Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 இலட்ச ரூபாய் இருந்தால் போதும் தமிழீழச் சிக்கல் குறித்து படமெடுப்போம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
30 இலட்ச ரூபாய் இருந்தால் போதும் தமிழீழச் சிக்கல் குறித்து படமெடுப்போம் - இயக்குனர் வெற்றிவேல்
 
2013 மார்ச் மாதத்தில் நடந்த தமிழக மாணவர்களின் ஈழ அதரவுப்  போராட்டத்தைப் பற்றி, பத்திரிகையாளர் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கிய 'அறப்போர்' என்ற ஆவணப்படம், ஜூலை 28 ஞாயிறு அன்று மாலை சென்னை அண்ணாசாலை புக் பாய்ண்ட் அரங்கில் வெளியிடப்பட்டது. 
 
உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர்கள் அமீர், ம.செந்தமிழன் ஆகியோர் பேசினர். தலைமையுரையாற்றிய, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்:
 
அண்மையில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட் மற்றும்  சூடானுக்கான அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் தனித்தூதர் வில்லியம்சன் ஆகியோர் ஒரு அறிக்கை தயாரித்து அமெரிக்க அரசுக்கு அளித்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு நடந்த படுகொலையில் அமெரிக்கா வெறும் பார்வையாளராக இருந்தது எனக் கண்டிக்கும் ஆல்பிரைட் - வில்லியம்சன் அறிக்கை இனி “இலங்கையில் இன நல்லிணக்கத்திற்கு அமெரிக்கஅரசு இலங்கை அரசுக்கு துணை புரிய வேண்டும்” என அறிவுறுத்துகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் 13ஆவது திருத்தத்தின் படியான தீர்வு என்ற இந்தியாவின் நிலைப்பாடும் அமெரிக்க வல்லரசின்  “நல்லிணக்கத்திற்குத் துணைபுரிந்தது” என்ற நிலைபாடும் சந்திக்கிற புள்ளி இது. 13ஆவது சட்டத்திருத்தம் என்ற வரம்புக்குள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையை புதைக்க பன்னாட்டுச் சதி வலை விரிக்கப்பட்டிருக்கிறது.
 
13ஆவது சட்டத்திருத்தத்தில் தமிழர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்ற போதும், அதைக்கூட ஏற்கமறுக்கிறது சிங்களம். போருக்குப் பின்னால், தமிழீழப் பகுதிகளில் மிகப்பெரும் பிரச்சினையாக இருப்பது அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேள்வி கேட்பாராற்ற, மிகத்தீவிரமான சிங்களக் குடியேற்றமாகும். இதற்கு, 13ஆவது சட்டத் திருத்தம் ஏற்கெனவே அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. 
 
தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, கவனமாக தமிழர்களும் பிற இனத்தவர்களும் வாழும் பகுதி எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் தாயகம் மட்டுமல்ல, அங்கு பிற இனத்தவர்களும் வாழ்கிறார்கள் எனக் காட்டுவது. இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, சிங்களக் குடியேற்றங்களை அப்பகுதிகளில் தீவிரப்படுத்துவதே இதன் நோக்கம். அரசாங்கம், வடகிழக்குப் பகுதிகளில் ஏழைகளுக்கு நிலத்தைப் பகிர்ந்தளிக்கும்போது இலங்கை முழுவதுமுள்ள இனத்தவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறது. அதன்படி, சிங்களர்களுக்கு நிலங்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டது. இந்தியாவும் இதைத்தான் விரும்புகிறது. 
 
காவல்துறை, நிதி, காணி அதிகாரங்கள் எதுவுமில்லாத 13ஆவது சட்டத்திருத்தத்தால், வரதராஜபெருமாள் என்பவரை இந்திய இராணுவ வண்டியில் கொண்டு வந்து தமிழர் மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்க வைத்தார்களே, அவர், இந்தியப் படையுடனேயே கூடவே வந்தார். ” எனது அலுவலகத்தி்ல் ஒரு நாற்காலி வாங்குவதற்கக் கூட, ஜனாதிபதி மாளிகைக்கு விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டும், இதில் எந்த அதிகாரமுமில்லை” என அவர் சொன்னார். இந்த 13ஆவது திருத்தததை ஏற்றுக்கொள்ளாமல் தமிழீழத் தனிஅரசு கோரிக்கையில் பிரபாகரன் பிடிவாதமாக இருந்ததால்தான் இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டுவிட்டது என காங்கிரசாரும் ஆரிய - பார்ப்பனிய ஊடகங்களும் முழு வீச்சோடு கருத்துப் பரப்பி வருகின்றன. 
 
வரும் ஆகஸ்ட் 8ஆம் நாள் டெசோ சார்பில் 13ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் வேறு நடக்கிறது. இலக்கு என்பது தமிழீழம் தான் என்றாலும், இடைக்காலத்தில் தமிழீழத் தமிழர்கள் மூச்சு விடுவதற்காக 13ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றக் கோருகிறோம் என்கிறது, திமுக. தமிழீழம் அமையப் பொதுவாக்கெடுப்பு வேண்டுமென்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய செயலலிதாவும் இதையேதான் சொல்கிறார். இந்தக் கட்சிகள், 13ஆவது சட்டத்திருத்தத்தை, அதிகாரப்பகிர்வுக்கான முதல் படி என்கின்றன. இலங்கை - இந்திய அரசுகளோ இதை இறுதித்தீர்வு என்கின்றன. 
 
எப்படி ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் மோசடியானது என தமிழக மாணவர்கள் போராடினார்களோ, அதைப் போல 13ஆவது சட்டத் திருத்தம் மோசடியானது, அதை ஏற்க மாட்டோம் எனப் போராட வேண்டும். அமரிக்கத் தீர்மானத்தை எரித்துப் போராடியதைப் போல, 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும். இந்தப் போராட்டத்திற்கான தயாரிப்புக் கால எல்லையாக, இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கவிருப்பதை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கி.வெங்கட்ராமன் பேசினார். 
 
இயக்குநர் அமீர் தமிழ் ஈழச்சிக்கல் பற்றி தமிழக இயக்குநர்கள் ஒரு  படம் எடுக்க இயலாதது குறித்தும் தனக்கு அப்படி ஒரு விருப்பம் இருந்தும் உதவி கிடைக்காதது குறித்தும் மனம் திறந்து பேசினார். அவரது பேச்சின் போது எந்த அரசியல்வாதியும் ஈழம் கிடைக்க உதவ மாட்டார்கள் என்றும் விரிவாகப் பேசினார்.
கூட்டத்தின் நிறைவில், ஆவணப்பட இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர்,. “பல இயக்குநர்கள் தமிழீழச் சிக்கல் குறித்து ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதை தனது கனவாக அறிவிக்கின்றனர். ஆனால், யாரும் அதுபோன்றதொரு படத்தை எடுக்கவில்லை. எடுக்கமாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால், இந்திய அரசிடம் தேசிய விருது வாங்குவதே இலட்சியம் என செயல்படும் இயக்குநர்கள் தான் இங்கு அதிகமாக இருக்கின்றனர். எனவே, இந்திய அரசைப் பகைத்துக் கொண்டு படமெடுக்கும் இயக்குநர்கள் இங்கு இல்லை. கோடிகளெல்லாம் வேண்டாம், எனக்கொரு 30 இலட்ச ரூபாய் இருந்தால் போதும் தமிழீழச் சிக்கல் குறித்து நாங்கள் படமெடுப்போம். அதற்கான முன்னோட்டமாகத் தான் இந்த ஆவணப்படங்களை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்” என்றார். 
 
அரங்கு நிறைந்த நிகழ்வின் முடிவில், பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'அறப்போர்' ஆவணப்படம் மீண்டும் திரையிடப்பட்டது.  

 

http://andhimazhai.com/news/view/arappor-29-07-2013.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.