Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாம்பை கொல்லாவிடின் பாம்பின் விஷபல்லை பிடுங்க சொல்கிறார் விமல்- நாடு அராஜகத்தை நோக்கி நகர்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இன்று நாட்டை அராஜக நிலைக்கு உள்ளாக்கி வருகிறது என மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார காலியில் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் பாரதூரமான சிக்கலுக்குள் சென்றுள்ளது. மாகாண சபை முறைமை ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஜனாதிபதி முறைமை தேவையற்றது என தெரிவித்து, அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ கதிர்காமத்திற்கு நடைபயணம் சென்றார்.

 

எனினும் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தில் உள்ளவர்கள், தற்போது, முற்றாக ஜனாதிபதி முறைமையை பாதுகாத்து கொண்டு வரையறையின்றி,  தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்ய முடியும் அளவுக்கு மாற்றிக் கொண்டுள்ளனர். இன்று மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் உடைந்து சின்னாம்பின்னமாகி விட்டது. விமல் வீரவங்ச, சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவின் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.  பாம்பை கொல்ல முடியாவிட்டால் பாம்பின் விஷ பல்லை பிடுங்குமாறு விமல் வீரவங்ச கூறுகின்றார்.

 

அரசாங்கத்தில் உள்ள இடதுசாரி தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, ராஜித சேனாரத்ன ஆகியோர் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி, காணி, காவற்துறை அதிகாரங்களை செயற்படுத்துமாறு கூறிவருகின்றனர்.

அரசியல்வாதி அல்ல அதிகாரியான கோத்தபாய ராஜபக்ஷ, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக நாடு துண்டுகளாக பிளவுப்படக் கூடும். நாடு அழியக் கூடும் என தெரிவிக்கின்றார். அரசாங்கததின் அதிகாரி ஒருவர் எப்படி இவ்வாறான கருத்துக்களை வெளியிட முடியும். இதுதான் இன்றைய நாட்டின் நிலைமை.  

 

நாட்டின் ராஜதந்திரம் சீர்குலைந்துள்ளது. மக்களுக்கு ஒன்றையும். சர்வதேசத்திற்கு மற்றொன்றையும் மகிந்த ராஜபக்ஷ காட்டி நடித்து வருகிறார்.  தற்போது மகிந்த ராஜபக்ஷவின் பொம்மலாட்ட அரசாங்கத்தின் நடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. 13வது அரசியல் அமைப்புத் திருதத்தின் மூலம் அவர்கள் நாட்டை சிக்கலுக்குள் தள்ளி விட்டனர். நாடு அதள பாதாளத்திற்குள் தள்ளப்பட்டு விட்டது.  நாடு உறிஞ்சி உண்ணுமளவுக்கு வங்குரோத்தடைந்துள்ளது எனவும் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92661/language/ta-IN/article.aspx

 

 

காலம் மாறும் என்பதில் இந்த பீ லங்கன் அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கையில்லை.

லிபியன் கடாபி கொண்ட இராணுவமென்ன; போன திசையெங்கே?

 

அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து விளையாடுறது, ராசபக்ச புலிக்கு விளங்கேல்லை.



இன்னும் சொல்லப் போனால்,  ராசபக்சவை ஆட்டிப் படைக்கிறது, பழம் புலிகளெண்டால், பொய்யில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

நாணயக்கார  போல்  ஒரு சிலரால் தான் துணிந்து பேச முடிகிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.