Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியா:வெறும் உள்நாட்டு விவகாரம் அல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிரியா:வெறும் உள்நாட்டு விவகாரம் அல்ல

சந்திர. பிரவீண் குமார்

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது பொது விதி. ஆனால் எல்லா நேரங்களிலும் அந்த விதி அப்படியே நடந்துவிடுவதில்லை. கடுமையான போராட்டத்திற்குப் பிறகே சிறிய மாற்றம்கூட சாத்தியமாகிறது. அப்படி ஒரு நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதுதான் சோகம்.

கடந்த இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலான உலக நாடுகள், பல நூற்றாண்டுகளாக நீடித்த மன்னராட்சி முறையையும், அதன் தொடர்ச்சியான காலனி ஆட்சிகளையும் உடைத்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பின. 'எல்லோரும் இந்நாட்டின் மன்னர்' என்ற கொள்கையை நிறுவிய ஜனநாயக அமைப்பையும் பதவி சுகத்தை அனுபவிக்கும் பெருச்சாளிகள் விட்டுவிடுவதில்லை. அதிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி ஆண்டுக்கணக்கில் ஆட்சி செய்வதும் நடக்கிறது. இவர்களை எதிர்த்து பெருமளவில் மக்கள் திரண்டு போரிட வேண்டியிருக்கிறது.

சிரியா என்ற வளைகுடா நாடு இதற்கு சமீபத்திய உதாரணம். ஜனநாயக ரீதியான தேர்தல் முறைகளைப் பயன்படுத்தி தற்போதைய அதிபர் பஷர் அல் அஸ்ஸத்தின் குடும்பம் கடந்த 35 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆண்டு வருகிறது. பல ஆண்டுகள் அந்நாட்டு மக்கள் பொறுமை காத்தாலும் அந்தக் குடும்பம் ஆட்சியை விட்டு விலகும் வழியைக் காணோம். அதனால் கடந்த 2011 மார்ச் மாதம் முதல் மக்கள் ஆயுதங்களைத் தாங்கிய புரட்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கக்கூடும் என்று ஐ.நா.சபை தெரிவிக்கிறது. அதில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடக்கம்.

அதிபர் அஸ்ஸத்தின் சார்பாக அந்நாட்டு ராணுவமும், மக்களின் சார்பாக புரட்சி படையினரும் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்காக எதையும் செய்யத் துணிந்திருக்கிறது சிரியா ராணுவம். அண்டை நாடான லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதிகளின் உதவியோடு மக்களை ஒடுக்கி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்தச் சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் 5ஆம் தேதி நிலவரப்படி, கொடுங்கோன்மைக்கும், ஜனநாயகத்துக்குமான இந்த யுத்தத்தில் அந்நாட்டின் முக்கிய கேந்திர நகரமான குசயர், அரசாங்கத்தின் பிடிக்குச் சென்று விட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. இந்த சண்டையில் பலியானவர்களின் இரத்த மாதிரிகளைப் பார்க்கும்போது இந்தப் போரில் 'சரின்' என்ற கொடிய ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்காவும், பிரிட்டனும் குற்றம்சாட்டுகின்றன. குறிப்பாக, வடக்கு நகரமான அலெப்போவில் நடந்த கிளர்ச்சியை ஒடுக்க இந்த ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக அவை கூறுகின்றன.

சிரியாவில் வெடித்த கலவரம், தற்போது மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. லெபனானின் கிழக்கு பகுதியான பால்பெக்கிலும் கலவரம் பரவியுள்ளது. லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லாஹ் அமைப்பினர் சிரியாவின் அரசப் படையினருடன் இணைந்து கிளர்ச்சியாளர்களைத் தாக்கியதற்குப் பதிலடியாக இந்த கலவரம் வெடித்ததாகச் செய்திகள் கூறுகின்றன. மேலும் கிளர்ச்சியாளர்கள் சன்னி மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் சன்னிகளுக்கு எதிரான போராகவும் இந்த கலவரங்கள் கருதப்படுகின்றன. சிரியா அதிபர் அஸ்ஸத்துக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் ஒன்றுசேர வேண்டும் என்று எகிப்த்தின் செல்வாக்கு மிக்க மத போதகரான யூசூப் அல் சுரதாவி அழைப்பு விடுத்துள்ளார். சன்னிகளை ஒழிப்பதற்காக அஸ்ஸத்துடன் ஈரானும், ஹிஸ்புல்லாஹ்களும் இணைந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் குசயர் நகரத்தில் ராணுவமும், கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து போரிட்டு வருவதால் அங்குள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர், உணவு, மருந்து பொருட்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்துவருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அனுமதி கோரியுள்ளது. ஆனால் ராணுவ நடவடிக்கைகள் முடிந்த பிறகே, அனுமதி கிடைக்கும் என்று தெரிகிறது. அந்த மக்களுக்கு உதவும் பொருட்டு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் கொண்டுவந்த 'அபாய எச்சரிக்கை பிரகடனம்' ரஷ்யாவால் முறியடிக்கப்பட்டது. இதன் மூலம் பாதுகாப்பு கவுன்சிலின் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் ஏகோபித்த ஆதரவு இருந்தால் மட்டுமே உதவிகள் கிடைக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சிரியாவுக்கு அண்டைய நாடான துருக்கியிலும் ஆட்சியாளர்கள் மீதான கோபம் வன்முறையாக வெடித்துள்ளது. அந்நாட்டின் தென்பகுதியிலுள்ள அன்தக்யா என்ற ஊரில் கிளர்ச்சியாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் உயிரிழக்கக் காரணமான குண்டு எங்கிருந்து கிளம்பியது என்று தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஜூன் 2ஆம் தேதியன்று இஸ்தான்புல்லில் கிளர்ச்சியாளர் ஒருவரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது. ஆர்ப்பாட்டம் செய்யக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைக் கலைக்க, துருக்கி காவல்துறையினர் கண்ணீர் புகைகளை வீசியும், தண்ணீரைப் பாய்ச்சியும் பெரும் போராட்டம் நடத்தவேண்டியிருந்தது.

இந்தக் கலவரங்களைக் கண்டித்த துருக்கி பிரதமர் ரெஜெப் தையிப் ஏர்தோவான், இந்தக் கலவரங்களுக்குப் பின்னால், எதிர்க்கட்சிகள் இருப்பதாக குற்றம்சாட்டினார். சிரியாவில் தொடங்கிய இந்தக் கலவரம் மேலும் பல வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருகிறது. விரைவில் அந்தப் பகுதியில் குழப்பங்கள் அதிகமாகும் சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்டுவந்த கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு இருந்த தடையை ஐரோப்பிய யூனியன் விலக்கிக்கொண்டுள்ளது. ஆனால் கிளர்ச்சியாளர்களுக்கு உடனடியாக ஆயுதங்களை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அது தெளிவுப்படுத்தியுள்ளது.

சிரியா சம்பந்தமான மற்ற தடைகள் அனைத்தும் அமுலில் இருக்கும் என்றும், இது சம்பந்தமான அடுத்தகட்ட பரிசீலனையை உறுப்பு நாடுகள் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்னால் மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளும், ஐ.நா.சபையும் இந்தக் கலவரங்களைத் தொடர்ந்து கவனித்தாலும் ஊடகங்களின் இது சம்பந்தமான செய்திகள் முக்கியத்துவம் பெற்றதாகத் தெரியவில்லை. ஒரு சில ஊடகங்களே கலவரம் பற்றி பதிவு செய்துள்ளன. ஒருவேளை வளைகுடா நாடுகளின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

உலக நாடுகளும் இந்தக் கலவரங்களைப் பாராமுகத்துடனே அணுகி வருகின்றன. கண்டனங்களையும், தீர்மானங்களையும் நிறைவேற்றுவதுடனே நின்று விடுகின்றன. ஆட்சியாளர்களுக்கு எதிராக வன்முறையாக இது உருவெடுத்திருந்தாலும், உண்மையில் வளைகுடா நாடுகளில் பல ஆண்டுகளாக நீடித்துவரும் ஷியா - சன்னி மோதல்கள் பெருமளவில் வளர்ந்து வருவதற்கான அறிகுறியாகவே இது கருதப்படுகிறது.

உலகம் முழுவதும் சமாதானத்தையும், நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் தொடங்கப்பட்ட ஐ.நா.சபை, இந்த விவகாரத்தில் வெறும் கவலை தெரிவிப்பதோடு நின்றுவிடக் கூடாது. வளைகுடா நாடுகள் அனைத்தையும் ஒன்றுப்படுத்த முன்வர வேண்டும். வளைகுடா நாடுகளின் யுத்தம் வெடித்தால் உலகம் முழுவதுமே எதிரொலிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தக் கலவரத்தை ஏதோ உள்நாட்டுக் கலவரம் என்று நினைத்தால் நஷ்டம் உலகத்துக்குத்தான்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=455fbb6d-ec52-448b-b441-5b76a8631169

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.