Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவள்-மறுவாசிப்புக்காக 12 வருடம் பின்னர் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவள்

 

 

1

மண்ணும் விண்ணும் மட்டுமல்ல

மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல்.

அதை எப்படி ஆரம்பிப்பது?

யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து?

இல்லை எடுத்துச் செல்லுங்கள்

உங்கள் அதீதக் கற்பனைகளை.

மதுவும் விந்தும் ஊறிய சொற்களை.

கனவுவரை மண் தோய அவள்

இட்ட அடிகளில் உள்ளதே கவிதை.

அவள் பி.ஏ. முடிக்கவில்லை என்றார்கள்.

அவள் காட்டில் என்றார்கள்.

மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள்.

 

 

நானோ அவளை

கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன்.

நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா

அல்லது அவள் மீதான மதிப்பினிலா.

கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன்

நடுங்கும் என் கால்களை.

அவள் அதே அமைதி ததும்பும் முகமும்

குருத்துச் சிரிப்புமாய்

முகவரி கேட்காதீர்கள் என்றாள்.

வாழ்வு புதிர்கள் போன்று

புத்தியால் அவிழ்க்கக் கூடியதல்லவே.

ஒரு பெண்

கண்ணகியும் பாஞ்சாலியும் போல

ஆண் கவிஞர் வடிவமைத்த படைப்பல்லவே.

காமம் தீராது எரியும் உடலுள்

எரியாத மனதின் தீயல்லவா காதல்.

ஒடுக்கப்படுகிறபோது மனசில் எரிகிறது

மற்றும் ஒரு தீ.

 

 

பல்கலைக் கழகச் சுவர்க் காட்டுள்

அவளும் அவனும் ஒருசோடி ஆந்தைகளாய்

கண்படாதிருந்த

காலங்களை நான் அறிவேன்.

அப்போதும் கூட

இன்னும் மூக்கைப் பொத்தினால்

வாய் திறக்கத் தெரியாத

அப்பாவிப் பாவமும் அபிநயமும் பூண்டு

ஒரு யாழ்ப்பாணப் பெட்டையாய்த் திரிந்தாள்

பின்னர் நரகம் தலைமேல் இடிந்தது.

 

 

2

வெண் புறாக்களும்

வெண் புறாக்களை வரவேற்றவரும் மோதிய

88இன் குருதி மழை நாட்கள்

முதல் குண்டு வெடித்ததுமே

நெஞ்செல்லாம் வன்புணர்ச்சி வெறியும்

உடலெல்லாம்

பெண்கள் இரத்தம் தோய்ந்த லிங்கமும்

கையில் துரு கனக்கும் றைபிளுமாய்

புறாக்கள் காக்கிக் கழுகானதெப்படி?

μவேற்ற கரங்கள் ஏந்திய பூச்செண்டு

துப்பாக்கியானது எப்படி.

 

 

மேன்மை தங்கிய பாதுசாவோ

டெல்லியில்

அவரது கிரீடத்தை அணிந்தபடிக்கு

அவரது விதூசகன் ஒருவன் கொழும்பில்.

நமது கோபங்களை எல்லாம் எடுத்து

விதி வனைந்து தந்த பீமனோ

கண் சிவக்க ஈச்சங்காட்டுக்குள்

இவர்களிடை சிதறியது காலம்.

இவர்களிடை சிக்கி அழிந்தது

ஆயிரம் வருட நட்பின் வரலாறு.

 

 

3

சேறான பாதையில் சிதறியது ஒரு டாங்கி.

கீழே இரண்டு சீக்கியரின் பிணங்கள்.

தெருவில் போனவர் அடைக்கலம் புகுந்த

கோவிலுள் பாய்ந்தது துப்பாக்கி வேட்டு.

அவன் தரையில் சாய்ந்ததும்

அவள் சீக்கியன்மேலே அலறிப் பாய்ந்ததும்

றைபிளைப் பற்றி முகத்தில் உமிழ்ந்ததும்

சுடடா என்னையும் என அதட்டியதும்

கண்டிலர் கண் இமைத்தவர்கள்.

என் தாய் மண்ணில் தலை குனிந்ததே

எனது கலாச்சாராத் தாயகம்.

யாருமே நம்பவில்லை.

அந்த அப்பாவிப் பெண்ணா?

கேட்டு வாய் பிளந்தவர் எல்லாம்

கண்கள் பிளக்கக் கதறி அழுதனர்.

 

4

விடைபெறு முன்னம்

அது அண்ணன் தம்பி சண்டை என்றாள்.

இருவரும் இழைத்தனர் தவறு என்றாள்

இருவரும் இன்னும் தவற்றை எண்ணி

மனம் வருந்தலையே என்கிறபோது

கண்ணும் மனமும் குμலும் கலங்கினாள்.

இருவரும் மீள இணைவர் என்றாள்

தவிர்க்கொணாதது வரலாறென்றாள்.

தழைகள் அறுவதும் வரலாறென்றாள்.

பின்னர் விடைதரும்போது

கூந்தலை ஒதுக்கி நாணிச் சிரித்தாள்.

அவளைக் கண்டது மகிழ்ச்சி.

அவளுடன் பேச்சோ மேலும் மகிழ்ச்சி.

பாதுகாப்பாய் விடைபெற்றதும் மகிழ்ச்சி.

அந்த இரவின் கனவும் மகிழ்ச்சி.

2001

Edited by poet

Quote: "என் தாய் மண்ணில் தலை குனிந்ததே

எனது கலாச்சாராத் தாயகம்"

 

இதில் தலை குனிய என்ன இருக்கு?

 

நயவஞ்சக கள்ளென்னத்துடன் இறக்கப்பட்ட காடையர்கள் அவர்கள்.

 

அவர்களிடம் மன்னிப்பு கேட்பதா?

 

நாங்கள் விட்ட தவறுதான் என்ன? அவர்களின் காலில் விழுந்து யாசகம் பெறவில்லையென்பதா?

 

கவிஞரே என்னதான் சொல்ல வருகின்றீர்கள்

பல்கலைக் கழகச் சுவர்க் காட்டுள்

அவளும் அவனும் ஒருசோடி ஆந்தைகளாய்

கண்படாதிருந்த

காலங்களை நான் அறிவேன்.

அப்போதும் கூட

இன்னும் மூக்கைப் பொத்தினால்

வாய் திறக்கத் தெரியாத

அப்பாவிப் பாவமும் அபிநயமும் பூண்டு

ஒரு யாழ்ப்பாணப் பெட்டையாய்த் திரிந்தாள்.

 

இதுவா யாழ்ப்பாண  மூக்கை பிடித்தால் வாயை "ஆ" என்னாத அப்பாவிப்பெட்டைகளுக்கு வரைவிலக்கணம். என்ன குழப்பம் இந்த தலைக்குள்?

சோடி, இரவு ஆந்தைகளாய் திரிவதா யாழ்ப்பாணப் பெட்டைகளின் கலாச்சாரம்?

..............

.................

...........

.............

 

வெண் புறாக்களும்

வெண் புறாக்களை வரவேற்றவரும் மோதிய

88இன் குருதி மழை நாட்கள்

 

கிந்திய வெண்பூறாக்களை வரவேற்றது  காட்டுப் புலிகள் என்று கூற நா கூசியதா? <_<

.............

.............

புறாக்கள் காக்கிக் கழுகானதெப்படி?

μவேற்ற கரங்கள் ஏந்திய பூச்செண்டு

துப்பாக்கியானது எப்படி.

 

 

சுதந்திரத்துக்கு போராடிய விடுதலைப்புலிகளும், நாடு பிடிக்க வந்து தமிழ் புலிகளுடன் மோதப்பயந்து பொது மக்களை அழித்த  வெண் புறாக்களும் ஒரே தட்டில் வைத்து நிறுக்கப்படுகிறார்கள். 

ரோ கவிதை எழுதினாலும் பொது மக்களை தாக்கிய கிந்திய ராணுவத்தை, பதிலிற்குத்தன்னும் அப்பாவிப் பொது மக்கள் தாக்கியதாக எழுதியிருக்காது? இந்த உருவகத்தில் யார் கிந்திய இராணுவத்தால் அழிக்கப்பட்ட பொது மக்கள் என்று கூற முடியுமா?  கவிதை வேண்டுமென்றே அவர்களை மறைக்கிறது என்பதுதான் உண்மை.  ஆனால் 115,000 கோளைகளை  வெறும் முறத்தால் விரட்டிய புலிகள் மட்டும் வெண்புறக்கள் போல விந்திலும் இரத்தத்திலிலும் தோயந்தவர்கள் அல்ல.

 

இவர்களிடை சிதறியது காலம்.

இவர்களிடை சிக்கி அழிந்தது

ஆயிரம் வருட நட்பின் வரலாறு.

 

டெல்கி கிந்தியத்துடன் இலங்கை தமிழருக்கு ஆயிரம் வருட நட்பு இருந்ததை சரித்திரத்தால் கூற முடியுமா? 1000 வருடத்திற்கு மேல் ராஜராஜனும், மகனும் கங்கை கொண்ட கதை நடந்து. ஆயிரம் வருடங்களுக்கு மேல்  ஆயிற்று டெல்கியில் இந்திய எதிர்ப்பு பார்சிகள் வந்து குந்தி.  கிந்தி என்ற பார்சிய மொழி தோன்றியே அறு நூறு ஆணடுகள்.  எத்தனை வருட உறவு பார்சிய டெல்கிக்கும் யாழ்ப்பாணத் தமிழருக்கும்? இவரும்தமிழக  மாணவர் போராட்ட நேரம்  காரிய வாசம் சொன்ன வடக்கில் இருந்து வந்த ஆரியர் சிங்கவர் என்ற தத்துவத்தையா இந்த கவிதையில் சொல்ல முயல்கிறார்?

 

 

அது அண்ணன் தம்பி சண்டை என்றாள்.

இருவரும் இழைத்தனர் தவறு என்றாள்.

 

இன்னொருதடவை ஒரேதட்டில் நிறுக்கும் செயல்.  ஆனால் அவள் சொன்னாள் இருவரும் தவறு இழைத்தனர் என்று. அதை மட்டும் கண்மூடாமல் அவமானக்கட்சிகளை காட்சிகளை காணும் சிலர் ஒட்டுக் கேட்டனர். ஆனால் அவன் போன பின்னர் டெல்கி கபேயில் சொன்னதை நான் மட்டும்தான் தொலை தொடர்பு  மூலம் கேட்டேன்.

 

கழுகாக மாறிய வெண்புறாவை

கனல் கண்ணாலே புலியாகி சுட்டாய்

ஆறாக பெருகும் உன் குருதி

ஆனாலும் தாட்சனியம் கேட்காதே

வான் குண்டால் வேகும் உன் உடம்பு

வரும் வேதனையை வாய்விட்டு சொல்லாதே

தீராமல் போகாது வஞ்சம் உன்னை

பழிவாங்காமல் ஆறாது  என் நெஞ்சம்!

 

இதுதான் அவன் சொன்னது.

 

பல்கலைக் கழகச் சுவர்க் காட்டுள்

அவளும் அவனும் ஒருசோடி ஆந்தைகளாய்....

...............

................

கண்டிலர் கண் இமைத்தவர்கள்.

என் தாய் மண்ணில் தலை குனிந்ததே

எனது கலாச்சாராத் தாயகம்.

 

 

இவர் தனது கலாச்சாரம் பார்சிய பெண்ணடிமைத்துவம் எங்கிறார். ஆனால் உண்மை,சுழகெடுத்து புலி அடித்த மறவர்கள்தான் தமிழ் பெண்கள். அதுதான் சங்கத்தமிழ் கலாச்சாரம்.

 

சோடி ஆந்தைகளை ஏன் இந்த கவிதைக்குள் திணித்தார் என்பது இன்னமும் புரியவில்லை. அந்த பெண் புலியாக நடந்து கொண்டாளாகில் சோடி சேர்ந்த மற்ற ஆந்தை யார். சிங்களமா?  மேலும் சோடி ஆந்தைகளாய் திரியும் அப்பாவி யாழ்ப்பாண கலாச்சராம் கூட ஏன் இங்கே வந்தது என்பது தெரியவில்லை. வந்தாரை வாழ வைப்பது தமிழ் பண்பு. ஆனால் விந்தும் இரத்தமும் தொய கெடுத்தாரையும் வரவேற்கும் பண்பு கூட தமிழ் மக்களிடம் இருந்ததா?

 

தன் நாட்டைப் பிடிக்க வந்த கிந்தியத்தை, தன் மானத்தை காக்க எதிர்த்தது பிழை என்ற தத்துவத்தை போதிக்க வருகிறார். அந்த செய்தி சொல்ல இவர் எடுத்த வாகனம்தான்  பாரிசிய பெண் அடிமைத்துவம். 

 

வயிற்று பிழைப்புக்கு எழுதும் குருட்டுக்க் கவிதைகள். இந்த அடிமை மோகத்தை விடவா அவமானம் அந்த பெண்...... <_<

Edited by மல்லையூரான்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126509

 

இருவரும் மீள இணைவர் என்றாள்

தவிர்க்கொணாதது வரலாறென்றாள்.

தழைகள் அறுவதும் வரலாறென்றாள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜீவா, சாம்பவி  இது பல உண்மை சம்பவங்கள் சம்பாசனைகளில் இருந்து உருவான கவிதை.சாம்பவி முன் நிபந்தனைகள் இல்லாமல் இக் கவிதையை மீண்டுமொருமுறை வாசித்துப்பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.