Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆன்லைன் டிரேடிங் போன்றதுதான் ஐ.பி.எல். சூதாட்டம்...புக்கிகளின் வழக்கறிஞர் பலே பேட்டி

Featured Replies

ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சைகள் வெளிவரத் தொடங்கி பரபரப்பு பற்றியதும், புக்கிகள் மற்றும் சூதாட்டக்காரர்களை துரத்தித் துரத்திக் கைதுசெய்தது காவல் துறை. ஆனால், கைதுசெய்யப்பட்ட வேகத்திலேயே புக்கிகளும் சூதாட்டக்​காரர்களும் ஜாமினில் வந்துவிட்டனர். இவர்கள் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளன? எந்த அடிப்​படையில் அவர்கள் ஜாமின் பெற்றுள்ளனர் என்பது குறித்து வழக்கறிஞர் அபுடு​குமாரிடம் பேசினோம். இவர்தான் பிரஷாந்த் மற்றும் ஹரிஷ் பஜாஜ், சுனில் பஜன்லால் உள்ளிட்ட எட்டு பேருக்கு ஜாமின் பெற்றுத் தந்தவர்.

 ''உங்கள் கட்சிக்காரர்கள் மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்​டவர்கள் என்கிறார்களே?''

''மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பது மிகப் பெரிய விஷயங்கள். மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம். அணியின் 11 ஆட்டக்​காரர்களும் ஒத்துழைத்தால்தான் மேட்ச் ஃபிக்ஸிங் சாத்தியம். இது நடக்கக்​கூடிய காரியமா? அதுபோல், ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பதும் சாதாரண விஷயம் இல்லை.

குறிப்பிட்ட ஆட்டக்காரர் 14 ரன்களை விட்டுத்தருவேன் என்று ஒப்புக்​கொண்டால்கூட, எதிர் அணியின் பேட்ஸ்மேன் அடித்தால்தானே அப்படி நடக்கும்? இதையெல்லாம் சென்னையில் கைதாகியுள்ள எனது கட்சிக்காரர்கள் செய்யவில்லை. இவர்கள் தங்களுக்குள் ஒரு அணியாக சேர்ந்துகொண்டு எந்த அணி வெற்றிபெறும், 10 ஓவர்களுக்கு எத்தனை ரன்கள் எடுக்கப்படும் என்று சூதாடியவர்கள். அவர்களிடம் பேசிப் பார்த்தவரை, இது வழக்கமான ஒன்றுதான் என்றனர். இப்போது ஸ்ரீசாந்த் விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதால், இவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.''

''உங்கள் கட்சிக்காரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்​டதாக நீங்களே ஒப்புக்கொள்ளும்போது, எந்த அடிப்​படையில் அவர்களுக்கு ஜாமின் தாக்கல் செய்தீர்கள்?''

''சூதாடியதற்காக போடப்படும் வழக்குகள் அனைத்துமே ஜாமினில் வரக்கூடியவைதான். மிகவும் கடுமையான தண்டனைகளும் அபராதங்களும் இந்தக் குற்றத்துக்கு இதுவரை வரையறுக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால், சூதாடியவருக்கு அதிகப்பட்சமாக ஒரு மாதம் சிறைத் தண்டனைதான் வழங்க முடியும். புக்கிக்கு இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கும். மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை. எனது கட்சிக்காரர்கள் யாரும் அவற்றில் ஈடுபடவில்லை. இவர்கள் புக்கிகளாகவும் சூதாட்டக்காரர்களாகவும் இருந்தவர்கள்தான். 

சூதாட்டக்காரர்கள், புக்கிகள் ஆகியோர் மீது தமிழ்நாடு கேமிங் ஆக்ட் என்ற சட்டத்தின்படியும் தமிழ்நாடு மாநகரக் காவல் சட்டத்தின்படியும் வழக்குப் பதிவுசெய்யலாம். சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில் சூதாடுபவர்கள் மீது தமிழ்நாடு மாநகரக் காவல் சட்டத்தின்படியும், புறநகர்கள் மற்றும் சிற்றூர்களில் சூதாடுபவர்கள் மீது தமிழ்நாடு கேமிங் ஆக்ட் என்ற சட்டப் பிரிவின் கீழும் வழக்குப் பதிய வேண்டும். ஆனால், சென்னையில் கைதுசெய்யப்பட்ட 10 பேர் மீதும் காவல் துறை அவசரகதியில் தமிழ்நாடு கேமிங் சட்டப் பிரிவின்படி முதலில் வழக்குப் பதிவுசெய்திருந்தது. நாங்கள் இதை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய பிறகே, இப்போது அவசர அவசரமாக சரியான பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

காமன் கேமிங் ஹவுஸ் என்று சொல்லப்படுகிற கிளப்களில் பணம் வைத்து சூதாடுகிறவர்களை மட்டுமே நமது சட்டம் குற்றவாளி என்கிறது. இப்போது, சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ள சூதாட்டக்காரர்கள் மற்றும் புக்கிகள் யாருக்கும் இந்த விதிமுறை பொருந்தாது. இவர்கள் ஆன்லைன் மூலமாகவும் செல்போன்களைப் பயன்படுத்தியும் சூதாடியவர்கள். இது ஏறத்தாழ ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் டிரேடிங்கைப் போலத்தான். இப்போது இருக்கிற சட்ட நடைமுறைகளின்படி இவர்களைக் குற்றவாளிகள் என்று நிரூபிக்க முடியாது. இதை நீதிமன்றத்தில் நாங்கள் எடுத்துரைத்ததன் அடிப்படையில்தான் நீதிபதி ஜாமின் வழங்கினார்.''

''இவர்கள் அனைவரும் பண மோசடி செய்துள்ள​தாகக் கூறப்படுவது பற்றி?''

''அப்படி இதுவரை எந்தப் புகாரும் எழவில்லை. அப்படி எழுந்தாலும், அதற்காக 420 பிரிவு வழக்கு தனியாகப் பதிவுசெய்ய முடியாது. சூதாடிய குற்றத்துக்காக தமிழ்நாடு மாநகர காவல் சட்டத்தில் கைதுசெய்யப்படுபவர்களின் பண மோசடி குறித்து விசாரிக்க, அதிலேயே 51-வது பிரிவு பிரத்யேகமாக உள்ளது. இவர்கள் பண மோசடியில் ஈடுபட்டிருந்தால், அந்தப் பிரிவின்படியே விசாரிக்கவும் தண்​டனை அளிக்கவும் முடியும். இதை நாங்கள் நீதிமன்றத்தில் எடுத்துவைத்ததும் நீதிபதியும் ஏற்றுக்கொண்டு, இவர்கள் மீது பண மோசடி வழக்கைத் தனியாகப் பதிவுசெய்யக் கூடாது என்றும் அப்படிச் செய்திருந்தால் ரத்துசெய்யும்படியும் உத்தரவிட்டார்.''

''அப்படியானால் உங்களுடைய கட்சிக்​காரர்கள் குற்றமே செய்ய​வில்லையா?''

''நான் அப்படிச் சொல்லவில்லை. இவர்கள் மீதான குற்றத்துக்கு சரியான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறேன். அவ்வளவுதான்!''

 

 

 

Thanks to vikatan.com

 

http://www.thedipaar.com/new/news/news.php?id=61516

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.