Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி சீர்திருத்தச் சட்டம் என்ற போர்வையில் அபகரிக்கப்படும் தமிழர் பூர்வீக நிலங்கள்

Featured Replies

 

   

 

05082013%20003.jpgமத்திய மற்றும் மாகாண சபை அரசாங்களின் காணிச் சீர்திருத்தத் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் குடியிருப்புக் காணிகள் பறிபோகும் நிலையில் உள்ளதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தினால் ஒரு ஏக்கத் திட்டத்தின் கீழ் 50 வருடத்திற்கு மேல் குடியிருந்த காணிகள், சீர்த்திருத்தத் சட்டத்தின் கீழ் அபகரிக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு ஏக்கருக்கு மேல் ஒப்பக்காணிகள் வைத்திருந்தால் மேலதிகமானவற்றை அபகரிப்பதற்கு மத்திய மற்றும் மாகாணசபை சிங்கள் ஆட்சியாளர்கள் சட்ட வரையறையைப் பயன்படுத்தவுள்ளனர்.

இவற்றில் குறிப்பாக கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு, கோறளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர்ப்பற்று செங்கலடி, கோறளைப்பற்று வடக்கு (வாகரை) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழ்ந்தவர்களுக்கு பெரும்பாலானவர்களுக்கு காணிக்கான உறுதிப் பத்திரம் வழங்கப்படவில்லை.

இன்றும் ஒப்பக் (permit) காணிகளே அதிகமாகக் காணப்படுகிறது. சிங்கள அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் காணிச் சீர்திருத்தச் சட்டமானது படுவான்கரைப் பகுதியில் வசிக்கும் மக்களின் நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சாமாதானப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணி பிரச்சினை மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பிலான பரிந்துரைகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்கான செயலமர்வொன்று நடத்தப்பட்டது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் சேர்ந்தவர்கள், சிவில் சமூகத்தினர், மீள்குடியேறிய பகுதியிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது, காணிச் சீர்திருத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்கத் தவறவில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்ற போர்ச் சூழ்நிலையினால், தமது பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய காணிகளை முறைப்படி வழங்க முடியவில்லை.

05082013%20004.JPG

ஆனால், இன்று தமிழர்களின் பூர்விகக் காணிகளை இந்த அரசாங்கம் காணிச் சீர்திருத்தச் சட்டம் என்ற போர்வையில் அபகரிக்க முற்படுவதினால் தமது பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய காணிகள் பறிபோகின்றன. அத்துடன், தற்போது எங்களின் அரவணைப்பில் திருமணமாகாதிருக்கும் பெண் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளதாக பேரவையில் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிப் பிரச்சினை ஒருபுறம் இருக்க, கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவிடம், காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளைத் தேடித் தருமாறு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். அது தொடர்பான முடிவுகளை இந்த ஆணைக்குழு பெற்றுக் கொடுக்காது, இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி மிரட்டி அச்சத்தை ஏற்படுத்தியதுதான், ஆணைக்குழு செய்த முதல் வேலை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னார் 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் ஒட்டுக்குழுக்களினாலும், இராணுவ, காவல்துறை, மற்றும் சிறீலங்காத் தேசிய புலனாய்வுப் பிரிவினரால் விசார¬ணை என்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.

இவற்றையெல்லாம், நாடாளுமன்றத்தில் கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தும் இதுவரையில் எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. காணாமல் போன விலைமதிப்பற்ற உயிர்களை தேடிக் கொடுங்கள், எத்தனையோ இராணுவ முகாங்களில் தமிழர்கள் கொத்தடிமைகளாக இன்றும் வேலை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு இராணுவ முகாம்களில் வேலை செய்யும் இவர்களை தேடிக் கண்டுபிடிக்க முற்படுவார்களா?

இந்நிலையில், அழைப்பு விடுக்கப்படாத நிலையில், திடீரென அந்தச் செயலமர்விற்கு சென்ற மட்டக்களப்பு மங்களாராம விகா£ராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தானும் இந்த செயலமர்வில் உரையாற்றவேண்டுமென கேட்டுள்ளார். அந்தச் செயலமர்வில் உரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் இடமளித்துள்ளனர். இந்த கருத்தரங்கு தவறான முறையில் நடைபெறுவதாகக் கூறி குழப்பத்தில் ஈடுபட்டார். தமிழர்க்கும் முஸ்ஸிம் மக்களுக்கு காணி வழங்குவீர்கள், சிங்கள மக்களுக்கு வழங்கமாட்டீர்கள் என தெரிவித்து குழப்பம் எற்படுத்த முயற்சித்தார்.

செயலமர்வின் தொனிப்பொருளுக்கு அப்பால் சென்று கொண்டிருக்கின்றமை குறித்து ஏற்பாட்டாளர்கள் விஹாராதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதே அவர் ஏற்பாட்டார்களைத் தாக்கிக் குழப்பம் விளைவித்ததாக ஏற்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், படுவான்கரை பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்கு சிங்களவர்கள் குடியாக வாழ்ந்தமைக்கான எவ்வித சான்றிதழ்களும் இல்லை.

விகா£ராதிபதி, காவி உடை அணிந்து கொண்டு சலக விதமான துஸ்ப்பிரயோகங்களிலும் ஈடுபடும் ஒரு பௌத்த துறவி. கடந்த காலங்களில் சிறார்களையும், திருமணமான பெண்களையும் தனது இச்சைக்குப் பயன்படுத்தி புத்த பெருமானின் புனிதத்தையே கெடுக்கும் ஒரு மனிதர். இவர், புத்த பெருமான் தெரிவிக்கும் போதனைக்கு மாறாக இனவாதத்தையும், மதவாதத்தையும், துஸ்ப்பிரயோங்களையும் மேற்கொண்டு இனக்களுக்கிடையில் முறுகல் நிலைகளை ஏற்படுத்தும் ஒரு குழப்பவாதி.

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி என்ன வேண்டுமாலும் செய்யலாம் என்பதற்காக தான் விரும்பிய இடத்திலெல்லாம் பௌத்த விகாரைகளை அமைக்க முற்படுபவர். அதுமாத்திரமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான சுவாமிமலை மற்றும் கச்சைக்கொடிச்சேனை போன்ற பகுதிகளில் உள்ள தமிழர்க்குச் சொந்தமான பூர்விக காணிகளில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களை குடியேற்றி அவர்களுக்கான தற்காலிய கொட்டகைகளையும் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

எனினும், போர் முடிவடைந்த பின்னர் (கிழக்கில் 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர்) தமிழர்களின் காணிகளில் ஆயுதப் படைகளின் பக்கபலத்துடன், சிங்களவர்கள் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொண்டு இன்று ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அடாத்தாகக் கைபெற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

- கிழக்கில் இருந்து எழுவான் 

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32085/64//d,fullart.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.