Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழிக்கப்படும் யாழ்.வளங்கள்! - கந்தரதன்

Featured Replies

யாழில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதற் சம்பவங்கள் ஓயாமல் தொடர்கின்றன. பலதடவைகள் இப்பகுதியில் ஊடகவியலாளர்கள் மீதான சிங்கள இனவெறித் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தந்திருந்தோம். இவற்றுக்கு தீர்வு காணப்படாத நிலையில் மேலும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

jaffn20400.jpg

அந்தவகையில், கடந்த 27ம் திகதி சனிக்கிழமை யாழ். திருநெல்வேலிப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுயாதீன ஊடவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.திருநெல்வேலி கலாசாலைப் பகுதியினைச் சேர்ந்த சி.மயூரதன் (வயது 26) என்பவரே மேற்படித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சுயாதீன ஊடகவியலாளரைத் தாக்கிய இனந்தெரியாத நபர்கள் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கைத்தொலைபேசி என்பனவற்றையும் சூறையாடிச் சென்றுள்ளனர். சனிக்கிழமை மாலை 5 மணியளவில் யாழ்.

திருநெல்வேலி கலாசாலைப் பகுதியல் நின்றுகொண்டிருந்த குறித்த சுயாதீன ஊடகவியலாளரை அங்கு வெள்ளை சிற்றுந்தில் வந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதன்போது குறித்த சுயாதீன ஊடகவியலாளர் மீதான தாக்குதலைத் தடுக்க முற்பட்ட யாழ்.நல்லூர் பிரதேச சபை உத்தியோகத்தர் மீதும் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல் நிலையத்தில் இரவு 7 மணியளவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் தகவலை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் மேற்படித் தாக்குதலை நடத்திய இனந்தெரியாத நபர்களை கைது செய்துள்ளதுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரும்புக் கம்பிகள், வெள்ளை வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் அதனை உறுதிசெய்யமுடியவில்லை.

கைது செய்யப்பட்ட 5 பேரும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் வலி.வடக்கில் சிறீலங்கா விமானப்படைக்கு ஒதுக்கப்பட்ட நிலம் என அறிவித்தல் பலகை நாட்டப்பட்டு அங்கு சுண்ணாம்புக் கற்கள் பாரிய அளவில் அகழ்ந்து செல்லப்படுவதான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அத்துமீறலை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வலி.வடக்கு மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலைக்குச் செல்லும் வீதியின் இரு மருங்கிலும் சுண்ணாம்புக் கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அங்கு பாரிய இயந்திரத்தின் உதவியுடன் உடைக்கப்பட்டு சல்லிகளாக மாற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்படும் கற்கள் யாழில் இருந்து தென்னிலங்கைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

இவ்வாறு சுண்ணாம்புக்கல் அகழ்ந்த இடங்களில் பாரிய குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியினை அண்மித்த கிராமங்களான கொல்லங்கலட்டி, பன்னாலை, நகுலேஸ்வரம், கரம்பனை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுடைய குடிநீர்க் கிணறு உவர் நீராக மாற்றமடைந்து வருகின்றது. காலப்போக்கில் அங்குள்ள குடிநீர் முழுமையாக உவர்நீராக மாறும் அபாயம் ஏற்படும். இதுமட்டுமல்லாமல் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு

வரும் விவசாய நடவடிக்கைகளும் முற்றுமுழுதாக பாதிக்கப்படும்.

இதனால் மேற்படி சுண்ணாம்புக்கற்கள் அகழுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வலி.வடக்கு பிரதேச சபைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து குறித்த பிரதேச சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கின் எல்லை கிராமங்களில் சிறீலங்காப் படையினரின் சிங்க றெஜிமென்ற் படைப்பிரிவின் உதவியுடன் 500 குடும்பங்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்கியுள்ளது.

வடக்கில் முல்லைத்தீவு - திருகோணமலை எல்லைக் கிராமம், முல்லைத்தீவு - வவுனியா எல்லைக் கிரமாங்களான பதவியா, பராக்கிரமபுரம் கெனியரதென்ன பகுதிகளில் படையினரின் ஆதரவுடன் 500 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளது. சிறீலங்காப் படையினரின் சிங்க றெஜிமென்ற் பிரிவினரால் அடிப்படை வசதிகள் மற்றும் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் வாழ்விடம் அமைத்து வசிப்பதற்காக அரை ஏக்கரும் விவசாயம் செய்வதற்காக இரண்டு ஏக்கர் காணிகளும் வழக்கப்பட்டுவருவதாக சிறீலங்கா படைத்துறை தெரிவித்துள்ளது.

வடக்கில் 1500 ஏக்கர் நிலப்பரப்பினை 500ற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வழங்கி சிங்களவர்களின் சொந்த நிலமாக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறு குடியேறியுள்ள சிங்களவர்கள் வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டிருந்தால் அவர்கள் வடமாகாணத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காப் படையின் போர் நடவடிக்கை காரணமாக வடக்கில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் வாக்களிக்க தகுதியில்லாத நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கையில், திட்டமிட்டு வடக்கில் சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, யாழ்.வடமராட்சிப் பகுதியில் வீடொன்றில் நுழைந்த சிவில் உடை தரித்த படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வயோதிபர் ஒருவர் உட்பட இருவர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கரவெட்டி இராஜசிங்கம் வீதியில், வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வின்போது பாடல் ஒலித்துக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே நுழைந்த படையினர் அங்கு நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இன்னொரு இளைஞரை நிர்வாணப்படுத்தி ஆண் உறுப்பில் தாக்கியுள்ளனர். அதனை அவரது பேர்த்தியார் தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கியுள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட சாதனங்களையும் அடித்து நொருக்கி விட்டு அவர்கள் சென்றுள்ளனர்.

இத்தாக்குதலில் மோகன் நிரோஜன் (வயது 21), இராசேந்திரம் சிவப்பி (வயது 62) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

இவ்வாறு தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவற்றுக்கு நீதி கேட்டு, சர்வதேசத்தின் கதவுகளை ஓங்கித் தட்டுவோம். புலம்பெயர்வாழ் தமிழ் மக்களே இது சிந்திக்கும் நேரமல்ல ஒருகுடையின் கீழ் நின்று செயற்படும் நேரம்!

- (சூறையாடல்கள் தொடரும்)   

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32213/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.