Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 3 பேர் சாவு 18 பேர் காயம்

Featured Replies

15th May 2013

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது கிச்சநாயக்கன்பட்டி. இங்கு மீனாட்சி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு சுற்று பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஒரு அறையில் தொழிலாளர்கள் பென்சில் வெடிக்கு முனை மருந்து தடவி கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று பட்டாசில் தீப்பிடித்தது.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ அருகில் இருந்த மேலும் 2 அறைகளுக்கும் பரவியது. அங்கு குவிக்கப்பட்டு இருந்த பட்டாசுகளும் வெடித்தன. பட்டாசுகள் தொடர்ந்து வெடிப்பதால் 3 அறைகளிலும் தீ கொளுந்து விட்டு எரிகிறது. தீ விபத்து ஏற்பட்டதும், உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியே ஓடிவந்தனர். சிலர் தீயில் சிக்கி தவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகாசி, வெம்பக் கோட்டை, சாத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து கொண்டே இருப்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது 2 பேர் உடல் கருகி பிணமாக கிடந்தனர்.

போலீஸ் விசாரணையில் விலாம்பட்டி காமராஜர் காலனியை  சேர்ந்த மாரியப்பன் (வயது 38), சின்னபொட்டல்பட்டியை சேர்ந்த சின்னகருப்பாயி (28) என்பது தெரியவந்தது. தீ விபத்தில் 3 அறைகளும் இடிந்து தரைமட்டமானது. இந்த தீ விபத்தில் 18 பேர் உடல் கருகினர். அவர்களை போலீசாரும், தீயணைப்பு படையினரும் மீட்டனர். உடல் கருகிய அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

மாரியப்பன் (11), சங்கர், மனோஜ்குமார் (1), கார்த்திக் (28), ரவிச்சந்திரன், காளியம்மாள் (50), சமுத்திரம் (42), பெருமாள் (29), பரமசிவம் (55), நாகராஜன் (57), சின்னபாண்டி (44), பாண்டியன் (35) உள்பட 18 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பரமசிவம் என்பவர் இன்று மதியம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

மேலும் பலரது நிலைமை மோசமாக உள்ளது. அவர்களுக்கு மருத்துவர்கள்  தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர்  ஹரிகரன், ஆர்.டி.ஓ. ரங்கன், தாசில்தார் மைக்கேல் ராஜ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்து குறித்து மாரநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

http://www.newsalai.com/details/sivakasi-fire-accident-death-toll-rises-.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.