Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்களால் உண்மைக்கு சமாதி கட்ட "ஆசியான்' என்ற வாய்ப்பான மேடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொய்களால் உண்மைக்கு சமாதி கட்ட "ஆசியான்' என்ற வாய்ப்பான மேடை

` தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் ("ஆசியான்' அமைப்பின்) பிராந்திய குழுமக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கையும் பங்காளராகக் கலந்து கொள்வதற்கு அனுமதிப்பது என்ற முடிவை ஆசியான் அமைப்பு எடுத்திருப்பதாக அந்த அமைப்பின் சார்பில் மலே ஷிய வெளிவிவகார அமைச்சர் சயீட் ஹமீட் அல்பர் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

புரூணை, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியன்மார் (பர்மா), பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பத்து தென்கிழக்காசிய நாடு கள் ஆசியான் அமைப் பில் உள்ளன.

ஆசியான் அமைப்பின் பிராந்தியக் குழுமத்தின் உறுப் புரிமை ஆசியானில் அங்கம் வகிக்கும் பத்து நாடுகள் உட் பட 26 நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்தது. ஆசி யானுடன் கலந்துரையாடல் தொடர்பை வைத்திருக்கும் இந்தப் பிராந்திய சங்கத்தில் அவுஸ்திரேலியா, கனடா, சீனா, கிழக்குத் திமோர், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், மொங்கோலியா, நியூஸிலாந்து, வட கொரியா, பாகிஸ்தான், பப்புவா நியூகினி, ரஷ்யா, தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இருபத்தியாறாவது நாடாக பங்களாதேஷûம் அதைத் தொடர்ந்து தற்போது 27 ஆவது நாடாக இலங்கையும் அனுமதிக்கப்பட்டிருக்கின் றன.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மைக் காலத்தில் மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடு களுக்கு ஓடித்திரிந்ததன் பெறுபேறாகவே இந்த வாய்ப்பு இலங்கைக்குக் கிட்டியிருக்கின்றது.

பிற விடயங்களை விட, இலங்கைத் தேசிய இனப் பிரச்சினை விவகாரத்தில் தமிழர் விடயத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கிழக்கு உலகிலும் இலங்கை அரசு சார் புப் பிரசாரத்தை முன்னெடுக்கவே இந்த ஆசியான் அமைப்பு ஊடான நுழைவு என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

மேற்குலக நாடுகள் பலவற்றில் புலிகளுக்கு எதிராக முழு மூச்சில் பிரசாரம் நடத்தி, அதன் பயன்களை பலாபலன் களை பெற்றுக்கொள்ளும் இலங்கை அரசுக் கட்டமைப்பு அந்த வேலையைக் கிழக்குலக நாடுகளுக்கும் இப்போது முழு அளவில் விஸ்தரிக்க முயலுகின்றது.

புலிகளின் சர்வதேசக் கடல் போக்குவரத்து, கப்பல் நிறு வனக் கட்டமைப்பு, ஆயுதக் கொள்வனவு, ஆயுதக் கடத் தல், நிதிப் பரிமாற்றங்கள் எல்லாம் கிழக்கில் உள்ள ஆசிய நாடுகளையும் அதைச் சூழ்ந்த பிரதேசங்களையும் மைய மாக வைத்தே நடைபெறுகின்றன என்று கருதும் இலங்கை அரசுத் தலைமை, அந்தச் செயற்பாட்டை உடைப்பதற்கு இந்தப் பிரதேச நாடுகளின் கட்டமைப்புக்குள் ஊடுருவிச் செயற்படுவது அவசியம் எனக் கருதி, அதற்காகத் திட்ட மிட்டுப் பணியாற்றுகிறது.

அதன் பெறுபேறாகவே ஆசியான் அமைப்பின் பிராந் தியக் குழுமக் கூட்டத்துக்குள் நுழையும் வாய்ப்பு இலங் கைக்குக் கிட்டியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆசியான் அமைப்பு ஒருபுறமிருக்க, ஆசியானின் பிராந் தியக் குழுமக் கூட்டம் வேறு விதமானது. அந்தக் கூட்டம் ஆசியானைப் போல தீர்மானங்கள் எடுத்து முடிவுகளை நடைமுறைப்படுத்துகின்ற கட்டமைப்பு அல்ல. பிராந்தி யக் குழுமக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஆசி யான் நாடுகளுடன் சேர்ந்து தங்களது பிராந்திய அரசியல், சர்வதேச உறவுகள், தொடர்பாடல்கள் குறித்து பகிரங்க மாகத் தங்களுக்குள் கருத்துப் பரிமாறவும், கருத்துக்களை முன்வைக்கவும் வாய்ப்பான ஓர் அரங்கே இந்தப் பிராந்தியக் குழுமம் ஆகும்.

புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்துத் தான் மேற்கொள்ளும் பிரசாரம் கிழக்குலகுக்குச் சரியாகப் பதியப் பொருத்தமான அரங்கு இந்தப் பிராந்தியக் குழுமம்தான் என்று கருதி காய்களை நகர்த்தியிருக்கின்றது இலங்கை.

இனி அங்கு நடைபெறும் கூட்டங்களிலும், அமர்வு களிலும் தனது புலி எதிர்ப்புப் பிரசாரத்தை இலங்கை முழு அளவில் முன்னெடுக்கும். இலங்கை இனப்பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு தமிழர்களுக்கு நியாயம் செய்வதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் வெட்டிப் பிடுங்கித் தான் ஆற்றி வருவதாக அது கதை அளக்கும். இலங்கை இனப் பிரச்சினை விவகாரம் தொடர்பான யதார்த்தமான உண்மை களை பொய்களால் மூடி மறைத்து சமாதி கட்டி, புனை கதைக் கட்டுமானத்தைப் பெரும் கோட்டை போல ஸ்தாபிப்பதற்கு இலங்கை அரசுத் தரப்புக்கு கிழக்குலகிலும் பொருத்தமான மேடை கிடைத்திருக்கின்றது.

அரசுக் கட்டமைப்பு என்ற வழியைப் பெற்றிராத தமிழர் தரப்புக்கு இத்தகைய பொய்ப் பிரசாரங்களை அம்பலப் படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கள், அரங்குகள், மேடைகள் குறைவு. இருந்தாலும்கூட வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களின் அமைப்புகள், நிறுவனங்கள் ஆசியான் ஊடான இலங்கையின் ஊடுருவலைச் சரியாக அடையாளம் கண்டு, உரிய எதிர்ப்பிரசாரங்களை முன்னெடுக்கத் தம்மால் இயன்றவரை தயாராக வேண்டும்.

தமிழர் தாயகத்தில் தென்னிலங்கைச் சிங்கள அரசு காலங் காலமாகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களையும், அடிப்படை உரிமை மறுப்புக் களையும், அடக்கு முறைகளையும், நெருக்குவாரங்களை யும் உரிய முறையில் அம்பலப்படுத்துவதன் மூலம் தென் னிலங்கை அரசு சர்வதேச ரீதியில் முன்னெடுக்கும் பொய்ப் பிரசாரங்களை முறியடிக்க முடியும்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.