Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிக்கும் நோக்கில் திட்டமிட்ட மின் தடை

Featured Replies

யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பிரதேசத்தில் தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிக்கும் நோக்கத்தில் திட்டமிட்ட வகையில் மின் தடை அமுல்படுத்தப்படுகின்ற விடயம் மின்சார சபையின் உள்ளக தகவல்கள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. சிறிலங்கா மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் ஊடாக இந்த தகவல் வெளிவந்துள்ளது.

Chunnakam%20Power.jpg

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது பகல் வேளைகளிலும் இரவிலும் தொடர் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. பரீட்சைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக இருந்தே யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.

மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நேரங்களில் மின்சார சபையின் பிராந்திய அலுவலகங்கள் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினால் அவர்கள் தொலைபேசியை செயலிழக்கச் செய்துவிடுகின்றனர்.

இந்த நிலையிலேயே இந்த மின் வெட்டுக்களுக்கான காரணம் என்னவென்று சிறிலங்கா மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவரை சிநேகபூர்வமாக தொடர்புகொண்டு கேட்டபோது, சிறிலங்கா அரசாங்கத்தின் உயரதிகாரிகளின் பணிப்புரைகளுக்கமைவாகவே மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அவர்களின் பணிப்புரையை மீற முடியாத காரணத்தாலேயே தாங்கள் இவ்வாறு மின்தடையை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், மின் தடையை ஏற்படுத்துமாறு கூறுகின்ற அதிகாரியின் பெயரைக் கூறுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.

தற்போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகியவற்றுக்காக மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கின்றனர். உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில் தரம் 5 பரீட்சைக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன. இந்த நிலையில் இவ்வாறு அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது.

கடந்த வருடமும் அதற்கு முந்தைய வருடங்களிலும் உயர்தரப் பரீட்சைக் காலங்களில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டது. எனவே யாழ்.குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மாணவர்களின் கல்வியைத் திட்டமிட்டு சீரழிக்கும் நடவடிக்கையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவோ என்று தாங்கள் சந்தேகப்படவேண்டியுள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். இந்த சந்தேகங்கள் உண்மையானவைதானா என்று மேற்படி மின்சார சபையின் உயர் அதிகாரியைக் கேட்டபோதே அவர் அதனை ஒப்புக்கொண்டார்.

பரீட்சையைத் தடைப்படுத்துவதா அல்லது வேறேதும் காரணங்கள் இருக்கின்றனவா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட மின்மாற்றியூடான மின்சாரத்தை தடைசெய்யுமாறு அறிவித்தல் வரும். வேறு வழியின்றி நாங்கள் மின்சாரத்தை துண்டிப்போம் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டுச் சீரழிக்கும் நோக்கத்துடனேயே யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். பரீட்சை தொடங்கியுள்ள நிலையில் மாணவர்கள் பரீட்சைக்கு தயார்படுத்தும் இரவு வேளைகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. இதனால் இது திட்டமிட்ட செயற்பாடு என்றே நாங்கள் சந்தேகிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான இயந்திரங்கள் சுன்னாகம் மின்சார நிலையத்தில் உள்ளன. அக்றிகோ என்ற சீன நிறுவனம் தனது புதிய இரண்டு இயந்திரங்களை சுன்னாகம் மின் நிலையத்தில் பொருத்தியுள்ளது.

எந்த வேளையில் இலங்கை மின்சார சபையின் மின்சாரம் தடைப்பட்டாலும் சீன நிறுவனத்தின் இயந்திரங்கள் இயக்கப்பட்டு மின்சாரத்தை வழங்கக்கூடிய தயார் நிலையிலேயே சீன நிறுவன அதிகாரிகள் இருக்கின்றனர். இவ்வாறான வசதிகள் உள்ள நிலையில் தற்போது மட்டும் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதற்கு காரணம் என்ன என்று சிந்திக்கும் போது மேற்படி மின்சார சபையின் உயரதிகாரி கூறிய விடயம் உண்மை என்று நிரூபணமாகிறது.

தமிழ் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டு சீரழிப்பதன் மூலம் அவர்களின் எதிர்கால வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியுமென்று சிறிலங்கா அரசாங்கம் கருதுகின்றது.

- சங்கதி24ற்க்காக யாழ்ப்பாணத்திலிருந்து கவியரசன்

http://www.sankathi24.com/news/32204/64//d,fullart.aspx

மின்தடையால்   தமிழ் மாணவர்கள் துவண்டுவிட மாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.