரஷ்யப் படையினர் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்பதுதான். அதோடு விட்டுவிடவில்லை, ரஷ்யப் படையினர் என்னைத் தேடிக் கொண்டு பெர்லின் வந்து என்னை கைது செய்து, ஒரு குடியிருப்பில் தொடர்ந்து 14 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதனால்தான் எனக்கு இதுவரை குழந்தை பிறக்கவில்லை. எனது வாழ்க்கையே நாசமானது என்றார்.

 

மேலும், இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஜெர்மன் படையில் பணியாற்றி வந்த தனது கணவர் திரும்பி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக 23 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இறந்து விட்டார். பிறகு பல்வேறு வேலைகளில் தான் பணியாற்றினேன். தற்போது ஒரு சிறிய குடியிருப்பில் காலம் தள்ளி வருகிறேன்.எனது பழைய அருவருப்பான நினைவுகளை மறக்க நினைத்தாலும், அது என்னை மறக்காமல் துரத்திக் கொண்டே இருக்கிறது. அதிலும் இரவு நேரங்களில் என்னை தூங்க விடாமல் செய்கிறது என்கிறார் கண்ணீர் ததும்ப.ஹிட்லருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=81418&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.