Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா ஏவுகணை சோதனை தோல்வி: பென்டகன் அதிர்ச்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஏவுகணை சோதனை தோல்வி: பென்டகன் அதிர்ச்சி!

ju-7-u-s-missile-580x328.jpg

 

எதிரி ஏவுகணையை வழிமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. கடந்த 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் தோல்வி அடைந்த நிலையில் இப்போது மீண்டும் இந்த ஏவுகணை சோதனை தோல்வி அடைந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

சமீபகாலமாக தென் கொரியா மீது போர் தொடுப்போம் என்று வட கொரியா மிரட்டி வருகிறது. இதையடுத்து தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்க முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா மிரட்டி வருகிறது. அப்படி தாக்குதல் நடந்தால் சமாளிக்க அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் எதிரி ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் அதிநவீன ஏவுகணையை அமெரிக்க ராணுவம் நேற்று சோதனை செய்தது.

மார்ஷல் தீவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை, கலிபோர்னியாவின் வாண்டென்பெர்க் விமான படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை வழிமறித்து தாக்கும் சோதனை நடத்தப்பட்டது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் நடந்த இந்த சோதனையும் தோல்வி அடைந்தது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக சோதனை தோல்வி அடைந்தது என்று ராணுவ தலைமையகம் பென்டகன் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில் தரையில் இருந்து நீண்ட தூரம் சென்று எதிரி ஏவுகணையை அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனை தொடர்ந்து தோல்வி அடைவது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று ஏவுகணை பாதுகாப்பு ஏஜென்சி செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் லெனர் தெரிவித்துள்ளார். கடந்த 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் தோல்வி அடைந்தன. இப்போது மீண்டும் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.ampalam.com/2013/07/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4/

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப்போர் பற்றிய விவரணம் ஒன்று நேற்று போனது.. பிரித்தானியா ஜேர்மனியால் கைப்பற்றப்படும் ஆபத்து இருந்தபோதும் அமெரிக்கா போரில் இறங்கவில்லை.. பேர்ல் துறைமுகம் தாக்கப்பட்டதும் அமெரிக்க மக்களின் எண்ணம் மாறுகிறது..

அப்போது பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனையின்படி பல இராணுவ தொழில்நுட்ப இரகசியங்கள் வோஷிங்க்டனுக்கு வழங்கப்படுகின்றன.. அதைக்கொண்டு தயாரிப்புவேலைகள் மும்முரமடைகின்றன.. இந்த அறிவுப்பரிமாற்றத்துக்குப் பதிலாக அமெரிக்கா போரில் இறங்கவேண்டும் என்பதே ஒப்பந்தம்.. பதிலுக்கு பிரித்தானியாவின் உலக ஆளுமையும் குறைக்கப்படவேண்டும் என்பது ரோசவெல்ட்டின் நிபந்தனை (அகிம்சைப் போராட்டத்தின் மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்ததன் பின்னணிக் கதை.. :D )

இராணுவ வல்லமையில் உலக அளவில் முப்பது சொச்சம் தரத்தில் இருந்த அமெரிக்கா இரண்டாம் உலகப்போரின் பின் முதல் இடத்துக்கு வந்துவிட்டது..!

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல இசை, இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில் ஜேர்மனியிலிருந்த பெருமளவிலான விஞ்ஞானிகளும்ஆவர்கள் ஈடுபட்டுவந்த பெருமளவு தொழிநுட்ப ஆராய்ச்சிகளும் அமெரிக்காவுக்குக் கப்பலேற்றப்பட்டன. இன்று அமெரிக்க பீற்றிக்கொள்ளும் ஸ்டெல்த் ரக போர்விமானங்கள் கூட அன்று ஹிட்லரின் விஞ்ஞானிகள் உருவாக்கியவைதான். அத்துடன் அமெரிக்கா ஜப்பான் மீது போட்ட அணுக்குண்டை விட சக்தியுள்ள குண்டுகளை ஜேர்மனி தயாரித்து முடிக்கும் நிலையில் இருந்துள்ளதும் அப்போது தெரியவந்துள்ளது. ஜெர்னமனி அன்றே பலமடங்கு தொழிநுட்பரீதியில் வளர்ச்சி அடைந்திருந்தது.  2 ஆம் உலகப்போரில் ஜேர்மனிய ராணுவம் வைத்திருந்த, கண்டுபிடித்த தொழிநுட்பத்தை படித்தறிவதற்கே அமெரிக்கர்களுக்கு நாள் எடுத்ததாம். 

 

ஹிட்லரின் எஸ்.எஸ் அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப வல்லுனர்கள் 2 ஆம் உலக யுத்த முடிவோடு அமெரிக்கா மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் வாழ்ந்து வந்தார்கள்/வருகிறார்கள். இன்னொரு ஜேர்மனியின் எழுச்சிக்குச் சந்தர்ப்பம் பார்த்திருப்பதாகவும் ஒரு கதை இருக்கிறது.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி அந்நாட்களில் கண்டுபிடித்த  வி 1 வி2 ரக ராக்கெட் தொழிநுட்பத்தைப் பார்த்து தலையைப் பிய்த்துக்கொண்ட அமெரிக்கா அதேபோல தானும் ஒன்றை உருவாக்குவதற்கு 88 ஜேர்மன் விஞ்ஞானிகளை அமெரிக்காவுக்கு கடத்திச்சென்றது. அதுபற்றிய சிறு தகவல்க் குறிப்புக் கீழே.....

 

http://www.history.com/this-day-in-history/german-scientists-brought-to-united-states-to-work-on-rocket-technology

 

மொத்தத்தில் அமெரிக்கவென்பது முதலாளிகள் வாழும் நாடு. பணம் தேவையென்றால் என்னவும் செய்வார்கள். புதிய உலக ஒழுங்கு என்பது பணத்தினாலும் பலத்தினாலும் ஆக்கப்பட்டது. இதில் நீதி, நியாயம், தர்மம் என்பவற்றிற்கு இடமில்லை.

நீர் முழ்கி கப்பலும் German navy கண்டு பிடித்தார்கள் என்று நினைகிறேன். இரண்டாம் உலக யுத்த காலத்தில் u-boat என்று அழைக்கப்பட்டது என்று படித்த நினைவு. 1944 German u-boat ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.