Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூதுவர்கள் அடிக்கடி வந்து போனார்கள் - சமாதானம் தர வரவில்லை, எங்களை அழிப்பதற்காக வேவு பார்க்கவே வந்தார்கள்: யாழ்.குடாநாட்டு மக்கள். -

Featured Replies

எங்களுக்கு எவரும் மீட்பர்கள் இல்லை. எத்தனையோ வெளிநாட்டவர்களை நாம் பாத்திருக்கின்றோம். ஏமாந்திருக்கின்றோம். எமது போராட்டத்தை அழிக்க உதவிய இந்தியாவோ அந்த நாட்டு அரசின் எந்தவொரு பிரதிநிதிகளோ எங்களுக்கு மீட்பர்களா இருப்பார்கள் என்று நாங்கள் துளிகூட நம்பவில்லை என்று யாழ்.குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

erik-mahinda1.jpg

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளபோதே குடாநாட்டு மக்களில் சிலர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேனன் சிறிலங்காவிற்கு வந்ததை தாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை நாங்கள் நம்பிய காலம் இருந்தது. அது உலகத் தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட, நேசிக்கப்படுகின்ற பெரும் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த காலம். அந்தக் காலத்தில் நாங்கள் இந்தியாவை குறிப்பாகத் தமிழகத்தை நம்பினோம். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தப் பெருமகனைப் போன்ற ஒரு பெருந்தலைவரை நாம் இந்தியாவில் காண முடியாது. அவர் இருந்திருந்தால் இன்று நாம் தமிழீழத் தனியரசில் இருந்திருப்போம் என்றும் குடாநாட்டுத் தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

tamilmakkalkural.blogspot.comculprits.jp

மேனன் வருகிறார் வருகிறார் என்று கடந்த இரண்டு வார காலமாக ஊடகங்களில் முதன்மைப்படுத்தப்பட்ட செய்திகளைப் பார்க்கின்றபோது இன்னும் தமிழ் ஊடகங்கள் தமிழர்களை ஏமாற்றும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றதா என்றே எண்ணத்தோன்றுவதாகவும் குடாநாட்டுத் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். மேனன் ஒன்றும் எங்கள் மீட்பர் அல்ல. அவர் ஒரு சாதாரண மனிதன். அவரால் தமிழருக்கு எதுவும் ஆகப்போவதில்லை. அது குறித்து நாங்கள் எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.  

வலிகாமம் மயிலிட்டியைச் சேர்ந்த க.கந்தசாமி (வயது-59) என்ற குடும்பஸ்தர் இது தொடர்பில் கருத்து கூறும்போது, நாங்கள் எத்தனையோ தூதுவர்களைப் பார்த்திருக்கின்றோம். அத்தனை பேரையும் தேவ தூதர்கள் என்றே நம்பினோம். ஆனால், யாருமே எங்களுக்கு நம்பிக்கையாக நடக்கவில்லை. நோர்வே, யப்பான் போன்ற நாடுகளின் தூதுவர்கள் அடிக்கடி வந்து போனார்கள். அவர்கள் எமக்கு சமாதானம் தர வரவில்லை. எங்களை அழிப்பதற்காக வேவு பார்க்கவே வந்தார்கள் என்பது இப்போது தான் புரிகிறது என்று அந்த வயோதிபர் கூறினார்.

மீசாலையைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் காந்தரூபன் என்ற இளைஞன் கூறுகையில், நாங்கள் எவரையுமே நம்பத் தயாராக இல்லை. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் வருகிறார் என்று அறிந்தோம். அவரைப் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். போர் நடைபெற்ற போது அவர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒத்தூதியதையும் கள முனைகளை வந்து பார்வையிட்டு சிறிலங்காப் படைகளுக்கு தைரியம் ஊட்டியதையும் நாம் மறக்க மாட்டோம். எமது போராட்டத்தை அழித்த எவரையுமே நாம் ஏறெடுத்துப் பார்க்கத் தயாராக இல்லை. இவர்கள் எல்லோரும் மோசடிக்காரர்கள்.

வடமாகாண சபைத் தேர்தலில் எப்படியாவது அரசாங்கத்தை வெற்றி பெற வைக்க வேண்டுமென்பதிலேயே இந்தியா குறியாக இருக்கின்றது. சிறிலங்காவில் மாற்று நபர்கள் அரசமைத்தால் தமது போர்க்குற்ற ஆதாரங்களும் அவர்கள் மூலம் வெளிப்பட்டுவிடும் என்று பயந்தே கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் மகிந்தவை வெல்லவைப்பதற்கு இந்தியா கடும் முயற்சியெடுத்து அப்படியே மகிந்த வென்றார்.

இப்போது வடக்கு மாகாண சபையிலும் அரசாங்க கட்சியை வெல்ல வைக்கவே இந்தியா விரும்புகிறது. இதுவே மேனனின் வருகைக்கான காரணம். இதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று கூறினார். 

மேனன் வருகை தொடர்பாக நான் கருத்துக் கூற விரும்பவில்லை.

ஏனென்றால் இன்று எங்குமே கருத்துச் சுதந்திரம் இல்லை. ஏதாவது கூறினால் என்ன நடக்குமோ என்று நான் அஞ்சுகின்றேன் என்று கூறினார் யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திவரும் காசிநாதர் குமாரி என்ற பெண்மணி. இந்தப் பெண்மணியைப் போன்றே மேலும் பலர் கருத்து வெளியிட்டனர்.

- யாழ்.குடாநாட்டுச் செய்தியாளர்கள்

 

 

- See more at: http://www.tamilkathir.com/news/13452/58//d,full_art.aspx#sthash.cFIHOvsg.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கருத்து உண்மையானவையாகவும், பெரும்பான்மைக் கருத்தாகவும் இருக்கும் பட்சத்தில் மக்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை என்பது தெளிவாகும்.. கூட்டமைப்பை ஒரு பகடைக்காய்போல் டில்லி உபயோகிப்பது குறித்து அவதானம் தேவை..

ஈழத்துத் தமிழர் ஹிண்டியர்களைப் பற்றி நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.