Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா வாசிங்ரனில் தமிழர்கள் அமைதிப் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வாசிங்ரனில் தமிழர்கள் அமைதிப் பேரணி

அமெரிக்காவின் தலைநகரான வாசிங்ரன் டிசியில் அமைந்துள்ள காங்கிரஸ் சபை முன்பாக அங்கு வாழும் தமிழர்களின் சார்பாக அமைதிப் பேரணி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (31.07.06) நடத்தப்பட்டது.

அமெரிக்க காங்கிரஸ் சபையின் மேற்குப் பக்கத்தில் பிற்பகல் 12 மணியில் முதல் மாலை 4 மணிவரை இப்பேரணி நடைபெற்றது.

சிறிலங்கா அரசும், அதன் முப்படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற அரச பயங்கரவாத வன்முறைகளையும், படுகொலைகளையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்து முகமாகவும், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.

இந்த அமைதிப் பேரணியில், நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் அமெரிக்காவின் பல மாநிலங்களில் இருந்தும் பலநூறு மைல்கள் பயணம் செய்து இப்பேரணியில் பங்கேற்றனர்.

தங்கள் கடமைகளில் இருந்து ஓய்வெடுத்து ஈழத் தமிழர்களின் இன்னல்களை அமெரிக்க அரசாங்கத்துக்கும் அமெரிக்க மக்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது முழக்கங்கள் எழுப்பியதும் சிங்கள இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளின் படங்களை தாங்கி நின்றதும் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததுடன் அமெரிக்கர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது.

மகிந்த அரசின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான முழக்கங்களையும் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டவகையில் எம் மக்கள் மீது திணிக்கப்படும் போரை நிறுத்த வேண்டியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிறிலங்கா அரசினால் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் நியாயமான அபிலாலசைகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஜனநாயகத்தின் உயர் விழுமியங்களையும், மரபுகளையும் அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினை அங்கீகரிக்க கோரியும் தமிழ் மக்களின் மீதான அரச பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த கோரியும், சிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதங்களை விவரித்தும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் செயலாளர்களிடம் மனு ஒன்றும் கையளிக்ப்பட்டது.

வங்காலை படுகொலையின் நிகழ்வை நாடக வடிவில் செய்து காண்பித்த போது அமெரிக்க காங்கிரஸ் சபையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் உட்பட அந்த இடத்துனூடாக சென்ற பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மக்களும் உல்லாச பயணிகளும் நின்று பார்த்தது படங்கள் எடுத்தது மட்டுமன்றி சிறிலங்கா அரச பயங்கரவாத அட்டூழியங்களை பற்றி விசாரித்தனர்.

தமிழ் இளையோர் அமைப்பினரும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டம், சிங்கள அரச இனவெறியர்களின் அட்டூழியங்கள் தொடர்பான விளக்கவுரையும் அப்பகுதியில் சென்ற மக்களுக்கு வழங்கப்பட்டது.

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க கோரியும் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களை விவரித்தும் 4,000-க்கும் மேற்பட்ட பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அமெரிக்க காங்கிரஸ் சபை முன்பாக தமிழ் உறவுகளுக்காக குரல் கொடுக்க, அமெரிக்கத் தமிழர்களுக்கு கிடைத்திருந்த இந்த வாய்ப்பினை உரியமுறையில் பயன்படுத்தி அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும் எதிராக குரல் கொடுத்தது மட்டுமன்றி காலத்தின் கடமையை நிறைவேற்றிய உணர்வினை பேரணியில் பங்குபற்றியவர்கள் மத்தியில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

நிகழ்வின் இறுதியாக, அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு முன்பாக முழக்கங்கள் தாங்கியவாறும், உணர்வு பூர்வமான முறையில் முழக்கங்கள் எழுப்பியவாறும் அமைதியான முறையில் பேரணியாக வந்து, இறுதியாக பேரணியில் பங்குபற்றியவர்கள் மத்தியில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அமெரிக்க, தமிழக அமைப்புக்களை சேர்ந்த சேரன், செல்லையா, முத்துவேல், கனடாவில் இருந்து வருகை தந்திருந்த வண. பிதா சேவியர் அடிகளார், அமெரிக்க உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் தலைவர் கருணாகரன் ஆகியோருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச சட்ட ஆலோசகர் உருத்திரகுமாரும் சிறப்புரையாற்றினார்.

அமைதிப் பேரணியை நடத்துவதற்கான அனுமதியை பெற்று தந்தது மட்டுமன்றி இப்பேரணியின் வெற்றிக்கு ஈழத்தமிழர்களுடன் இணைந்து தமிழகத் தமிழர்களும் பெரும் பங்காற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

படங்களினைப்பார்க்க

http://www.eelampage.com/?cn=27949

  • கருத்துக்கள உறவுகள்

வாசிங்டனில் நடந்துமுடிந்த அமைதிப் பேரணியை ஒழுங்கு செய்தது தமிழகத்து உறவுகள் தான்.அதில் அஜீவனின் நண்பரான சிவாவும் இருந்தார்.மேலும் படங்களைப் பார்க்க http://www.tamilnaatham.com/photos/2006/AUG/USA/

தகவலை இணைத்தமைக்கு நன்றி ஈழப்பிரியன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.