Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அடை மழை; மினி புயலினால் 25 வீடுகள் சேதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழில் அடை மழை; மினி புயலினால் 25 வீடுகள் சேதம்
திங்கட்கிழமை, 13 மே 2013 09:43
-என்.நவரத்தினராசா,-கு.சுரேன்.-சுமித்தி தங்கராசா 
 
யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை  வீசிய மினி புயல் காற்று காரணமாக மல்லாகம், கோணப்புலம் முகாமிலுள்ள 25 இற்கும் மேற்பட்ட தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன. 
 
மரங்கள் முறிந்து விழுந்த நிலையிலும காற்றினால் கூரைகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும் இத்தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன. 
 
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையிலிருந்து 
இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. 
 
இதேவேளை, யாழ். மாவிட்டபுரம், மாவை கலட்டி பகுதியில் பனை மரமொன்று முறிந்து வீடொன்றின்  மீது வீழ்ந்துள்ளது. 
 
இந்த அசம்பாவிதங்களினால் காயமடைந்த 3 பேர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
கோணப்புலம் முகாமில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சூசைதாசன் சுமதி (வயது 42) சூசைதாசன் சுயந்தன் (வயது 13) மற்றும் 
மாவை கலட்டி பகுதியைச் சேர்ந்த தி.சதீஸ்வரன் (வயது 43) ஆகியோரே காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
 
இது இவ்வாறிருக்க புன்னாலைக்கட்டுவன், சூறாவத்தை பகுதியில் இடி வீழ்ந்துள்ளது.  அரியாலையிலுள்ள நாவலடி, புங்கன்குளம், பூம்புகார், ஆகிய பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/66912------25---.html  
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
யாழில் மாசேனன் புயல்தாக்கத்தால் 200 ற்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!
மே 14, 2013
 யாழ்.மாவட்டத்தில் மாசேனன் புயல் தாக்கத்தின் காரணமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை நேற்று முற்றாக பாதிக்கப்பட்ட அதே வேளை, பல அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

 

இவ்வனர்த்தங்கள் காரணமாக 180 பேர்வரை இடம்பெயர்ந்துள்ளதுடன், 200 மேற்பட்ட வீடுகள் சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவால் நேற்று மாலை 4 மணிவரைக்கும் கணக்கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே மேற்படி தகவல் தெரியவந்துள்து.

நேற்று மாலை 4 மணியளவில் அனர்த்த முகாமைத்துவத்தினால் எடுத்த கணக்கெடுப்பின்படி மல்லாகம் மற்றும் கொல்லங்கலட்டி பகுதியில் உள்ள முகாங்களில் வாழ்ந்த 42 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் இடம்பெயர்ந்த அந்தந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்களுக்கு உடனடி தேவையான உணவுகள் மாவட்டச் செயலகத்தின் ஊடாக அந்தந்த பிரதேச செயகங்கள் ஊடக வழங்கப்பட்டுள்ளது. மேலும் யாழ்.மாவட்ட செயலவகத்தின் தற்காலிக இருப்பில் இருந்த தகரங்கள், தரப்பாள்கள் என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலதிக உதவிகள் வழங்குவரற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

அதே போன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகள் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலக தீவுப்பகுதி, சங்கானை, தெல்லிப்பளைப் பகுதிகளிலேயே பெரும்பாலன பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 8 வீடுகள் முற்றுமுழுதாக சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மேலும் 200 ற்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்டைமானாறு பெரியமலை கடற்பாகம் எட்டாம் பகுதியில் நேற்று மீன்படிக்கச் சென்ற மீனவர்கள் இருவரை மின்னல் தாக்கியுள்ளது. இவற்றில் சிவபாலன் என்பவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவருடன் தொழிலுக்குச் சென்ற தங்கவேலாயுதம் அருளாந்தம் (வயது 18) என்பவர் கடலில் தொலைந்துள்ளார். காணமல் போனவரை மீட்கும் பணிகளில் கடற்படையிரும் ஏனைய மீளவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோன்று யாழில் நடைபெற்ற பல்வேறுபட்ட அனர்த்தம் காரணமாக 6 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் யாழ்.போதனா வைத்திய சாலையிலும், 2 பேர் தெல்லிப்பளை ஆதர வைத்திய சாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் அனர்தங்கள் இடம்பெற்ற பகுதிகளை நான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளேன். அங்கிருந்த மக்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்து அக்குறைபாடுகளுக்கு உரிய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

jaffan%20murukeesan%20puill.jpg

jaffan%20murukeesan%2002.jpg

jaffan%20murukeesan%2001.jpghttp://www.sankathi24.com/news/29537/64/200/d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.