Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டு மணி நேரத்தில் புலிகள் வசமான மூதூர்!( வெளிவரும்உண்மைள்)

Featured Replies

எட்டு மணி நேரத்தில் புலிகள் வசமான மூதூர்!

பிரவீனா

Friday, 11 August 2006

மாவிலாறு அணைக்கட்டை திறந்து விடப் போவதாக சூளுரைத்து சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது மேற்கொண்ட படை நடவடிக்கையை முறியடித்து படைத்தரப்புக்கு பெரும் உயிரிழப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் திருமலை மூதூர் கிழக்குப் பகுதி மீது சிறிலங்கா அரசு நடத்தவிருந்த பாரிய படை நடவடிக் கை மற்றும் தமிழர் தாயகப் பகுதி மீதான கண்மூடித்தனமான எறிகணை வீச்சு, தாக்குதலுக்கு பதிலடியாக சிறிலங்கா படையினருக்கு எதிரான மட்டு ப்படுத்தப்பட்ட படைநடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தனர்.

கடந்த 2ம் திகதி அதிகாலை மூதூர் நோக்கி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட படை நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் மேற் கொண்ட உக்கிர தாக்குதலில் எட்டு மணி நேரத்துக்குள் மூதூர்ப் பிரதேசம் முழுமையாக விடுதலைப் புலிகள் வசமானது.

இவ்வாறு மூதூர் முழுமை யாகக் கட்டுப்பாட்டுக்கு வீழ்ந்ததன் மூலம் விடுதலைப் புலிகள் பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியுள்ளனர். முதலாவதாக போர்நிறுத்த உடன்படிக் கை என்பது இருதரப்பும் சமதரப்பு என்ற அடிப்படையில் தான் கைச்சாத்திடப்ப ட்டது.

ஆனால் போர்நிறுத்த உட ன்பாட்டை சீர்குலைத்த சிறிலங்கா அரசு கருணா விவகாரத்தை தமக்கு சாதகமாக்கியது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவையும் கருணாவின் சகாக்க ளையும் தன்வயப்படுத்தி வைப்பதன் மூலம் புலிகளை பலவீனப்படுத்தி வெ ற்றி பெறலாம் என அரசு கருதியது.

போர்நிறுத்த உடன்பாட்டை சீர்குலைத்து பேச்சுக்களை இழுத்தடி த்து ஒரு வலிந்த தாக்குதல் யுத்தமொ ன்றை படைத்தரப்பு மேற்கொண்டதும் இதே நம்பிக்கையில் தான். ஆனால் திருமலை கடற்படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் அண்மைய ஆட்லறி தாக்குதல் அதன் பின்னர் மூதூர் நகர்வரை மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையினை மேற் கொண்டு எட்டு மணி நேர சமரில் மூதூர் நகரை முழுமையாக கட்டுப்பா ட்டுக்குள் கொண்டு வந்ததமை என்பன விடுதலைப் புலிகளின் போரியல் ஆற் றல் சர்வதேச சமூகத்துக்கு மிகப் பெரிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் சமவலு வாற்றல் குறையவில்லை. என்ற செய்தியையும் எடுத்துக் கூறியிருக்கிறது.

மூன்றாம் கட்ட ஈழப் போரின் போது விடுதலைப் புலிகளிடம் ஆட்ல றிகள் இருந்த போதும் கிழக்கில் அ வை பயன்படுத்தப்படவில்லை. ஆனால் தற்போது திருமலை கடற்படைத்த ளம் மற்றும் மூதூர் பிரதேச மீட்பின் போது அவை பயன்படுத்தப்பட்டதிலிரு ந்து ஆட்லறிப் பலம் விடுதலைப் புலிகளால் தமிழர் தாயகப் பரப்புக்கு விரிவாக்கம் செய்ய ப்பட்டுள்ளதையும் முழு அளவிலான யுத்தமொன்று வெடிக்கி ன்ற போது இந்த ஆட்லறிப் பலம் தாயக நிலப்பரப்பை முழுமையாக மீட்பதற்கு முக்கிய பங்கு வகிக்கப் போகின்றது. எனவும் இராணுவ ஆய்வா ளர்கள் கருதுகின்றனர்.

மாவிலாறு அ+ணைக்கட்டு விவகாரத்திற்கு தீர்வு காணும் வழிமு றையாக ஈச்சிலம்பற்று பிரதேச மக் களின் நியாயபூர்வ கோரிக்கைகளை ஏற்று அதற்கான உறுதி மொழிகள் அந்த மக்களுக்கு வழங்கப்படுமானால் மாவிலாறு அணைக்கட்டு விவகாரம் சுலபமாக தீர்க்கப்பட்டு விடும் மாறாக தமிழர் தாயகம் மீது இராணுவ ஆக்கிர மிப்பை மேற்கொண்டு மாவிலாறு அ ணைக்கட்டை திறந்து விடுவது என்ப து. முடியாத காரியம்.

அண்மையில் மாவிலாறு அணைக்கட்டை திறக்கப்போவதாகக் கூறி கடந்த யூலை 31ம் திகதி பாரிய படைநகர்வு ஒன்றை படைத்தரப்பு மேற்கொண்டது. மூன்று முனைக@டாக மாவிலாறு அணைக்கட்டை அடைவ துதான் படைத்தரப்பின் நோக்கம் ~~மிசன் வோட்டர் செட்|| எனப் பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை விடுதலைப் புலிகளின் உ க்கிர வழிமறிப்பு தாக்குதலால் முறியடிக்கப்பட்டதுடன் படைத்தரப்புக்குப் பாரிய சேதம் ஏற்பட்டது. சுமார் 20 ப டையினர் பலியானதுடன் ஐம்பது படையினர் வரை படுகாயமடைந்தனர் இதனை தொடர்ந்து தமது நிலைகளுக்கு பின் வாங்கியது.

இதனைத் தொடர்ந்து மற் றொரு படைநகர்வுக்கான பாரிய தயா ர்ப்படுத்தலை சிங்களப் படைகள் மேற் கொண்டன. இந்த நடவடிக்கைக்காக வடக்கிலிருந்து துருப்புக்களை ஏற்றி வந்த கப்பல் கடல் புலிகளின் உக்கிர வழிமறிப்புத் தாக்குதலுக்கு இலக்கா னது. இதன் காரணமாக திருமலை துறைமுகத்தை சென்றடைய முடியா மல் சர்வதேச கடற்பரப்புக்கு கடற்ப டைக் கப்பல் தப்பிச் சென்றதுடன் துறைமுகத்தைச் சென்றடைவதற்கு முடியாது இந்திய உதவியை கோரியி ருந்தனர். அதே சமயம் இடம் பெற்ற கடற்சமரில் சிறிலங்கா கடற்படை டோரா படகு மூழ்கடிக்கப்பட்டதுடன் சிறிலங்கா கடற்படையினருக்கு பலத்த உயிரழிவு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை திருமலை உட்துறைமுக வீதியிலுள்ள சிறிலங்கா கடற்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் சரமாரியான ஆட்லறித் தாக்கு தல் மூலம் கடற்படையினரை நிலைகு லையவும் வைத்தனர்.

இதன் அடுத்த கட்டமாகத் தான் மூதூர் பிரதேசம் நோக்கிய மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறி லங்கா அரசின் இராணுவ அழுத்த த்தை தனிப்பதற்கான ஒரு நடவடிக் கை தான் மூதூர் வரையிலான இரா ணுவ நடவடிக்கை என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்திருந்தார்.

கடந்த புதன் கிழமை அதி காலை 2.00 மணிக்கு விடுதலைப் பு லிகளின் நடவடிக்கை ஆரம்பிக்கப்ப ட்டது. விடுதலைப் புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலையிலிருந்து 800 மீற்றர் தொலைவிலுள்ள கட்டை ப்பறிச்சான் படைமுகாம் விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து பாலத் தோப்பூர், பச்சனூர், காந்திநகர், தோப் பூர், செல்வநகர், மூதூர், மூதூர் இறங்குதுறை, 64வது மைல்கல் என பல இடங்களை விடுதலைப் புலிகள் தன் வயப்படுத்தினர். இந்த மட்டுப்படுத் தப் பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மகிந்தபுர, செல்வநகர், 64 வது மைல்கல், மூதூர் இறங்குதுறை கட்டைப்பறிச்சான், இராணுவ முகாம், மற்றும் பச்சனூர் பகுதியிலிருந்த இரு முகாம்கள் மூதூர் பொலிஸ் நிலைய த்துடன் இணைந்திருந்த இராணுவ மினி முகாம்கள் என்பன விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டன.

மூதூர் இறங்கு துறையை விடுதலைப் புலிகள் தன்வயப்படுத்திய தையடுத்து இறங்கு துறையை மீளக் கைப்பற்ற சிறிலங்கா கடற்படையினர் தமது முழுமையான பலத்தைப் பிர யோகித்திருந்த போதும் கடற்புலிக ளின் உக்கிர முறியடிப்புத் தாக்கு தல் காரணமாக இறங்கு துறையை கைப்பற்றும் திட்டம் கைகூடவில்லை. இந்த உக்கிர தாக்குதலின் போது சிறிலங்கா கடற்படையின் அதிவே க டோராக்கள் இரண்டு மூழ்கடிக் கப்பட்டதுடன் மூன்று படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மூதூர்ப் பிரதேசத்தை மீளக் கைப்பற்றுவதற்காக சிறிலங் கா முப்படைகளின் அதிகூடிய படையினரை படைத்தரப்பு வலுவை பயன்படுத்தி பகீரத முயற்சி மேற் கொண்ட போதும் விடுதலைப் புலிகள் வயமிருந்த பகுதியை மீட்கமுடியவில்லை. திருமலை கடற்படைத் தளத்திலிருந்து ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, விமானக் குண்டு வீச்சு தாக்குதல்களை மேற்கொண்ட போதும் விடுதலைப் புலிகளிடமிந்து மூதூரை மீளக் கைப்பற்ற முடியாது. படைத்தரப்பு திண்டாடியதை காணக்கூடியதாக விருந்தது.

இரு நாட்கள் மூதூர்ப் பிர தேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பா ட்டில் இருந்தது. இந்த நடவடிக்கையின் போது போராளிகள் தரப்பில் 32 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். படைத்தரப்பில் சுமார் 150 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். சுமார் 200 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.அது மாத்திரமின்றி பெருமளவிலான ஆயுத ங்களும் விடுதலைப் புலிகளால் கைப் பற்றப்பட்டுள்ளது.

சிறு ரக மோட்டார்கள், 40.மி. மீற்றர் கிரனைட் வீசும் ஆயுதங்கள், இலகு இயந்திரத் துப்பாக்கிகள், மற் றும் பெருமளவிலான ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர். இறுதியில் வெள் ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் விடுதலைப் புலிகளின் படையணிகள் தமது நடவடிக்கையை நிறைவு செய் து கொண்டு தமது நிலைகளுக்குத் திரும்பினர்.

அதன் பின்னரே மூதூர் பகு திக்கு படைத்தரப்பால் நுழைய முனை ந்தது. மாவிலாறு அணைக்கட்டை திற க்கப் போவதாக கூறி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாரிய படைநகர்வை மேற்கொள்ள ப டையினர் முயன்ற போதும் விடுதலைப் புலிகளின் உக்கிர முறியடிப்பு தாக்கு தலுக்கு முகம் கொடுக்க முடியாது பலத்த இழப்புடன் பின் வாங்க வேண்டி ஏற்பட்டது.

அதேவேளை எட்டு மணி நேரத்துக்குள் பல படை முகாம்களை நிர்மூலம் செய்து மூதூரை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதியிலிருந்து இரு பெரிய விடயங்களை விடுதலைப் புலி கள் தமது போரியல் ஆற்றல் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

01) விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியை எதிரியால் மீட்க முடியாது என்ற விடயம்.

02) தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து இருக்கும் சிறிலங்காப் படை முகாம்க ளை நிர்மூலம் செய்து மிக குறுகிய காலத்துக்குள் மீட்டெடுக்கும் போரியல் ஆற்றல் விடுதலைப் புலிகளுக்கு உள்ளது என்பது இரண்டாவது விடயம்.

இந்த அடிப்படையில் நோக் குமிடத்து போர்நிறுத்தம் முடிவுக்கு வந்து போர் பிரகடனப்படுத்தப்பட்டால் தமிழர் தாயகத்தில் சிங்களப் படை ஆக்கிரமிப்பிலிருக்கும் நிலப் பிரதேசம் விரைவாக மீட்கப்பட்டு விடுதலை அடைவதற்கான அந்த செய்தியை விடுதலைப் புலிகள் சொல்லில் மட்டு மல்ல பரீட்சாத்த ரீதியாக மூதூர் மீட்பு மூலம் செயலிலும் காட்டியிருக்கின் றனர்.

விடுதலைப் புலிகள் மூதூர் பிரதேசத்தை தன்வயப்படுத்தி வைத்திருந்த வேளை சிறிலங்காப் படை விடுதலைப் புலிகளிடமிருந்து மீளவும் மூதூரை கைப்பற்றுவதற்கான ஒரு பாரிய படை நகர்வுக்கு அரசாங்கம் திட்ட மிட்டிருந்தது.

திருமலை மாவட்டத்தில் உள்ள படையினரை மட்டும் வைத்து மூதூரை மீட்பதற்கான ஆற்றலை படைத்தரப்பு கொண்டிருக்கவில்லை. மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நகரப் பிரதேசத்திலிருந்த படைகள் உடனடியாக விலக்கப்பட்டு திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு நகரம் மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பினை சிறிலங்கா அதிரடிப்ப டையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் இருந்து மூதூர் பிரதே சத்தினை மீட்பதற்கான படை நடவடி க்கைக்கு அந்த மாவட்டத்திலுள்ள துருப்பினரால் முடியாது பிற மாவட்டங்களில் இருந்து துருப்புக்களை நக ர்த்த வேண்டிய சூழல் ஏற்படுமானா ல் எதிர்காலத்தில் தமிழர் தாயகம் எங்கும் ஒட்டு மொத்தமாக போர் வெடி க்கின்ற போது படைத்தரப்பு நிலை குலைந்து போகும் சூழல் ஏற்பட வாய்ப்பு ள்ளதாக இராணுவ விமர்சகர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நான்காம் கட்ட ஈழப் போர் மூழுமாகவிருந்தால் மூதூர் பிரதேசம் மீண்டும் விடுதலைப் புலிகள் வசமாகி விடும்.

அத்துடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மூதூர் இற ங்கு துறையை கைப்பற்றி அதிலிருந்து ஆட்லறித் தாக்குதலை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் திரு மலை துறைமுகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைவதுடன் படைத்தரப்பின் கடற் போக்குவரத் தும் முடக்கப்படும் அபாயமுள்ளது.

இவை குடாநாட்டிலுள்ள சிறிலங்கா படைகளுக்கான வழ ங்கல் சேவையை பாதிப்படையச் செய்வதுடன் குடாநாட்டை விடுதலைப் புலிகள் சுலபமாக மீட்பதற்கு வழிவகுக்கும்.

இந்த அடிப்படையில் நாலாம் கட்ட ஈழப் போர் ஆரம்ப த்தில் மூதூரைக் கைப்பற்றும் இராணுவ நகர்வை விடுதலைப் புலிகள் முன்னெடுப்பார்கள் என்ப து உறுதி எனவே இப்போது விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்தை மதித்து அதனைப் பேணுவதன் அடிப்படையில் மூதூரை விட்டு விலகி சென்றாலும் நாலாம் கட்டஈழப்போர் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் மூதூர் புலிகள் வசம் ஆவது உறுதி என்பது இப்போதே புலனாகின்றது.

http://www.battieelanatham.com/newsite/ind...d=1148&Itemid=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.