Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத்தைப் வளர்த்தெடுக்க வேண்டியபணி

Featured Replies

மனிதன் ஒரு சமூகப்பிராணி. தேசியம் சமூகம் வாழ்வில் ஒரு பிரதான கட்டமைப்பும் ஒரு பிரதான வாழ்நிலை வடிவமுமாகும். வாழ்நிலை முன்னேற்றத்திற்கு தேசிய அரசியல், தேசிய கலாச்சாரம் தேசிய சிந்தனை என்பன பிரதான அம்சங்களாகும். மனிதனின் குழுநிலைக் கலாச்சார குறுவட்ட மனப்பாங்கிற்குப் பதிலாக பரந்த தேசிய கலாச்சாரத்தையும் தேசிய மனப்பாங்கையும் கட்டி எழுப்புவது தேசியவாதத்தின் தலையாக பொறுப்புக்களுள் ஒன்றாகும்.

தமிழீழத் தேசியமானது ஒரே வேளையில் முப்பரிமானங்களைக் கருத்தில் எடுக்கவேண்டியதாய் உள்ளது. ஒன்று அகரீதியான அர்த்தத்தில் தமிழீழ மக்களுக்கு உள்ளேயான தேசிய வளர்ச்சி என்பது;

இரண்டாவதாக தமிழீழ மக்கள் நேரடியாகப் பொருதும் சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிரானதும், சுயாதிபத்தியத்திற்குமான நிலை என்பது; மூன்றாவதாக

சர்வதேச சக்திகளை எதிர்கொள்வது என்பது.

இதில் நேரடி எதிரியான சிங்கள இனவாத

சக்திகள் தனித்து நின்று செயற்படாது அவர்கள் வெளிநாட்டுச் சக்திகளையும் தம்மிடம் ஒருங்கே அரவணைத்துக் கொள்கின்றனர். அரசு எனும் ஒரு பலத்தைப் பயன்படுத்தி சிங்கள இனவாத ஆட்சியாளர்

வெளிநாட்டுச் சக்திகளை இலகுவாகத் தம்பக்கம்

வளைத்து வருகின்றனர். தமிழீழத் தேசியப் போராட்டமானது

ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான போராட்டமாக உள்ளது. ஆனால் இதில் சம்பந்தப்படும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளும் அதனைத் தத்தமது நலன்களுக்கேற்பவே கையாண்டும் அணுகியும்

வருகின்றன. இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு

அரசியற் சூழலில் தமிழீழ விடுதலைப் போராட்டமே

பெரிதும் முற்போக்கானது.

இன்றைய நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஒருபுறம் தனது நேரடி எதிரியான சிங்கள இனவாதத்தையும்

அதன் வெளிநாட்டு ரீதியான கூட்டாளிகளையும் எதிர்கொள்ள வேண்டியதாய் இருக்கின்றது. மறுபுறம் அது

அகரீதியான தேசிய பகிர்மாணிப்பை, தேசிய மனப்பாங்கை, தேசிய சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டியதாய் இருக்கின்றது.

இடதுசாரிகளோ, அன்றி வலதுசாரிகளோ சிங்கள இனவாதிகள் அனைவரும் இடது, வலது என்பதற்கப்பால்

முதலில் இனவாதிகளேயாவர். இத்தகைய இனவாதிகள்

எத்தகைய வெளிநாட்டுச் சக்திகளுடனும் அப்பட்டமாகச்

சோரம் போவது இயல்பு.இதற்காக மேற்படி இச்சக்திகளையும் தமிழீழத் தேசியம் ஒரேமாதிரி அணுகவேண்டுமென்றில்லை.

சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பைப் பெறவேண்டியது தமிழீழத் தேசியத்திற்கு அவசியம் என்பதால் பரந்த சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பைப் பெறவல்ல வழிமுறைகளைத் தமிழீழத் தேசியம் அதிகம் நடைமுறைச் சாத்தியமான பொறுப்புணர்வுடன் தேடவேண்டியுள்ளது. இப்போது நடைமுறையில் சர்வதேச சமூகத்தின்பால் தமிழீழப் போராட்டமானது அதிக பொறுப்புணர்வைக் காட்டிவருகின்றது.

அதேவேளை சிங்கள இனவாதத்தின் பக்கமுள்ள யுத்த விரும்பிகள், இராணுவ சிந்தனையாளர்கள் யுத்தத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டுவருகின்றனர். இப்போது காணப்படும் சர்வதேச நிலவரத்தின் கீழ் யுத்தமொன்று

வெடிக்குமாயின் அதனைப் “பயங்கரவாதம்” என்று

முத்திரை குத்திவிடலாம் என்ற நம்பிக்கையின் பேரில்

சிங்கள இனவாதிகள் யுத்தத்தைத் தூண்டி வருகின்றனர். இவர்கள் விடுதலைப் புலிகளை வலுச்சண்டைக்கு அழைக்கின்றனர். அவர்கள் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி இனவாதப் படுகொலைகளை அரங்கேற்ற விரும்புகின்றனர்.

ஜே.வி.பியினரின் யுத்தத் தேவை மிகவும் அடிப்படையானது. அது உண்மையில் ஒரு இனவாத

யுத்தத்தின் மூலம் தன்னை முற்றிலும் இராணுவமயப்படுத்த விரும்புகின்றது. அது தனது இனவாதத்தைத் “தேசபக்த யுத்தம்|| என வர்ணித்து தனது உறுப்பினர்களை இராணுவத்தினுள் பெருந்தொகையில் இணைத்துக் கொள்ளவும், காணப்படும் இனவாத சிங்கள இராணுவத்தைத் தனது, அதாவது ஜே.வி.பி இராணுவமாக மாற்றிக்கொள்ளவும்

யுத்தத்தை ஒரு கருவியாக ஜே.வி.பி பயன்படுத்த விரும்புகின்றது. சர்வதேச சமூகம் இத்தகைய சூழ்ச்சிக்கு உடந்தையாகிவிடக்கூடாது என்பதே இப்போதைய தேவையாகும்.

சிங்கள ஆட்சியாளர்களும், சிங்களக் கட்சிகளும் அவை எவையேயாயினும் வெளிநாடுகளை ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தத்தான் முனைப்புக் காட்டுவினவே தவிர, பிரச்சினையைத் தீர்க்க முயல மாட்டா. இந்நிலையில் ராஜபக்ஷ அரசாங்கம் தீர்வைப் பற்றிக் கண்துடைப்பாகக் கதைத்தாலும் செயலில் இராணுவ ஒடுக்குமுறையே அவரதும் திட்டமாகும். அடுத்து இராணுவத்தை எடுத்துக்கொண்டால்

அது 100 வீதம் சிங்கள இராணுவமாகும். அத்துடன் அது முழு அளவில் இனவாத சிந்தனை ஊட்டப்பட்ட இராணுவமாகும். மேலும் நீண்டகாலமாக யுத்தத்தின் நலன்களை அனுபவித்து பெருச்சாளிகளான ஒரு இராணுவ உயர்குழாம் வளர்ந்திருக்கின்றது. அத்தகைய பெருச்சாளிகள் தமது நலன்களுக்காக யுத்தத்தைத் தூண்டிவருகின்றனர். இத்தகைய நிலையில் சிங்கள இனவாதமானது முற்றிலும் யுத்தமுகம் கொண்டு காணப்படுகின்றது.

மேற்படி இத்தகைய உள்நாட்டு வெளிநாட்டுச் சவால்களை எல்லாம் எதிர்கொண்டு தமிழீழத் தேசியமானது தனது அகவழித் தேசிய நிர்மாணிப்பிலும் ஈடுபடவேண்டியுள்ளது.

தேசிய சமூக நிர்மாணமென்பது முதலாளித்துவ சமூக பொருளாதார வளர்ச்சியுடன் தோன்றியது.

ஆனால் இலங்கைத்தீவில் சிங்களவர் மத்தியிலும், தமிழர் மத்தியிலும் அப்படி ஒரு தேசிய முதலாளித் துவ வர்க்கமில்லை.சிங்கள இனவாதப் பெருந்தேசியத்திற்கு

சிங்கள வர்த்தககுழாமும் மத்தியதர வர்க்கத்தினரும்

தலைமை தாங்கினர்.

தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தவரை தலைமை

தாங்கக்கூடிய விழிப்பு நிலையில் தமிழ் மத்தியதர வர்க்கமே

இருந்தது. ஆனால் அந்த மத்தியதர வர்க்கமும் துரதிஷ்டவசமாக அரசாங்க உத்தியோகத்தைச் சார்ந்த

வர்க்கமாக இருந்ததால் அவ் வர்க்கமானது வெளிப்

படையாகத் தமிழ்த்தேசிய அபிலாசைகளைக் கையில்

எடுக்கத் தயங்கியது.அவற்றையெல்லாம் கூட இட்டு நிரப்பவேண்டிய பணி தற்போதைய தலை முறையின் கையில் உள்ளது.தமிழீழப் போராட்ட மானது மத்தியதர வர்க்

கத்தை அதன் மதில்மேற் பூனை நிலையிலிருந்து

இழுத்து தமிழீழப் போராட்டத்தின் பக்கம் கொண்டுவந்து விட்டது.

இது தேசியத்திற்கு அகரீதியாகக் கிட்டிய ஒரு நல்ல வெற்றியாகும் அதேவேளை இனவொழிப்பு இராணுவ நடவடிக்கையின் விளைவால் மொத்தம் ஒரு

மில்லியன்வரையான தமிழ்மக்கள் தீவு கடந்து

வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் இப்போது சிங்கள அரச பிடிக்கப்பாலான ஒரு மத்தியதரவர்க்கத்தினாராய்

மாறியுள்ளதால் இவ்வாறு வெளிநாடுகளில் வாழும்

இத்தமிழ் மத்திய தரவர்க் கத்தினரது ஆதரவும் அனுசரனையும் தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு நேரடி

நெம்புகோலாயுள்ளன. தாம் வாழும் பல்வேறு

தேசங்களில் இருந்தும் அவர்கள் எழுப்பும்

குரல்கள், போராட்டத்திற்கு அளிக்கும் ஆதரவு என்பன

தமிழீழத் தேசிய வளர்ச்சிக்கான அத்தியாவசிய

நிபந்தனைகளுள் ஒன்றாய் மாறியுள்ளது.

இந்நிலையில் தற்போது உள்ளும் புறமும் தமிழீழத் தேசிய மனப்பாங்கையும் தேசிய சிந்தனையையும் தேசிய அபிலாசைகளையும் வளர்த்தெடுக்க வேண்டிய பணி முதன்மை பெற்றுள்ளது. 21ஆம் நூற்றாண்டுக்குரிய உலகளாவிய உள்நாட்டு வளர்ச்சிநிலமைக்கேற்ப தமிழீழத்

தேசியத்தைப் புதுமெருகுடன் வளர்த்தெடுக்க வேண்டிய

பணி இப்போது உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் பரந்துவாழும் அனைத்து தமிழீழம் பற்றிய நல்லெண்

ணங்கொண்டவர்களின் கரங்களிலுமுள்ளது. சிறிய இனம் ஆனால் பெரிய தியாகங்களுடன் தனது உயரிய அபிலாசைகளைக் கையில் ஏந்தி நிற்கின்றது. தமிழீழத்தைத் தவிர வேறுவழிகளில் அவர்களுக்கு வாழ்வில்லை என்றே வரலாற்றுஅனுபவம் சொல்லுகின்றது.

http://www.viduthalaipulikal.com/file/docs...6/04/129-10.pdf

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை. நாங்களே பாதிக்கப்படும் இனம் ஆக இருக்கின்றபோது, நடுநிலை என்ற பாத்திரம் என்று எமக்குள் சிலர் சொல்லிக் கொள்வது சுத்துமாத்து. எதிராளியின் அடிவருடியாகக் தான் அவனால் இருக்கமுடியும். அதற்குப் போடப்படும் முகமூடி தான் நடுநிலமை.

எம் மக்களுக்குள்ள பிரச்சனையைத் தான் நாம் உலகிற்கு ஏந்திச்செல்ல வேண்டும். அது தான் காலத்தின் தேவையும் கூட!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.