Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்திற்கான நிகழ்ச்சி நிரல் முறியடிப்பதற்கான முயற்சிகள்

Featured Replies

யுத்தத்திற்கான நிகழ்ச்சி நிரல் முறியடிப்பதற்கான முயற்சிகள்

-நிலாந்தன்-

ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல்கள் அண்மைக்காலங்களாக ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகள் மற்றும் பழிவாங்கலாக அல்லது பதிலடியாக நிகழும் தாக்குதல்களும் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றன. ஆட்கொலைகளுக்கு பதிலாகச் செய்யப்படும் ஆட்கொலைகளைத்தவிர நிலவும் மென்தீவிர யுத்த களத்தில் ஒரு தரப்பினது அதாவது அரசாங்கத் தரப்பினது நடவடிக்கைகள் அண்மை வாரங்களாக ஒப்பீட்டளவில் குறைவாக காணப்படுகின்றன. இதில் அண்மையில் வாகனேரியில் நிகழ்ந்த ஒரு மோதல் விதிவிலக்காக காணப்படுகிறது.

களத்தில் நிகழ்பவற்றை வைத்துப்பார்த்தால் கொழும்பில் ஏதோ ஒரு கொள்கைத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. ஒருபுறம் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கும் தாக்குதல்கள் போன்ற ஒரு முழுத்தீவிர யுத்தத்தை தூண்டும் நடவடிக்கைகள் தணிக்கப்பட்டிருக்கின்றன. இன்னொருபுறம் இறுதித் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான அனைத்துக்கட்சி முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதான ஒரு தோற்றம் அரசாங்கத்தால் காட்டப்பட்டு வருகிறது. இது ஒரு இருமுனை அணுகுமுறை. ஒருபுறம் ஒரு முழுத்தீவிர யுத்தத்துக்கு தான் பொறுப்பில்லை என்று காட்ட முனையும் அரசாங்கம் இன்னொரு புறம் ஒரு இறுதித்தீர்வை கண்டுபிடிக்க ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து முயல்வதாக ஒரு தோற்றத்தைக்காட்டுகிறது. அதாவது மொத்தத்தில் அரசாங்கம் தான் சமாதானத்துக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இதற்கு காரணம் என்ன?

பொதுவாக, மூன்று காரணங்களை ஊகிக்க முடியும். முதலாவது, இந்திய அரசின் அழுத்தம் மற்றும் உதவி வழங்கும் நாடுகளின் அழுத்தம். இரண்டாவது, விடுதலைப் புலிகளின் எதிர் நடவடிக்கைகள். மூன்றாவது, நிலவும் மென்தீவிர யுத்தமானது கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதல், பாரமி குலதுங்க மீதான தாக்குதல் போன்ற வடிவங்களில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் பரவமுடியும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டிருப்பது.

இதில் முதலாவதின் படி சியாம் சரணின் வருகை எனப்படுவது ஒரு இறுதித் தீர்வுக்கான உருவரைவை கண்டு பிடிக்குமாறு மஹிந்தவை தூண்டும் நோக்கிலானது என்று நம்பப்படுகிறது. முதலில் அரசாங்கம் சமாதானத்தில் தனக்குள்ள ஈடுபாட்டை நிரூபிப்பதோடு தன்னிடமுள்ள தீர்வின் உருவரைவை காட்ட வேண்டும் என்றும் அப்பொழுதுதான் புலிகளாகத் தொடங்கக் கூடிய ஒரு முழுத்தீவிர யுத்தத்தில் புலிகளின் தரப்பு நியாயத்தை பலமிழக்கச் செய்யலாம் என்றும் இந்தியாவும் அமெரிக்காவும் திட்டவட்டமாக நம்புகின்றன. அதோடு உதவி வழங்கும் நாடுகள் உதவிகளை நிறுத்துவது என்பதை அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை பிரயோகிக்கும் ஓர் உத்தியாக பயன்படுத்தக் கூடும் என்ற ஒரு சூழல் காணப்படுகிறது. எனவே தனது மஹிந்த சிந்தனைகளுக்குள்ள வரையறைகளை சுமார் ஏழுமாதகால ஆட்சியின் முடிவில். மஹிந்த உணரத்தொடங்கியிருப்பதாக தெரிகிறது. இது முதலாவது.

இரண்டாவது, புலிகளின் எதிர் நடவடிக்கைகள். இதில் ஒருபுறம் அரசாங்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளுக்கு எதிராக புலிகளும் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளில் இறங்கினார்கள். இன்னொருபுறம் ஆழ ஊடுருவும் படையணியின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு புலிகள் இரண்டு எதிர் நடவடிக்கைகளை எடுத்தார்கள். இதன்படி முதலாவதாக புலிகளின் சிறப்புப் படையணிகள் காடுகளுக்குள் இறக்கப்பட்டன. இரண்டாவதாக புலிகள் தமது மக்கள் படை கட்டமைப்பை கொண்டு தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தடுப்பு வேலிகளை அமைத்து வருகிறார்கள். இவ்விரு நடவடிக்கைகளும் ஆழ ஊடுருவும் படையணியை நெருக்கடிக்குள்ளாக்கியிருக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.