Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிழ்ச்சிக்கான வாசல் கதவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் எல்லோரும் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தான் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் எந்த மனிதனுக்கும் வாழ்க்கையின் அத்தனை கணங்களும் முற்றுமுழுதாக மகிழ்ச்சியாக இருந்தது கிடையாது. மனிதர்கள் பலரின் வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டையும் ஒரு தராசில் இட்டால் துன்பப்பக்கம் தாளாத மனிதர்களைக் காணவே முடியாது.எனினும் எங்கள் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் விடயங்களை துன்பங்களாகவும் இன்பங்களாகவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடுகின்றது. சிலர் துன்பமாக நோக்கும் விடயங்களைச் சிலர் இன்பமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள். இன்பமாக எடுத்துக்கொள்ள வேண்டிய பல விடயங்களையே துன்பங்களாக நினைத்து எதிர்கொள்ளும் பல மனிதர்களையும் நாம் காண்கின்றோம். உதாரணமாக வெளியூரில் இருந்து ஒரு உறவினர் எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து சில நாள்கள் தங்கநேரும் போது சிலர் அதை மகிழ்வாக எடுத்து கொண்டாடி மகிழ்வார்கள். சிலர் அதைச் சுமையாக எண்ணி எப்போது அவர்கள் மீளத்திரும்பவர் என நாள்களை எண்ணுவார்கள். மனிதமனம் விந்தையானது.

உளவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளின் முடிபாக ஒன்றை கண்டறிந்துள்ளார்கள். எங்கள் வாழ்க்கையில் பத்து வீதமான நிகழ்வுகள் எமது கட்டுப்பாட்டை மீறி நிகழ்வன. உதாரணமாக நமது பிறப்பு,இனம்,மொழி,அங்கவீனக் குறைபாடுகள் போன்றவை. இவற்றை நாம் தீர்மானிக்கமுடியாது.மிகுதி தொன்னூறு வீதமும் அந்த பத்து வீதத்துக்கு நாம் எவ்வாறு பிரதிபலிப்புக்களை காட்டுகின்றோம் என்பதில் தான் தங்கியிருக்கின்றது. நாம் நமது பிரதிபலிப்புக்களை மகிழ்ச்சியான விதத்தில் காண்பிப்போமாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாகின்றது. பிரதிபலிப்புக்களை எதிர்மறையாக காண்பித்தால் வாழ்க்கை நரகமாகின்றது. இந்த சின்ன மையத்தில் தான் வாழ்க்கையின் அச்சு சுழல்கின்றது. இதை நம்மில் பலர் உணரத் தவறுகின்றோம்.

அன்னை திரேசா தனது ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றார். அவர் பணச்செருக்கினால் அன்னையின் கரங்களில் காறி உமிழ்ந்தார். அப்போது மிகவும் அமைதியாக அன்னை “ஐயா தாங்கள் தந்த எச்சிலை நான் வைத்துக்கொள்கின்றேன். எனது பிள்ளைகளுக்காக ஏதேனும் தாருங்கள்” என்றாராம். அன்னையின் பிரதிபலிப்பால் மிகவும் குறுகிப்போன அந்த செல்வந்தர் தனது சொத்துக்களில் பெரும் பகுதியை அன்னையிடம் ஆதரவற்ற பிள்ளைகளுக்காக கையளித்தாராம். இவ்வாறு தான் நமது பிரதிபலிப்புக்கள் நம்மை மட்டுமன்றி நம்மைச் சூழவுள்ளவர்களையும் தொற்றிக்கொண்டு பயன்விளைவிக்கின்றன. பிரதிபலிப்புக்களை இன்பமாகத் தரவல்ல மனிதர்களைச் சூழ்ந்திருப்பதற்கே பலர் ஆசைப்படுவார்கள். ஏன் நாம் அத்தகைய மனிதர்களாக இருக்கக்கூடாது என்று நாம் சிந்தித்ததுண்டா?

நம்மில் பலர் நமது உரிமைகள் தொடர்பில் நாளாந்தம் கவலை கொள்கின்றோம்.ஆனால் எங்களுள் பலர் தங்கள் கடமைகள் பற்றி கருத்தில் எடுப்பதே கிடையாது. உங்கள் கடமைகளில் இருந்து நீங்கள் ஒதுங்கிக்கொள்வீர்களானால் உங்கள் உரிமைகளில் இருந்து நீங்கள் ஓதுக்கப்படுவீர்கள்.இது உலக நியதி.இந்த நியதி யாருக்கும் விதிவிலக்காக அமைந்து விடுவது கிடையாது. அதுமட்டுமன்றி எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியின் அளவும் இந்த நியதிக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தில் தான் தங்கியிருக்கின்றது. குடும்பம் என்று வருகின்ற போது ஒருவன் கணவனாக தனது மனைவிக்கு தான் புரிய வேண்டிய கடமைகளிலும் தந்தையாக இருந்து தனது பிள்ளைகளுக்கு தான் புரிய வேண்டிய கடமைகளிலும் கவனமற்று இருப்பானாகில் அவனுக்கு ஒரு கணவனுக்கோ அல்லது தந்தைக்கோ கிடைக்க வேண்டிய உரிமைகளை அந்தக் குடும்பத்தில் கிடைக்காது.அவனது வாழ்க்கையின் மகிழ்ச்சியை அவனே தொலைத்தவனாகின்றான்.

இது போன்றே வேலைசெய்யும் இடத்திலும் நமது கடமைகளை நாம் புறக்கணிக்கின்ற போது எமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அது எமக்கான மகிழ்ச்சியான வேலைச்சூழலை ஒரு போதும் உருவாக்கித் தரமாட்டாது. அதுமட்டுமன்றி மகிழ்சியற்ற மனதோடு நாம் பணிபுரிவது மற்றையவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரப்போவது கிடையாது. எனவே நமது வாழ்க்கையின் மகிழ்ச்சியை மட்டுமன்றி நம்மைச் சூழவுள்ள சூழலையும் மகிழ்சியாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் நமது பிரதிபலிப்புக்களுக்கு உண்டு. நாம் சாதாரணமானவர்கள் கிடையாது. நமது நேர்த்தன்மையான எண்ணங்கள் ஆயிரம் நன்மைகளை எமக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கும் விளைவிக்கக்கூடியது. இந்த தன்மையை உணர்ந்து எமது பிரதிபலிப்புக்களை மகிழ்ச்சிக்கான வாசல் கதவுகளாக திறந்து வைப்போம்.

Alaveddy.ch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.