Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் G .L. Peiris யேர்மனியில் மேற்கொண்ட பொய்ப் பரப்புரைக்கு பதிலடி - யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

Featured Replies

 
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் G .L. Peiris யேர்மனியில் சென்ற வாரம் 13 -16 திகதிகளில் யேர்மனி பெர்லின் நகரத்திற்கு இன அழிப்பை மூடி மறைக்கும் பொய்ப் பரப்புரை பயணத்தில் யேர்மன் வெளிவிவகார அமைச்சர் Gido Westerwelle மற்றும் யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சென்றுள்ளார் .

அத்துடன் இவ் வருகையில் சிறீலங்கா மற்றும் யேர்மன் அரசுக்கு இடையான ராயதந்திர உறவின் 60 வது வருட தினத்தை சிறீலங்காவின் தூதரகத்தின் வளாகத்தில் ஈழத்தமிழர்களின் மீதானா இன அழிப்பை மூடி மறைக்கும் முகமாக பாரிய விழாவாக கொண்டாடி உள்ளார்கள் .

வெளிவிவகார அமைச்சுடன் நடைபெற்ற சந்திப்பில் G .L. Peiris  சிறீலங்காவில் போர் முடிந்து மிக சிறப்பான முறையில் சமூக அபிவிருத்திநடைபெறுகின்றது என்றும் , தாம்  சர்வதேச ரீதியாக மனிதவுரிமைகளை பேணுவதில் முன்னுதாரணமாக விளங்குவதாகவும் அத்தோடு யேர்மனியில் தமிழ் மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் எனவும் பொய் உரைத்து கூறியுள்ளார்.

G .L. Peiris பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் முகமாக சென்ற திங்கள் கிழமை 24.06.2013  அன்று யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மன் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன்  முக்கிய சந்திப்பை மேற்கொண்டனர்  . இச் சந்திப்பில் சிறீலங்காவில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு மற்றும் சிறீலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் முகமாக தாயகத்தில் அல்லறும் மக்களின் காணொளி சாட்சியாக காண்பிக்கப்பட்டது . 

தொடர்ந்து இச் சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரிகள்  சிறீலங்கா அரசின் பன்முக வேடத்தை நன்கு அறிவார்கள் என்றும் தாம் இன்றும் அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டிப்பதாகவும் , ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் முகமாக சிறீலங்கா அரசு எதிர்காலத்தில் உறுதியோடு செயற்பட வேண்டும் , தவறும் பட்சத்தில் தாம் அங்கு நடைபெற்ற போர்க்குற்றம் , மானிடத்திற்கெதிரான குற்றங்கள் விடையமாக அனைத்துலக சுயாதீன விசாரணைகளை வலியுறுத்த நேரிடும் என்றும் குறிப்பிட்டார்கள் .

குறிப்பாக யேர்மன் Friedrich - Ebert -Stiftung அமைப்பின் பணியாளர் சிறீலங்காவில் கைது செய்யப்பட்டது விடையமாக அவர்கள் தமது கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் இச் சம்பவம் சிறீலங்கா அரசின் வன்முறையை கோடிட்டு காட்டுகின்றது என்பதை குறிப்பிட்டனர் .

.

இச் சந்திப்பு  Chatham House Rule அடிப்படையில் நடைபெற்றதால் கலந்துகொண்டவர்களின் விபரம் மற்றும் அவர்கள் கூறிய கருத்துகள் இனம்காட்ட முடியாதுல்லது என்பது குறிப்பிடத்தக்கது .

 யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மன் அனைத்து கட்சிகளுடனான தொடர்புகளை பேணி செயற்படுவதின் ஊடாக கடந்த காலத்தில் யேர்மன் பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரசுக்கு எதிரான சில கேள்விகள் மற்றும்  பிரேரணை கொண்டுவர  முயற்சிக்கப்பட்டது இங்கு குறிப்படத்தக்கது .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.