Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதை அனுமதிக்கக் கூடாது : த.வெள்ளையன்.

Featured Replies

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் 30-வது வணிகர் தின விழா, உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு மாநாடு இன்று நடந்தது. பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை வகித்தார்.

மாநில அமைப்பாளர் கே.வி.கந்தசாமி செட்டியார் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.வி.ரத்தினம், தலைமை நிர்வாக செயலாளர் சி.எல்.செல்வம், துணை பொதுச் செயலாளர்கள் பெருங்குடி எஸ்.சவுந்திரராஜன், ஜவருல்லாகான், சண்முகநாதன், பழனியப்பன், ஹபிபுல்லா, மாவட்ட தலைவர்கள் ப.தேவராஜ், வியாசை எம்.மணி, மணலி டி.ஏ.சண்முகம், வி.ஏ.கருணாநிதி, கோபால், திருவடி, நிதிக்குழு எஸ்.ஆர்.பி.ராஜன், என்.ஏ.தங்கதுரை, சாலமன், சையது அகமது, திருஞானம் முன்னிலை வகித்தனர்.


மாநில முதன்மை துணை தலைவர் டி.பாலகிருஷ்ணன், தேசிய கொடியேற்றினார். இரா.ரத்தினசாமி வணிக கொடியேற்றினார். மாநாட்டு திடலை மாசாண முத்து திறந்து வைத்தார். மாநில பொதுச் செயலாளர் கே.தேவராஜ் வரவேற்புரையாற்றினார்.


தியாகராஜன், ஜியாவுல்லாகான், ராமலிங்கம் குத்துவிளக்கு ஏற்றினர். முத்துபாண்டியன் தொடக்க உரையாற்றினார். மாநாட்டில் அகில இந்திய தலைவர் ஷியாம் பிஹாரி மிஸ்ரா, அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.த.செல்லப்பாண்டியன், மேயர் சைதை துரைசாமி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு தலைவர் இரா.நல்லகண்ணு பழநெடுமாறன் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., சிவராமன், லட்சுமிகாந்தன் பாரதி, இனியன் ஜான், சா.காந்தி, கேரள வணிகர்சங்க தலைவர் டி.நசுருதீன், பேராசிரியை பாத்திமா பாபு, மாரியில் கிருஷ்ணன் நாயகர் சா.சந்திரேசன், பாலகிருஷ்ணன், சாந்திலால் பாண்டியா புதுச்சேரி வர்த்தக சங்க தலைவர் எம்.கே.ராமன், ஏ.அழகிரி ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான வணிகர்கள் கார்,  வேன், பஸ்கள் மூலம் வந்து கலந்து கொண்டனர். மாநில தலைவர் த.வெள்ளையனுக்கு வணிகர்கள் ஆளுயரமாலை, சால்வை, மலர் கிரீடம் அணிவித்து வீரவாள், நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.


மாநாட்டில் மாநில துணைத் தலைவர் இ.சி.பாலன், முகப்பேர் மேற்கு வியாபாரிகள் சங்க தலைவர் பி.செல்லத்துரை செயலாளர் பி.பழனி பொருளாளர், நாகேந்திரன், பெரம்பூர் ரெங்கசாமி நாடார், காஞ்சி ஆர்.சேவியர், அல்ஹாஜ் எம்.சலீம் மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் கே.தேவன், பி.பரமசிவம், விநாயகபுரம் வியாபாரிகள் சங்க தலைவர் வி.பி.திருஞானம், செயலாளர் கமலநாதன், பொருளாளர் ஆர்.முரளி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ப.தேவராஜ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணலி டி.ஏ.சண்முகம், செயலாளர் மீஞ்சூர், டி.சேக் அகமது, மாவட்ட பொருளாளர் டி.தாராராம், மூலக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் சி.தயாநிதி, செயலாளர் கா.ஷாஜகான், எம்.கே.ராஜன், நூர்முகமது, வி.கதிரேசன், யு.ஜோதிராம்,  என்.டி.என்.ஜெயராஜ், ஏ.அப்துல் குத்தூஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.



மாநாட்டில் த.வெள்ளையன் பேசியதாவது:-



விலைவாசி உயர்வு, உணவு பாதுகாப்புதரச் சட்டம், ஆன்லைன் வர்த்தக சூதாட்டம், வணிகம், விவசாயம், வங்கிகள் காப்பீடு, தொலை தொடர்பு அந்நியர் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும். இந்திய வர்த்தகத்தை காக்க வணிகர்கள் ஓரணியில் திரள வேண்டும்.



இவ்வாறு த.வெள்ளையன் பேசினார்.



மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-



சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மறுத்ததுடன் நில்லாமல் சில்லறை வணிகத்தைச் சீர்குலைக்கத் திட்டமிடும் ‘வால்மார்ட்’ வளாகத்துக்கு ‘சீல்’ வைத்த உறுதியான நடவடிக்கையின் மூலம் தமிழக வணிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாநாடு மனப்பூர்வமாகப் பாராட்டுகிறது.



இருபது ரூபாய்க்கு ஒரு கிலோ தரமான அரிசி, நுகர்பொருள் விநியோக மையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்தமைக்காக, தமிழக அரசை இந்த மாநாடு பாராட்டுகிறது. பாமர மக்களுக்கும் சமூக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அடித்தட்டு மக்கள் வரை பத்திரிகை செய்திகளைக் கொண்டு போய் சேர்த்த பெருமை தினத்தந்திக்கு உரியது.



தினத்தந்தியை நவீன மாற்றங்களுக்கு ஏற்ப வடிவமைத்ததுடன் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வணிகம் மற்றும் விளையாட்டுத் துறைக்கும் பயன்படும் அளவுக்குப் பரிணாம மாற்றம் அடைய வைத்தவர் அமரர் ஐயா சிவந்தி ஆதித்தன் அவர்களது சீரிய தலைமையின் கீழ் வணிகர்களின் காவல் அரணாகத் தினத்தந்தி திகழ்ந்தது. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் குரல் கொடுத்தது. அவரது மறைவு, தமிழ் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்களது நினைவைப் போற்றுவதுடன் அவரது குடும்பத்திற்கும், தினத்தந்தி குழுமத்திற்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தெரிவித்துக் கொள்கிறது.



உள்நாட்டு வர்த்தகத்தை வேரறுக்கும் நோக்கத்துடன்தான், ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006’ மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வணிகர் விரோதச் சட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சரை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.


சென்னை பாடி-திருநின்றவூர் 6 வழிச்சாலை திட்டத்தை நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது. மாவட்டத்துக்கு ஒரு வணிகர் பிரதிநிதியை வணிகர் நலவாரிய உறுப்பினராக நியமிக்க அரசு முன்வர வேண்டும் என்றும் தமிழக வணிகர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


இனப்படுகொலைக்கு நீதி கேட்ட தமிழக மாணவர்களை இந்த மாநாடு மனப்பூர்வமாகப் பாராட்டுகிறது. இனப்படுகொலை செய்த இலங்கை மண்ணில் காமன்வெல்த் மாநாடு நடப்பதை அனுமதிக்கக் கூடாதென்றும், அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று முன்னதாகவே அறிவிக்க வேண்டுமென்றும் இந்திய அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14458:sri-lanka-should-not-be-allowed-to-happen-in-the-commonwealth-conference-the-villaian&catid=36:tamilnadu&Itemid=102

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.