Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நச்சென்று ஒருபடம், சிந்திக்க ஒருபடம்.

Featured Replies

சிறுவர்கள் இயக்கிய குறும்படம்.

நச்சென்று ஒரு படம் மெழுகுவர்த்தி

சிந்திக்க ஒருபடம் கல்வெட்டு

சிறுவர்கள் இயக்கிய குறும்படம்.

நச்சென்று ஒரு படம் மெழுகுவர்த்தி

சிந்திக்க ஒருபடம் கல்வெட்டு

தகவலுக்கு நன்றி பிருந்தன்.

கொஞ்சம் ஓவர்............

மெழுகுவர்த்தி யதார்த்தத்தை மீறியது.

கல்வெட்டு குழந்தைகள் மனதில் வன்முறையை வளர்ப்பது.

இது பற்றிய விமர்சனத்தை பின்னர் வைக்கிறேன்.

நன்றி!

தகவலுக்கு நன்றி பிருந்தன்....

குறும் படங்கள் பற்றிய மேலும் தொடர்புகளைத் தாருங்கள்.

அஜீவன் உங்கள் விமர்சனங்களுக்காகக் காத்திருக்கின்றேன். என் மனதில் பட்டவைகளையும் பின்னர் விரிவாக எழுதுவேன்.

அன்புடன்

-எல்லாள மஹாராஜா-

மெழுகுவர்த்தியில் சித்தரிக்கப்பட்டது போல ஒவ்வொரு பெண்ணும் இருப்பார்களேயானால் :wink: :?: :arrow:

ம்ம்ம்ம் உண்மை தான் ஆண்கள் நக்கலடிக்கிறார்களே என பெண்கள் நாணி தலையை குனிந்து கொண்டு போனால் தான் ஆண்களுக்கு மீண்டும் மீண்டும் பெண்களுடன் நக்கலடிக்கணும் என தோணும். :twisted: :twisted:

"கல்வெட்டு" கண்ணீரை வரவழைத்து விட்டது. :cry: :cry: :cry: :cry: :cry:

அச்சிறுவனின் கண் முன்னால் இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கின்றனவா? பாவம் அம்மழலை மொழியில் கேட்கும் போது கலங்காத மனம் இருப்பதெனில் அதிசயம் தான் :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

சித்திரத்தில் குறிக்கப்பட்ட அப்பா போன்றோரை கொலை செய்தால் குற்றவாளியாக சின்ன உள்ளங்களை கூண்டில் ஏத்தவா முடியும்? :evil: :twisted:

  • 1 month later...

அருமையான சிந்திக்கவைத்த படங்கள் நன்றி நண்பரே

குறும்படங்கள் இணைத்த பிருந்தனுக்கு நன்றிகள்...

மெழுகுவர்த்தி யில் காணப்பட்ட இரு பெண்களின் உரையாடலில் இருந்து ஒருத்தி துணிச்சல்மிக்கவளாகவும் மற்றவள் சற்று கூச்சம் பயந்த சுபாவமுடையவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கின்ற

சில காலங்களுக்கு முன் இக் குறும்படங்கள் தொடர்பாக எழுத வேண்டும் என எண்ணினாலும் ஏனோ நேரம் கிடைக்கவில்லை.

இப்போது யாழ் களத்தில் ஊற்றெடுத்தது போல் வெளி வந்ததும் என்னை எழுதத் தூண்டியது.

2.jpg

மெழுகுவர்த்தி தன்னை அழித்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு ஒளியைக் கொடுக்கிறது.

தன் நண்பிக்கு ஏற்படும் அவமானத்துக்கு எதிராக மற்றுமொரு நண்பி குரல் கொடுப்பதால்

மெழுகுவர்த்தி என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்.

அப்படியானால் மெழுகுவர்த்தி எனும் பெயர் பொருத்தமானதுதான்.

கதையில்

இரு பெண் சிநேகிதிகள் பயணிக்கிறார்கள்.

மாதவிலக்கு காலங்களில் பாவிக்கும் smallpad.jpg பேடை கடையில் போய் வாங்க தயங்கும்

தன் சிநேகிதிக்கு துணையாக முதன்மை பாத்திரம் ஏற்றிருப்பவர் போவதை அவரது பேச்சு மூலம் சொல்லப்படுகிறது.

அவர்கள் இருவரும்

கடை வராந்தாவில் அமர்ந்திருந்து குத்தல் பாட்டு பாடும்

வெட்டி பசங்களைக் கடந்து செல்கின்றனர்.

அங்கே அந்த வெட்டி கூட்டம் எப்படியானது என்பதை

"கண்ணைப் பார்த்து பேசச் சொன்னா கழுத்துக் கீழ...........என பாடும் பாடல் வரிகளே நமக்கு புரிய வைக்கிறது.

அந்த இரு சிநேகிதிகளும் அவர்களைக் கடந்து செல்லும் போது

" என்ன கண்ணு பிரெட்டு (Pad) வாங்க போனியா ?"

என்று அவர்கள் கேட்பது தர்க்க ரீதியாக (லாஜிக்காக) இல்லை.

அவர்களுக்கு அது எப்படித் தெரிந்தது?

அதன் பின்னர்

அந்தப் பெண் திரும்பி வருவது மட்டுமல்லாமல்

அவள் கையில் தான் வாங்கிய Padடையும் எடுத்து வந்து

ஒருவனது கன்னத்தில் அறைகிறாள்.

கனவுலக சினிமா என்ற ரீதியில்

இந்த முறை சரியாக இருந்தாலும்

நிஜ வாழ்வில் பார்க்கும் போது

(இப்படியான குறும்படங்கள் யதார்த்தத்தை ஒட்டியே உருவாக்கப்படுகிறது.)

அதன் பின்னர்

அந்தப் பெண்களுக்கு

அந்த கயவர்களால் ஏற்படப் போகும்

தீங்குகளே என்னைக் குளப்பியது.

படம் அத்தோடு முடிகிறது.

அதற்குப் பின்தான்

அவள் தன் தோழிக்காக மெழுகுவர்த்தியாகப் போகிறாளா?

இது நடக்கும் தேசத்தில்

இப்படி நடக்காமல் இல்லை என்று

சொல்ல வரவில்லை.

இந்தக் குறும் படத்தைப் பார்த்து

நடைமுறைப்படுத்தும் ஏனைய இளசுகள் நிலை பற்றி

சற்று சிந்திக்கவே வேண்டியிருக்கிறது?

அருமையான கதைக் கரு : ஒளிப்பதிவு

ஒளிப்பதிவு கோணங்கள்

ஒலியமைப்பு

மற்றும்

இயக்கம்

இவற்றுக்கு பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தி தன்னை அழித்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு ஒளியைக் கொடுக்கிறது.

மெழுகுவர்த்தீ எனத்தான் தலைப்பிட்டுள்ளது.

இப் படைப்பாளிகளின் நோக்கு வேறுபட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன்

:?:

தியாகத்தின் சின்னமாய் மெழுவர்த்தியை ஏன் கொண்டுவந்தார்கள் கற்பூரம் கூட மற்றவர்களின் ஏகாந்தத்துக்காயும், காற்றை சுத்திகரிக்கவும் பயன்பட்டு... தன்னையே அழித்து கொள்கிறதே ஏன் அதனையும் தியாகத்தில் சின்னமாக்க கூடாது எண்று விவாதம் நடத்தினார்கள்...!

கடைசியில் தன்னை அளித்து உருகி மெழுகாய் படர்ந்த்தாலும் இன்னும் நான் உருகுவதுக்கு தயாராய் இருக்கிறேன் எண்று சொல்லி நிற்க்கும் மெழுகுதியின் மெழுகை காட்டி, அதுவே தியாகத்தின் சின்னமாக வரத்தகுதியானது எண்று விவாத்தை முடித்தார்கள்...!

படத்தைபற்றி யாராவது கேட்டிருந்தால் மன்னியுங்கள் படம் பாக்க மட்டும்தான் தெரியும் விமர்சனம் எல்லாம் செய்யும் துணிவு எனக்கு இல்லை...! ஏனெண்டால் எனக்கு அதை உருவாக்கும் ஆற்றல் இல்லை...!

தியாகத்தின் சின்னமாய் மெழுவர்த்தியை ஏன் கொண்டுவந்தார்கள் கற்பூரம் கூட மற்றவர்களின் ஏகாந்தத்துக்காயும், காற்றை சுத்திகரிக்கவும் பயன்பட்டு... தன்னையே அழித்து கொள்கிறதே ஏன் அதனையும் தியாகத்தில் சின்னமாக்க கூடாது எண்று விவாதம் நடத்தினார்கள்...!

கடைசியில் தன்னை அளித்து உருகி மெழுகாய் படர்ந்த்தாலும் இன்னும் நான் உருகுவதுக்கு தயாராய் இருக்கிறேன் எண்று சொல்லி நிற்க்கும் மெழுகுதியின் மெழுகை காட்டி, அதுவே தியாகத்தின் சின்னமாக வரத்தகுதியானது எண்று விவாத்தை முடித்தார்கள்...!

படத்தைபற்றி யாராவது கேட்டிருந்தால் மன்னியுங்கள் படம் பாக்க மட்டும்தான் தெரியும் விமர்சனம் எல்லாம் செய்யும் துணிவு எனக்கு இல்லை...! ஏனெண்டால் எனக்கு அதை உருவாக்கும் ஆற்றல் இல்லை...!

அற்புதம்

அபாரம் தல!

நமக்குள்ள எத்தனை திறமைசாலிகள்.

பெருமையாக இருக்கிறது உங்கள் கருத்து கண்டு...........

அடியேனின் வாழ்த்துகள்....................... :lol:

அற்புதம்

அபாரம் தல!

நமக்குள்ள எத்தனை திறமைசாலிகள்.

பெருமையாக இருக்கிறது உங்கள் கருத்து கண்டு...........

அடியேனின் வாழ்த்துகள்....................... :)

உண்மையிலேயே இது என்ன்னுடைய சிந்தனை அல்ல அண்ணா...! பலரின் கருத்தாடலை உள்வாங்கியதன் வெளிப்பாடுதான்....!

ஆனால் சரியான இடத்தில் சரியான நேரத்தில் கொண்டுவந்து சேர்த்து இருக்கிறேன் என்கின்ற மகிழ்ச்சிதான் இப்போது ஏற்படுகிறது..! நண்றி.! :wink: :P

நாம் ஒரு பொருளை தேடித் திரியும் போது

யார் கொண்டு வந்து கொடுத்தாலும்

முதலில் அவர்களுக்குத்தான் நாம் நன்றி சொல்கிறோம்.

இல்லையா?

அதன் பின்னர்தானே

அது யார் தயாரித்தது என்று கூட யோசிக்கிறோம்.

சில வேளை அது கூட தேவையற்றதாக ஆகி விடுகிறது இல்லையா?

கம்பர் சொன்ன ஒரு வார்த்தையை வைத்து

சுகி சிவம் பேசினாலும்

நாம் ஏற்றுக் கொள்வது சுகி சிவத்தைத்தானே?

அது மாதிரித்தான் தல இது!

என் பாராட்டுகள் உங்களுக்கு..................

உங்கள் கருத்தை தனி மடல் வழி

தனமதி அவர்களுக்கு அனுப்பினேன்.

எனக்கு வந்த பதிலையும் பகிர்ந்து கொள்கிறேன்.

நண்றி மட்டும்தான் இப்போ அஜீவன் அண்ணாவை பார்த்து சொல்ல வருகிறது...! :) (ஆனந்த கண்ணீர்) :wink: :P

நண்றி மட்டும்தான் இப்போ அஜீவன் அண்ணாவை பார்த்து சொல்ல வருகிறது...! :) (ஆனந்த கண்ணீர்) :wink: :P

எது நல்லதோ

அதை பாராட்ட ஒரு போதும் தயங்கக் கூடாது.

எனக்கும் ஆனந்தம் தலா!

மெழுகுவர்தீயில் பங்கு கொண்ட கலைஞர்கள் கதையை ஒட்டியவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

யதார்த்தத்தை சற்றும் மேவாத (நடிப்பு) பங்கு பற்றல்.

சிறப்பான தேர்வொன்றை இயக்குனர் செய்திருக்கிறார்.

அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.