Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்வதற்காய் போராடிய வரதன் - இதயச்சந்திரன்

Featured Replies

 

வாழ்வதற்காய் போராடிய வரதன் - இதயச்சந்திரன் 

......................................................................

தாய் மண்ணை நேசிப்பவர்கள் மரணிப்பதில்லை. மரணங்கள் நினைவுகளை அழிப்பதில்லை. 

காலம் கடந்து வாழும் வல்லமைகொண்ட நினைவுகள், மரணக்களத்தில் பதிவாவது வரலாற்றில் புதிதானதொன்றல்ல. அந்நினைவுகள் சுமந்த ஒடுக்கப்படும் இனம், தொடர்ந்து போராடும் ஆற்றலை, இழப்பின் வலிகளில் இருந்து உள்வாங்கிக் கொள்கிறது.

அந்தவகையில், உயிர்ப்பூவை முன்னிறுத்தி, தேசத்தின் விடியலிற்காய் போராடிய ஆயிரமாயிரம் மாவீரர்கள் வரிசையில், தோழர் வரதனும் இணைந்து கொள்கிறார்.

உறுதிதளரா விடுதலை வேட்கையும், நேர்த்தியான செயல்வடிவமும், சக தோழர்களை மதிக்கும் மாண்பும், 'IPT வரதன்' என்று தோழமையோடு அழைக்கப்பட்ட சிதம்பரப்பிள்ளை வரதராசாவின் பேராளுமையாகும்.

அவர் பழகுவதற்கு இனியவர். செயல்திறன் மிக்கவர். சுயமுனைப்பில் நம்பிக்கையற்றவர். விடுதலையை நேசித்தவர். இவையனைத்தும் கலந்து அதுவாகவே மாறியவர்.

பல்கலைக் கழகத்தில் சக மாணவனாக, போராட்டக்களத்தில் சக தோழனாக, ஈழப்புரட்சி அமைப்பு கலைக்கப்பட்ட பின் ஆத்ம நண்பனாக, இறுதிவரை எம்மோடு வாழ்ந்தவரே IPT வரதன்.

2007 ஆம் ஆண்டளவில், பிரான்சிற்கு புலம்பெயர்ந்த பின்னரும், தாயக மண் மீதும், அங்கு துன்பத்தில் வாடும் மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்றும், நம்பிக்கையும் குறைவடையவில்லை. 

1990 இல், ஈரோஸ் செயலிழந்த பின்னரும் வன்னியில்தான் வரதன் வாழ்ந்தார். கிராம சேவையாளராக மக்களுக்கு பணியாற்றிக் கொண்டுதானிருந்தார்.

போராட்டகாலத்தில், அமைப்பின் நிறுவனர் தோழர் இரத்தினசபாபதியின் 'தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகர வன்முறையின் பங்கு' என்கிற கோட்பாட்டிற்கு, புதுவடிவம் கொடுத்த போராளிகளில் முதன்மையானவர் இவர். 

தாயகத்திற்கு அப்பால், தூரத்தில் கேட்ட இடிமுழக்கத்தின் மேகத்திரள் அவர்.

பொருளாதார இலக்குகளை துல்லியமாக மதிப்பீடு செய்து, எதிரியின் உட்கட்டுமானங்களை அதிரவைத்த நிகழ்வுகளின் முன்னிலைத்தளபதி.

லெப் .ஜெனெரல். டென்சில் கொப்பேகடுவ இவரைத் தேடிச்சென்று சந்தித்த நிகழ்வொன்றினை இங்கு குறிப்பிட்டுச் சொல்வது பொருத்தமாகவிருக்கும்.

பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளுக்கான கல்லூரியிலும், பாதுகாப்பு கற்கை நெறிகளுக்கான றோயல் கல்லூரியிலும் பயிற்சி பெற்ற டென்சில் கொப்பேகடுவவின், தீவிர கவனத்திற்கு உட்பட்ட போராளியாக IPT வரதன் இருந்திருக்கிறார்.

கொழும்பிற்கு வெடிபொருட்கள் கடத்தும் சூட்சுமம் குறித்து, வரதனின் வாயைக் கிளற கொப்பேகடுவ முயற்சித்தபோது, அது ' வெங்காயக் கதை' என்று இருபொருள்படப் பதிலளித்தாராம் வரதன். 

அதுமட்டுமல்லாது, பலமற்று இருந்த எங்களை, பலமுடைய மனிதர்களாக மாற்றியதும் உங்கள் நடவடிக்கைகள்தான் என்று நேரடியாகவே அவரிடம் கூறியிருந்தார்.

துணிவும், அறிவாற்றலும், அரசியல் தெளிவும், சக மனிதர்கள் மீதான பற்றும் கொண்ட போராளிகளே, சரியான போராட்டப் பாதையின் வழிகளைக் கண்டடைவார்கள். ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்தினை அணிதிரட்டுவார்கள். 

வரதனின் போராடப் பங்களிப்பு இதனோடு பொருந்திச்செல்வதை பல தளங்களில் நாம் கண்டுள்ளோம். 

இவரின் போராட்ட கால அனுபவங்கள், அது விட்டுச் சென்ற கனதியான செய்திகள் யாவும், ஈழமக்களின் வீரம்செறிந்த, துயர்மிகுந்த வரலாற்றின் பக்கங்களில் எழுதப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வீரர்கள் இறந்தாலும் வாழ்வார்கள் 
தாம் நேசித்த மக்களுடன் .
 
பகிர்விற்கு நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.