Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றைக் கொலைக்கு நீதி வழங்காத சிறீலங்கா இலட்சப் படுகொலைக்கு நீதி வழங்குமா?

Featured Replies

Eelamurazu%20logo%20lead.jpgபிரித்தானியாவில் இருந்து சிறீலங்காவிற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்ட செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றிய குஹராம் ஷேக் (khurram Sheikh) என்ற பிரித்தானிய சுற்றுலாப் பயணி தங்காலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது காதலியான ரஷ்யப் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்.

2011ம் ஆண்டு நத்தார் தினத்தன்று இந்தக் கொடூரத்தை சிங்களப் பேரினவாதம் நடத்தியிருந்தது. இந்தக் கொடூரக் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் என தங்காலை பிரதேச சபையின் ஆளும் கட்சியின் தலைவர் உட்பட்ட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்தக் கொலை தொடர்பாக பெரிதாக அக்கறைப்படாத சிறீலங்கா அரசு, பிரித்தானியாவின் அழுத்தம் காரணமாகப் பின்னர் இதில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

எனினும், இந்தக் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்காவின் ஆளும்கட்சி உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இந்தப் படுகொலைக்கு நீதி வேண்டும் என பிரித்தானியாவும் கொல்லப்பட்ட குஹராம் ஷேக் இன் சகோதரர் நஸார் ஷேக் மற்றும் பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிமொன் டன்சொக் தலைமையிலான குழுவினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததுடன், சிறீலங்காவிற்குச் சென்று இதற்கான அழுத்தங்களையும் தொடர்ச்சியாகக் கொடுத்தும் வந்தனர்.

குஹராம் ஷேக் படுகொலை தொடர்பில் சிறீலங்கா அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணைகள் குறித்தும் அவர்கள் நேரில் சென்று ஆராய்ந்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளை எட்டும் நிலையிலும் இந்தக் கொலை தொடர்பாக நீதி விசாரணைகளில் எந்தவித காத்திரமான முன்னேற்றங்களும் இதுவரை ஏற்படவில்லை.

05082013%20001.jpgஇத்தனைக்கும் படுகொலை நடந்ததற்கும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதற்கும் கண்கண்ட சாட்சியங்கள் இருந்தும் அத்தனையும் மறைக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில்தான், கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த பிரித்தானியாவின் உண்மையைக் கண்டறியும்  நாடாளுமன்றக் குழுவினருக்கு பேரதிர்ச்சியை சிறீலங்கா அரசு கொடுத்துள்ளது. குஹராம் ஷேக் கொலை தொடர்பாக நீதியான விசாரணைகள் நடத்தப்படாதது குறித்து, சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் நேரில் சென்று நியாயம் கேட்கப்போவதாக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் டன்சுக், சிறீலங்கா அதிபரைச் சந்திக்கும்போது, தங்காலையில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலைக்கு நீதி வழங்கப்படாதுள்ளது குறித்து நியாயம் கேட்கப்போவதாக பிரித்தானிய நாளேடு ஒன்றுக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். இதனைக் காரணமாக்கியே இவர்களுடனான சந்திப்பை  மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் தவிர்த்துள்ளனர்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது எழுப்பவுள்ள பிரச்சினைகள் குறித்து, சந்திப்புக்கு முன்னதாகவே ஊடகங்களிடம் கருத்து வெளியிடுவது முற்றிலும் பொருத்தமற்றது என்று காரணம் கூறி இவர்களுடனான சந்திப்பை இரத்துச் செய்ததாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சுத் தரப்பு பின்னர் விளக்கம் கொடுத்துள்ளது. எனினும், இவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் சந்திப்புக்களை நடத்திய இன்னொரு ராஜபக்ச பரம்பரை ஆட்சியாளரான பசில் ராஜபக்ச, படுகொலைக்கு மன்னிப்புக் கோரி, விரைவில் குற்றவாளிகளை சட்டத்தில் முன் நிறுத்துவதாக வாக்குறுதி அளித்து பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினரை சாந்தப்படுத்தியுள்ளார்.

ஆனாலும், சிறீலங்காவின் இந்த அவமதிப்பு பிரித்தானியாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியில் முறுகல் நிலையைத் தோற்றுவித்தள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். ஏற்கனவே இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானியா அரசு கவலை தெரிவித்திருந்தது. இதனால்தான் நவம்பர் மாதம் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் சிறீலங்காவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மகாராணி கலந்து

கொள்வதைத் தவிர்த்து, இளவரசர் சார்ள்சை அனுப்பிவைக்கவும் முடிவு செய்திருக்கின்றது.

அத்துடன், மனித உரிமைகள் தொடர்பான கவலைகள் குறித்து சிறீலங்காவுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான வாய்ப்பாக பொதுநலவாய உச்சி மாநாட்டை பயன்படுத்திக் கொள்ளப்போவதாகவும் பிரித்தானியா அறிவித்திருந்தது. ஆனால், இப்போது தமது நாட்டுப் பிரசை ஒருவரின் படுகொலைக்கு, சிறீலங்காவிடம் நீதி கேட்டுப்போராட வேண்டிய நிலைக்கு பிரித்தானியா தள்ளப்பட்டிருக்கின்றது.

இன்னொரு நாட்டுக் குடிமகன் மீது தமது நாட்டுக் குடிமக்கள் நடத்திய கொடூரத்திற்கு நீதி வழங்கப் பின்னடிக்கும் மகிந்த அரசு, தமது கட்டளையின் கீழ் தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையில் இலட்சக் கணக்கான தமிழர்களின் படுகொலைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் நீதியை வழங்கும் என்றும் பிரித்தானியா உட்பட இந்த உலக நாடுகள் எவ்வாறு எதிர்பார்க்கின்றன?

நல்லிணக் ஆணைக்குழுவின் மூலம் தமிழர்களுக்கு நீதியை வழங்குங்கள் என்று குற்றம் புரிந்தவர்களையே நீதிபதியாக அமரவைத்துள்ள இந்த உலக நாடுகள், பிரித்தானியக் குடிமகனின் படுகொலைக்குக் கிடைக்காத நீதியின் மூலம் தமிழர்களுக்கு என்றுமே சிங்களப் பேரினவாதம் நீதியை வழங்கிவிடாது என்பதை உணர்ந்துகொள்ள அதிக காலம் எடுக்காது.

ஆசிரியர் தலையங்கம்

நன்றி: ஈழமுரசு

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.