Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகுவாரா?: முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு

Featured Replies

பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகுவாரா?: முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு

Written by tharsan   // May 14, 2013   //

 

manmohan-300x200.jpgநிலக்கரி சுரங்க ஊழல், ரெயில்வே முறைகேடு ஆகியவற்றுக்கு பொறுப்பு ஏற்று மத்திய மந்திரிகள் அஸ்வினிகுமார், பவன்குமார் பன்சால் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இருவரையும் காப்பாற்ற பிரதமர் மன்மோகன்சிங் தீவிரமாக முயன்றார். ஆனால் சோனியா வற்புறுத்தியதால் 2 மந்திரிகளும் பதவியை பறிகொடுக்க நேரிட்டது.

2 மந்திரிகள் விலகல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் அதை மறுத்தனர்.

மந்திரிகளை ராஜினாமா செய்ய வைக்கும் முடிவை பிரதமரும், சோனியாவும் சேர்ந்தே எடுத்ததாக விளக்கம் அளித்தனர். என்றாலும் மன்மோகன் சிங்குக்கும், சோனியாவுக்கும் இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள சிக்கல் இன்னும் தீரவில்லை. வரும் நாட்களில் இந்த சிக்கல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஜூலை மாதம் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது எதிர்க்கட்சிகள் மீண்டும் பிரதமரை பதவி விலக கோரி போராட்டங்கள் நடத்தும்.

இது காங்கிரசுக்கு நெருக்கடியை அதிகரிக்க செய்யும் என்று கருதப்படுகிறது. இந்த விஷயத்தில் தான் தனிமைப்படுத்தப்படுவதாக மன்மோகன்சிங் வருத்தப்படுகிறார். எனவே தன்னை சந்திக்க வரும் மத்திய மந்திரிகளிடம் அவர் அதிருப்தியை வெளியிட்டு வருகிறார்.

இது காங்கிரஸ் உள்வட்டா ரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பதவி விலகிய சட்ட மந்திரி அஸ்வினி குமாருக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கை ஒன்றை வெளியிட திட்டமிட்டார். ஆனால் சோனியா அதை தடுத்து விட்டார்.

இதனால் பிரதமருக்கு சோனியா மீதான அதிருப்தி நீடித்தப்படி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு சாரார் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக செயல்பட தொடங்கியுள்ளனர். மன்மோகன்சிங்கால் காங்கிரஸ் மீது நாட்டில் மக்களிடம் எதிர்ப்பு அலை வீசுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.

மன்மோகன்சிங்கை முன்நிறுத்தி தேர்தலை சந்தித்தால் தோல்விதான் ஏற்படும். எனவே அவரை உடனே பிரதமர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறி வருகிறார்க்ள. காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள எதிர்ப்பு மற்றம் சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை காரணமாக பிரதமர் மன்மோகன்சிங் பதவிக்கு ஆபத்து அதிகரித்துள்ளது.

இதை உணர்ந்துள்ள சோனியாவும், மாற்று ஏற்பாடாக என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறார். ஆனால் மன்மோகன் சிங்குக்கு பதில் பிரதமர் பதவிக்கு யாரை கொண்டு வரலாம் என்பது சோனியா முன் எழுந்துள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.

கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டத்தில் இதுபற்றி பேசப்பட்டதாக தெரிகிறது. குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒரு சாரார் கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி பெயர் பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் கிறிஸ்தவர் என்பதால் வடமாநிலங்களில் காங்கிரசுக்கு சரிவு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு ப.சிதம்பரம், மீராகுமார், ராகுல்காந்தி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இவர்களை பிரதமராக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதால் இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அடுத்து வரும் 2 மாதங்களில் பிரதமர் மன்மோகன் சிங் பதவிக்கு நெருக்கடி வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சோனியா தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

மன்மோகன்சிங் பதவி விலகும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் சோனியா அதிரடியாக நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. இதனால் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

http://news.tamilstar.com/archives/33810#more

 

பொதுநலவாய கூட்டத்திற்கு முன்பாக முடிவெடுத்தால் நல்லதல்ல. அதன்பின்னர் என்றால் தமிழ் நாட்டில் காங்கிரசை முழுவதாக துடைக்கக்கூடிய வாய்ப்புக்களைத்தரும் 



அ.தி.மு.க,வும்  தி.மு.க வும் இணைந்து காங்கிரசை ஓட்டினால் மிகவும் நல்லது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.