Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணப்பொதி வெடிக்குமா? அமெரிக்கச் சூழ்ச்சி பலிக்குமா? - சோழ.கரிகாலன்

Featured Replies

இது ஒரு துப்பறியும் திரைப்படம் போலவே தொடர்கின்றது. இந்தக் கதையின் நாயகன் இறுதியில் வெற்றிபெறுவான். இது போலவே ஸ்நோவ்டென்னிடம் இருக்கும் ஆவணங்கள் அவருக்கு வெற்றியையே அளிக்கும்.

05082013%20009.jpg

அமெரிக்காவின் கொடூர வேட்டையிலிருந்து தன்னைத் தப்புவித்துக் கொள்ளும் மர்ம ஆயுதமாகத் தனது தகவல்களைப் பயன்படுத்துவதன் மூலம் தன்னை மௌனமாக்க முயலும் அமெரிக்காவின் அதிகாரத்துவ மையத்தையே மௌனமாக்கி விடுகின்றார் என ஏற்கனவே ஸ்நோவ்டென்னைச் சந்தித்துப் பல விபரங்களை வெளிக்கொணர்ந்த கிளென் கிறீன்வால்ட் நிறுவனத்திலிருந்து ஐலீன் சலிவன் கூறியுள்ளார். அவரிடமிருக்கும் ஆவணங்களே அவருக்குரிய சிறந்த உயிர்க் காப்புறுதியாகும். உண்மையில் ஸ்நோவ்டென்னிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று அமெரிக்கா முழங்காலில் நின்று இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும் எனவும் இவர் தெரிவித்துள்ளார்.

05082013%20010.jpgஸ்நோவ்டென் அமெரிக்காவின் இரு பெரும் உளவு நடவடிக்கைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார். இதற்காக ஸ்நோவ்டென் மேல் மூன்று குற்றங்களைப் பதிவு செய்துள்ளனர். அதில் அமெரிக்காவிற்கு எதிரான உளவு பார்த்தல் என்பதும் ஒன்று. அதற்காக மட்டுமே 30 வருடச் சிறைத் தண்டனை வழங்க முடியும். மூன்று குற்றங்களும் சேர்ந்தால் மரணதண்டனை என்பது நிச்சயமாகும்.

ஸ்நோவடென் எக்காரணம் கொண்டும் அமெரிக்கா தொடர்பான மேலதிக தகவல்களை வழங்கினால் உடனடியாக அவருக்கான தற்காலிகத் தஞ்சம் இரத்துச் செய்யப்படும் என விளாடிமிர் புட்டின் தனது அமெரிக்க விசுவாசத்தை நிரூபித்துள்ளார். ஆனாலும் ரஷ்யாவின் வெளியுறவுத் திணைகக்ளம் எக்காரணம் கொண்டும் ஸ்நோவ்டென்னை அமெரிக்காவிடம் வழங்கமாட்டோம். இதுவரை காலமும் வரலாற்றில் அமெரிக்கா எம்மிடமோ நாம் அமெரிக்கா

விடமோ யாரையும் ஒப்படைத்தது இல்லை எனக் கூறியுள்ளார்.

ஸ்நோவ்டென் ஒரு மரணப் பொதியினை (Death Package) உருவாக்கி உள்ளதாக கிளென் கிறீன்வால்ட் தெரிவித்துள்ளார். ஸ்நோவ்டென் பல ஆவணங்களையும் அமெரிக்க அரசையே பெரும் சிக்கலுக்குள்ளாக்கும் தகவல்களையும் தனது கணினி நிபுணத்துவத்தின் மூலம் Cryptage முறையில் பாதுகாத்து வைத்திருப்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதே முறையில் அமெரிக்கா தனது புலனாய்வாளர்கள் அல்லது உளவாளிகள் மூலம் ‘தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமாயின் அத்தனை தகவல்களுக்கும் தன்னிச்சையாகவே மக்களுக்கு வெளிப்டுத்தப்படும்’ என ஸ்நோவ்டென் கூறியதாக கிளென் கிறீன்வால்ட் அமெரிக்க அரசாங்கத்திற்கு மேலும் ஒரு குண்டைத்து£க்கி வீசியுள்ளார்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் அமெரிக்கா தனது எதிரிகளை எப்படி அழிக்கும் என்பது தேசியப் பாதுகாப்புச் சபையின் முன்னாள் அதிகாரியும் கணினி நிபுணருமான ஸ்நோவ்டென்னிற்குத் தாராளமாகவே தெரியும். அதனாலேயே இந்த மரணப்பொதி தனது உயிருக்குப் பாதுகாப்பாக அமையும் என ஸ்நோவ்டென் இதனை உருவாக்கி இருக்கலாம்.

‘ஒபாமாவின் நிர்வாகம் என் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க முயன்றால் அவர்கள் மக்கள் முன்னால் மக்களின் கடுமையான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலையை உருவாக்குவேன்’ என்று ஸ்நோவ்டென் ஒரு இணையக் கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். இதுவே இவரின் மரணப் பொதியின் எச்சரிக்கை.

ஸ்நோவ்டென்னிடம் அமெரிக்க அரசையும் அதன் நிர்வாகத்தையும் ஒரு நிமிட நேரத்திற்குள் பாதிப்புக்குள்ளாக்கும் அளவிற்கு மிகவும் கனமான தகவல்கள் உள்ளன. இதுவரை வரலாற்றில் யாரிடமும் அமெரிக்க அரசை எச்சரிக்கக் கூடிய இந்த அளவு தகவல்கள் கிடைத்திருக்கவில்லை என கிறீன்வால்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உளவுக் குற்றங்களில் சிக்கியிருப்போருக்காக வாதாடும்  வழக்கறிஞர் மார்க் சையித், ஸ்நோவ்டென்னும் கிறீன்லாண்டும் செய்வது GRAYMAIL என்று கூறியுள்ளார். ‘பிளெக்மெய்ல்’ எனும் ஒருவரது தகவலை வைத்து அவரை மிரட்டும் முறைமை போல் கிரேமெய்ல் என்பது உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்படடிருக்கும் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அரசாங்கத்திற்கெதிரான தகவல்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டித் தன் மீதான குற்றச்சாட்டை நீக்க மிரட்டுவதேயாகும்.

‘ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு தகவலை வெளியிடும் போதும் ஒருவரது குற்றப்பத்திரிகை நீண்டுகொண்டே போகும். அவருக்கான தண்டனையும் அதிகரித்தே செல்லும். ஸ்நோவ்டென் என்னை இன்னமும் தொடர்பு கொள்ளவில்லை. தொடர்பு கொண்டால் நான் ஸ்நோவ்டென்னை வாயைப் பொத்திக் கொண்டு இருக்கும்படியே எச்சரிப்பேன். அத்தோடு ரஷ்ய உளவாளியான Anna chapman  திருமணக் கோரிக்கையை உடனடியாக ஏற்கும்படியும் கூறுவேன்’ என்று கூறியுள்ளார். Anna chapman 2010 ஆம் ஆண்டு மேலும் ஒன்பது உறங்குநிலை உளவாளிகளுடன் அமெரிக்க அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்டவர். இவர் ஸ்நோவ்டனைத் திருமணம் செய்ய விரும்புவதாக வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

கிறேமெயில் என்பது பொதுவான தற்பாதுகாப்பு இராஜதந்திரமாகும். முப்பது மூண்டுகளிற்கு முன்னர் இதனை முறியடிக்கும் வகையில் அமெரிக்கக் குற்றவியல் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஸ்நோவ்டென்னிடம் இருக்கும் ஆவணங்கள் மூலம் அவர் தனது குற்றப்பத்திரிகையை கனமற்றதாக்கித் தண்டனையைக் குறைக்கவோ அல்லது நிம்மதியாக உலகின் ஏதாவது ஒரு மூலையில் வாழவோதான் முடியும் என மார்க் சையித் கூறியுள்ளார்.

ஆனாலும் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்கள் ஸ்நோவ்டென் ஏற்கனவே பல சேதங்களை தேசியப் பாதுகாப்பிற்குச் செய்து விட்டார். ஆனால் இதன் பாதிப்புக்களை அறிய நாளாகும் என்று தெரிவித்துள்ளார்கள். அவர்களிற்குத் தானே ஸ்நோவ்டென்னிடம் தாங்கள் எந்த அளவிற்குச் சிக்கி இருக்கிறோம் என்பது தெரியும். அமெரிக்கா தனது தகவல்கள் எதுவும் மக்கள் மயமாகிவிடக் கூடாது என்பதில் இருக்கும் அக்கறையையே தனது ஆயுதமாக்கி ஸ்நோவ்டென் தன்னை நாடுகடத்தி அமெரிக்காவிடம் ஒப்டைப்பதிலிருந்தும் அல்லது அமெரிக்க அரசின் உளவாளிகளால் கொல்லப்படாமல் இருக்கவும் தன் மீதான தண்டனைகளிலிருந்தும் தப்பிக்கவும் வியூகமைத்து இருப்பது தெரிகின்றது. இந்த வியூகத்திற்கான பலன் உடனடியாகக் கிடைத்திருப்பது போல் தான் தெரிகின்றது.

அமெரிக்காவின் தலைமை அரச வழக்கறிஞர் எரிக் ஹோல்டர் அவசர அவசரமாக ‘நாம் ஸ்நோவ்டென்னைக் கொல்லவோ சித்திரவதை செய்யவோ மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நீதி அமைச்சருக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் ஹோல்டர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘ஸ்நோவ்டென் மரண தண்டனைக்குரிய குற்றங்களையே செய்திருந்தாலும் அவருக்கு நாம் மரணதண்டனை வழங்கமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றேன். அத்தோடு சித்திரவதையும் செய்ய மாட்டோம். சித்திரவதை அமெரிக்கச் சட்டத்தினால் தடைசெய்யப்பட்டுள்ளது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிக மோசமான சித்திரவதைக் கூடமான குவாண்டனாமோவையும் Black sites எனப்படும் தேசிய பாதுகாப்புச் சபை மற்றும் சிமிகி வின் சித்திரவதைக் கூடங்களைப் பல நாடுகளிலும் வைத்திருக்கும் அமெரிக்கா சித்திரவதையைச் சட்டமூலம் தடுத்திருப்தாகக் கூறுவது பெரும் முரணாகவே தெரிகின்றது. அமெரிக்க அரசாங்கம் தடாலடியாக இந்த அறிவிப்பை விட்டிருப்பது ஸ்நோவ்டென்னின் ரஷ்யத் தற்காலிக தஞ்சக் கோரிக்கையின் அடிப்படையைத் தகர்க்கவே.

மரணதண்டனை விதிக்கப்படும் என்றால் மரணதண்டனைக்கு எதிரான நாடுகள் ஸ்நோவ்டென்னிற்குத் தஞ்சம் கொடுக்க முன்வரலாம். மனித உரிமைகள் அமைப்புக்கள் மேலும் ஆதரவை வழங்க முன்வரலாம். இவற்றைத் தடுக்காவிட்டால் ஸ்நோவ்டென்னை அணுகுவது ஒ£பமா நிர்வாகத்திற்கும் அதன் உளவாளிகளிற்கும் மேலும் முடியாத காரியமாகிவிடும். எப்படியாவது ரஷ்யாவிலிருந்து ஸ்நோவ்டென்னை வெளியேற்றினால் மட்டுமே தனது உளவாளிகள் மூலம் அமெரிக்க அரசு ஒரு நடவடிக்கையை மேற்கொளள் முடியும்.

என்னதான் அமெரிக்காவைத் தன் நண்பண் என்று புட்டின் கூறிக் கொண்டாலும் அமெரிக்க உளவாளிகளை உள்ளே அனுமதிக்கும் நிலையில் ரஷ்யாவும் அதன் உளவுத்துறையான FSBயும் இல்லை. எனவே தனது சூழ்ச்சியை உலகின் மிவும் ஜனநாயக நாடு போல் காட்டிக் கொண்டு ஆரம்பித்துள்ளது.

ஸ்நோவ்டென்னின் கடவுச் சீட்டு இரத்துச் செய்யப்பட்டதால் அவர் வேறு ஒரு இடமும் செல்ல முடியாது. அவர் விரும்பினால் அவர் அமெரிக்காவிற்குத் திரும்பிச் செல்ல மட்டும் நாம் கடவுச் சீட்டு வழங்கத் தயாராக உள்ளோம் என ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை சூழ்ச்சிக்குள் வீழ்த்தி ஸ்நோவ்டென்னை எங்கும் அகலாதபடி சிக்கவைக்கும் அமெரிக்காவின் இந்தச் சூழ்ச்சி பலிக்குமா? அல்லது ஸ்நோவ்டென்னின் மரணப்பொதி இதனை முறியடிக்குமா?

வேட்டை தொடரும்..  

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32090/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.