Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை யானை பார்க்கின்ற விழிப்புலனற்றோர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை யானை பார்க்கின்ற விழிப்புலனற்றோர்

அண்மையில் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்தபோது வெளியிட்ட கருத்துக்கள், அவரினதும் அவரால் தலைமையேற்று நடத்தப்படும்
 அரசினதும் இனப்பிரச்சினை தொடர்பான மற்றும் மாகாண சபைகள் தொடர்பான அணுகுமுறையின் ஒரு தெளிவான தூரநோக்குடைய இலக்குகளை அம்பலப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன.

வெள்ளை யானை  இனி வேண்டாம்

இன்று சிங்களக் கடும் போக்காளர்கள் எனக் கருதப்படுபவர்களின் கருத்துக்களின் மூலவேர் ஜனாதிபதியின் சிந்தனைக்குள்ளேயே படர்ந்திருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

அங்கு அவரால் மாகாண சபை ஒரு வெள்ளை யானை எனவும் அதன் அதிகாரங்கள் ஒவ்வொன்றாகக் களையப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஓர் ஆசிரியையை முழங்காவிலில் நிறுத்தித் தண்டித்ததைச் சுட்டிக்காட்டி, மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் தான்கூட தனது வீட்டுக்குப் போக முடியாத நிலை வந்துவிடும் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அமைச்சர் மேர்வின் சில்வா சமுர்த்தி அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டி வைத்தமையையும் துமிந்த சில்வா பகிரங்க இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியமையையும் சுட்டிக்காட்டி இப்படியான நிலையில் நாடாளுமன்றத்துக்கு இருக்கும் பொலிஸ் அதிகாரம் பறிக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பத் தவறிவிட்டனர்.

அப்படிக் கேள்வி எழுப்புவது சில சமயங்களில் ஊடக ஒழுக்கக் கோவை விதிகளுக்கு விரோத மான நடவடிக்கையோ தெரியவில்லை. எப்படியிருந்த போதிலும் மாகாண சபைகளை எவ்வித அதிகாரங்களும் இல்லாத ஜடப்பொருள் ஆக்குவது என்ற அவரது நீண்ட கால நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே ஒவ்வொரு விடயங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

அதை நோக்கிய கருத்துக்களம் ஒன்றை உருவாக்கும் நோக்குடனேயே இவ்வாறான சந்திப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையிலேயே ஒரு பயனற்ற செலவினம் மாகாண சபை என்ற கருத்துப்பட அது ஒரு வெள்ளையானை என ஜனாதிபதியால் சித்தரிக்கப்பட்டது.

இப்படி ஒருபுறம் கூறப்பட்ட போதிலும் இந்த வெள்ளை யானை பற்றி பல்வேறு  கருத்து மோதல்களும் சர்ச்சைகளும் அது மட்டுமன்றி மாகாண சபைகளுக்கு இப்போ எழுத்தளவில் மட்டும் உள்ள சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுவிட்டால் தனிநாடு உருவாகிவிடும் என்ற ஒரு மாயையும் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றது.

பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என மேலோட்டமான வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பி அதுமட்டும்தான் தமிழ் மக்களின் பிரச்சினை என்பது போன்ற மாயையை ஏற்படுத்திக் கொண்டு மறுபுறத்தில் அமைச்சரவை தமிழ் மக்களின் இருப்பையும் தேசியத்தையும் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம் என்பன தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு என ஒரு நாடகம் ஒருபுறம் அரங்கேற்றப்பட மறுபுறத்தில் எந்தத் தெரிவுக்குழுவுமின்றி 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. அதற்கான அங்கீகாரத்தை அமைச் சரவை வழங்கிவிட்டது.

அதாவது 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இரு மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் ரத்து செய்யப்படவுள்ளது.

அடுத்தது மாகாண சபைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் எல்லா மாகாண சபைகளாலும் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் செல்லுபடியாகாது என்ற சரத்து நீக்கப்பட்டு, பெரும்பான்மையான மாகாணங்கள் ஏற்றுக் கொண்டால் அது செல்லுபடியாகும் என மாற்றப்படவுள்ளது.

இந்தப் 19ஆவது  திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்தச் சட்டம் முழுமையாகவே தமிழ் மக்களின் சகல உரிமைகளும் பறிக்கும் வலிமை கொண்டது என்பதை உணரவிடாமல் செய்யவே காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்பன பற்றி விவாதிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்ற மாயை மேடை யேற்றப்பட்டு ஆடவிடப்படுகிறது.

அழிவுத்திட்டம்

இலங்கைத் தமிழினம் ஒரு தனித்துவமான தேசிய இனம். அதற்கென ஒரு மொழி, கலாசாரம், பொதுப் பொருளாதாரம் தொடர்ச்சியாக வாழும் ஒரு நிலப்பகுதி எல்லாமே உண்டு.

அவ்வகையில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதும் வடக்குக் கிழக்கு அந்த இனத்தின் பாரம்பரிய தாயகப் பகுதி என்பது எவராலும் மறுதலிக்க முடியாத உண்மை.காலம் காலமாகவே சிங்கள இன ஒடுக்குமுறையாளர்கள் தமிழ் மக்களின் தேசியத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதுடன் அதை அழிக்கும் வகையிலான சூழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே தொடர்ந்து தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உதவியின்றி எவரும் ஆட்சியமைக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்தால் கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்.

அப்படியான ஒரு நிலையில்வடக்கு மாகாண சபையும் கிழக்கு மாகாண சபையும் ஒன்றிணைய வேண்டும் என இரு மாகாண சபைகளும் தீர்மானம் நிறைவேற்றினால் 13 ஆவது திருத்தச் சட்டத்தின்படி ஜனாதிபதி அவற்றை இணைத்தே ஆக வேண்டும்.

இப்படி ஒரே மாகாண சபையாக இரு மாகாண சபைகளும் இணைக்கப்படுமானால் வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விடும். அப்படியான நிலையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய தனித்துவத்தை அழிக்கும் நோக்கம் சிதைக்கப்பட்டு விடும்.

எனவேதான் இரு மாகாணங்களை இணைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இல்லாமற் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் கொடூரம் புரிந்து கொள்ளப்படாமல் திசை திருப்பவே மேடையில் இப்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஏற்றப்படுகிறது.

காத்திருக்கும் ஆபத்து

அடுத்து மாகாண சபை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டமும் எல்லா மாகாண சபைகளின் அங்கீகாரமும் பெற்றாலே செல்லுபடியாகும் என்ற சட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள திருத்தமாகும்.

இந்தச் சட்டத்தில் எல்லா மாகாண சபைகளின் சம்மதமும் பெறப்பட வேண்டும் என்ற சட்டச் சரத்து மாற்றப்பட்டு பெரும்பான்மையான மாகாண சபைகள் அங்கீகாரம் கொடுத்தாலே போதுமானது எனக் கொண்டு வரப்படுவதற்குஅமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

இது மாகாண சபையின் எந்தவொரு  அதிகாரத்தையும் எந்தநேரத்திலும் நாடாளுமன்றத்தால் பறிக்கக்கூடிய பேராபத்து மிகுந்த சட்டமாகும்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் உள்ள நிலையிலேயே   வடமாகாண சபைத் தேர்தல் இடம்பெறும். அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றும் என்பது தெளிவான விடயம்.

அதன் பின்னர் காணி, பொலிஸ் அதிகாரமோ அல்லது வேறு எந்த அதிகாரமோ அதைப் பறிக்கப்படக்கூடிய சட்டத்தை நாடாளுமன்றத்தால் நிறைவேற்ற முடியும். இப்போது வடக்கு தவிர்ந்த எட்டு மாகாண சபைகளும் அரச கட்சியின் அதிகாரத்திலேயே உள்ளன.

எனவே பெரும்பான்மையான மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெறுவது மிகச் சுலபமான காரியம். அந்த இரு சட்ட திருத்தங்களையும் 19 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டு வருவதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

இப்படியாக 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மிகச் சுலபமாகப் பறிக்கப்படக்கூடிய பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அவை பற்றித் தீர்மானிக்க ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் அமைக்கப்படவுள்ளது.

பலவீனமான எதிர்ப்பு

அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகரா, ராஜித சேனரத்தின, ரவூப் ஹக்கீம் ஆகியோர் மாகாண சபைகளிடமிருந்து காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிப்பதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனரத்தின மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுமானால் தான் பதவி விலகவும் தயார் எனச் சவால் விட்டுள்ளார்.

ஆனால் பின்பு இரு மாகாணங்களை ஒன்றிணைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம்  தொடர்பான சட்டம் ரத்துச் செய்யப்படுவதைதான் எதிர்க்கப் போவதில்லை என அறிவித்துவிட்டார்.

எப்படியிருந்த போதிலும் 19 ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் மேற்படி ஒரு சட்டங்களையும் நிறைவேற்ற அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவையில் இவர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

அதுமட்டுமன்றி இந்த இரு சட்டங்களுக்கு  எதிராகவும் இவர்கள் பகிரங்கமாக கருத்து வெளிப்படுத்தவில்லை. இதிலிருந்து இவர்கள் மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதற்குக் காட்டும் எதிர்ப்பு, நாடாளுமன்றத் தெரிவுக் குழு என்பனவெல்லாம் ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

கடதாசி யானை

ஆனால் இந்த இரு சட்டங்களும் அதிகாரப் பரவலாக்கம் என்ற அம்சத்தை அடியோடு ஒழிப்பனவாகவும் தமிழினத்தின் மீதான ஒடுக்கு முறைகளை மேலும் மேலும் வலுப்படுத்த உதவும் ஆயுதங்கள் என்பதைத் தமிழ் மக்கள் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளனர்.

ஆனால் பல்வேறு தரப்பினரும் யானை பார்த்த திருடர்கள் போன்று மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள்  வழங்கப்பட்டால் தனி நாடு அமைக்க அடித்தளமாகிவிடும் எனவும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் ஜனாதிபதி கூடத் தனது சொந்த  வீட்டுக்கே போக முடியாதெனவும் காணி, அதிகாரம் வழங்கப்பட்டால் வடக்கு கிழக்கை விட்டு சிங்கள மக்கள் விரட்டப்பட்டு விடுவார்கள் எனவும் வெவ்வேறு  பிரசாரங்களைச் செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த வெள்ளை யானைகள் 19 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் வெறும் கடதாசி யானையாக்கப்பட்டுவிடும் என்பது தான் அப்பட்டமான உண்மையாகும்.

 
 
http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=6945450503808763

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.