Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமிய உலகை அழிக்க இஸ்ரேலை பயன்படுத்தும் அமெரிக்கா

Featured Replies

இஸ்லாமிய உலகை அழிக்க இஸ்ரேலை பயன்படுத்தும் அமெரிக்கா

[30 - July - 2006] [Font Size - A - A - A]

* ஹிட்லரிடமிருந்து பாதுகாத்து உயிருக்கு உத்தரவாதம் வழங்கிய சமூகத்தையே கொன்றொழிக்கிறது இஸ்ரேல்

-எம்.ஏ.எம்.நிலாம்-

உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்றொரு நாடு இடம்பெறாத கால கட்டமிருந்தது. சர்வாதிகாரி ஹிட்லரால் எஹுதிகள் என வர்ணிக்கப்பட்ட, இன்று இஸ்ரேலியர் எனக் கூறப்படும் மனித கூட்டத்தைப் பூண்டோடு ஒழிப்பதில் ஹிட்லர் தனது முழுப் பலத்தையும் பாவித்த வரலாறு மறக்கப்பட முடியாததொன்றாகும். நாதியற்று, நாடிழந்து தவித்த இந்தச் சிறிய கூட்டத்துக்கு வாழ்வளித்தவர்கள் முஸ்லிம்களே. உயிர்காத்து வாழ்வளித்தவர்களுக்கு இஸ்ரேல் இன்று செய்யும் "நன்றிக்கடன்" மனித சமுதாயத்தால் மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும். சியோனிஸ வாதிகளான இந்த இஸ்லாத்தின் விரோதிகள் முஸ்லிம் உலகை ஆக்கிரமித்து அழித்தொழிப்பதில் கங்கணம் கட்டிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உலகின் முதல் பயங்கரவாத நாடான அமெரிக்காவும், மனித குல விரோதியாக நோக்கப்படுகின்ற ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷும் அவரது தந்தை புஷ்ஷைப் போன்றே இஸ்லாமிய உலகை ஆக்கிரமிப்பதிலும் அழித்தொழிப்பதிலுமே கண்ணாக உள்ளார். அடாவடித்தனங்கள், அட்டூழியங்களுக்கு பெயர் போயுள்ள புஷ் ஆட்சி இன்று உலகப் பொலிஸ்காரனாகி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அமெரிக்க மக்கள் அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தான் புஷ்ஷைத் தெரிவு செய்தனர். முழு உலகுக்கும் தானே தலைவன் என்ற எண்ணத்தில் புஷ் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய உலகின் மீது கண் வைத்திருக்கும் மேற்குலக நாடுகள் பல இதற்குத் துணை போகின்றன. இஸ்ரேலை தன் கையாளாக வைத்துக் கொண்டு மனித குலத்தைக் கொன்றொழிக்கும் மிருகத்தனத்தில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதை சர்வதேச நாடுகள் கைகட்டி வாய்பொத்திப் பார்த்துக் கொண்டிருப்பது பெரும் வேதனை தரக் கூடியதாகவே உள்ளது.

இஸ்ரேல் இன்று ஆக்கிரமிப்பு நாடாக மாறி காட்டுமிராண்டித் தனத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இரத்த வெறி பிடித்த இஸ்ரேல் மனித உயிர்களைப் பறித்தெடுக்கும் போதெல்லாம் அமெரிக்க வல்லரசு அதற்குப் பின்னணியில் இருந்து கொண்டு ஊக்கமளித்து வருகின்றது. காஸாவிலும், லெபனானிலும் கடந்த ஒருவாரகாலமாக விமானத் தாக்குதலை நடத்தி 300 க்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்துள்ளது. இவர்களில் பெண்களும் சிறார்களும் கூட உள்ளடங்குகின்றனர். நடப்பது அநீதி என்று தெரிந்தும் கூட அமெரிக்கா இஸ்ரேலுக்கு தட்டிக் கொடுப்பதன் மூலம் தனது இஸ்லாமிய விரோத வெறித்தனத்தையே காண்பிக்கின்றது.

வல்லரசு நாடு என்ற அடிப்படையில் ஐ.நா.வில் தனக்கிருக்கும் வீட்டோ அதிகாரத்தை அமெரிக்கா அடிக்கடி நினைத்த போதெல்லாம் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றது. இந்த வீட்டோ அதிகாரத்தை இஸ்ரேலைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்துவதை ஐ.நா.வின் ஏனைய உறுப்பு நாடுகள் கண்டு கொள்ளாதிருப்பது கண்டிக்கத்தக்கதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

இஸ்லாமிய உலகுக்கும், மனித குலத்துக்கும் அக்கிரமங்களையும், அநீதிகளையும் புரியும் இஸ்ரேல் ஈவிரக்கமின்றி அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கின்ற போதெல்லாம் அதனைத் தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதெல்லாம் அமெரிக்கா தன்னிடமுள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலைப் பாதுகாத்து மேலும் உற்சாகப்படுத்தும் கைங்கரியத்திலீடுபடுகின்றது.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இஸ்லாமிய உலகை ஏமாற்றி இஸ்ரேல் என்ற நாட்டை மத்திய கிழக்கில் வேரூன்றச் செய்தது அமெரிக்காவே ஆகும். தனது நயவஞ்சகத்தின் மூலம் மத்திய கிழக்கின் முஸ்லிம் நாடுகளை ஒன்றோடொன்று மோதவிடும் ஒரு கைங்கரியத்திலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மூளையை நன்றாகப் பயன்படுத்தி வருகின்றது. இஸ்ரேல் அமெரிக்காவின் சட்ட விரோத பிள்ளை (ஹராத்தில் பிறந்தது) யாகவே உலகம் கருதுகின்றது.

அமெரிக்கா, நீதி, நியாயம், மனிதாபிமானம், மனித குலத்துக்குப் பொதுவான சட்டம் எதனையும் மதிக்காது தானே சட்டமியற்றுபவர் தன் விருப்பப்படியே உலகம் இயங்க வேண்டுமெனக் கருதுகின்றது. கட்டாயப்படுத்துகின்றது.

இத்தகைய சர்வாதிகாரியிடம் உலகப் பொது மன்றமான ஐக்கிய நாடுகள் சபை ஒரு வீட்டோ அதிகாரத்தை வழங்கியிருப்பது நீதியானதுதானோ என்று சிந்திக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. ஒரு பைத்தியக்காரனிடம் ஆயுதத்தைக் கொடுத்தது போன்றதே இந்த அமெரிக்காவிடம் வீட்டோ அதிகாரம் கொடுத்திருப்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வீட்டோ அதிகாரமானது உலக நாடுகள் சபையான ஐ.நா.வை அதிகாரமற்ற கைப்பொம்மை சபையாக மாற்றியுள்ளது.

இத்தகையதொரு சபையிடமிருந்து நீதியை, நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.இஸ்ரேலின் அடாவடித்தனத்தை ஆக்கிரமிப்பை, மனிதப் படுகொலைகளைக் கண்டிக்க முடியாது. தடுத்து நிறுத்த முடியாத நிலையில் ஐ.நா. தள்ளப்பட்டுள்ளது. இதற்கான காரணம் அமெரிக்கா தான்.

எவ்வளவு காலத்துக்குத் தான் ஐ.நா. அக்கிரமச் செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது.

ஆக்கிரமிப்புகளுக்கும் மனித குல வீழ்ச்சிக்கும் பயன்படக் கூடிய அநாகரிகமானதொரு வீட்டோ முறைக்கு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டிய அவசியம் உருவாகி வருகிறது. இது விடயத்தில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் உலக நாடுகள் ஒருமித்துக் குரல் எழுப்ப வேண்டிய தருணம் இதுவாகும். உலக நாடுகள் இதனைக் கவனத்திலெடுக்காமல் கண்களை மூடி தொடர்ந்து மௌனம் சாதிக்குமானால் மிகப் பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.

http://www.thinakkural.com/news/2006/7/30/...es_page7424.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.