Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன உறுதி பெற பயிற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன உறுதி பெற பயிற்சி

 

 

மன உறுதிக்குப் பயிற்சி இன்றியமையாதது. செய்ய நினைக்கும் செயலை உடனே தொடங்குவது, எடுத்ததை முடித்துவிட்டு, அடுத்த செயலுக்குச் செல்வது, நமக்குத் தேவையில்லா தவற்றை ஒதுக்கி விடுவது, விரதங்கள் மேற்கொள்வது ஆகியவை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளாகும்.

1. இப்பொழுதே தொடங்குவோம்

மன உறுதியை வளர்த்துக் கொள்ள பல்வேறு வழிகள் இருப்பினும் முதல் வழி, செயல் செய்வதுதான், அதற்கு முதற்படி செயலில் இறங்கிவிடுவதுதான், செயலைத் தொடங்கி விட்டால் போதும், செய்யும் ஆற்றல் தானாக வளரத் தொடங்கிவிடும், தொடர்ந்து செய்யும் வழிமுறைகளும் விளங்கத் தொடங்கும் இன்றே – ‘ இப்பொழுதே ‘ – தொடங்குங்கள் – இது முதற்படி.

தொடங்குவதற்கு முன் நமது இலட்சியத்தைத் தெளிவுபடுத்தி முடிவும் செய்து கொள்ள வேண்டும். ஒரே இலட்சியத்தை நோக்கிச் செயல்பட வேண்டும். நமது இலட்சியம் நான்கு ஐந்து கிளையாகப் பிரியுமானால் நமது திறமைகளும் நான்கைந்து கிளையாகப் பிரித்து சிதறும், ஒன்றிலும் முழுமை அடைய முடியாது.வெற்றி பெற முடியாது, சாதனைகளும் நிகழ்ந்த முடியாது. ஆதலின் ஒரே இலட்சியத்தில் நின்று செயலாற்ற வேண்டும். சாதனையாளர்களின் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் ஒரே இலட்சியத்தில் நின்றதுதான்.

இலட்சியத்தைத் தேர்ந்த பிறகு அதிலேயே நின்று செயல்பட வேண்டும். இலட்சியத்தை அடிக்கடி மாற்றுகின்றவர்கள் ஒருபோதும் வெற்றிபெறுவதில்லை; அடிக்கடி கட்சியை மாற்றுபவர்கள் மதிப்பிழந்து போவதுபோல – இவர்களும் வலிவிழந்து போகிறார்கள்.

எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும், ஒரே இலட்சியத்தில் நிலைத்து நிற்க வேண்டும்; அதனையே உயிர் மூச்சாகக் கருதிக் கொண்டு செயல்பட வேண்டும்.

நெல்சன் மண்டேலாவை நினைத்துப் பாருங்கள், நாட்டுவிடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் – அவருடைய பொறுமை உலகையே சிந்திக்க வைக்க வில்லையா?

2. எடுத்ததை முடிப்போம்

படித்து அறிந்து கொள்வது என்பது வேறு, செயல் செய்வது என்பது வேறு. நம் இந்தியத் திருநாட்டின் அறிவுக்கும் பஞ்சமில்லை. அறிவாளிகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால் செயல் செய்வதற்குத்தான் ஆள் இல்லை.

வேலை வேலை என்று அலைகிறார்கள். ஆனால் பல்வேறு இடங்களில் வேலைக்குச் சரியான ஆள் கிடைக்காமல் – வேலை செய்கின்ற ஆள் கிடைக்காமல் தடுமாறுவதை நாம் இன்றும் கண்டு வருகிறோம்.

நண்பர்களே! உலகத்தையும் ஊரையும் நாம் உடனடியாக – ஓரே நாளில் திருக்க முடியாது. ஆனால் நம்மை நாம் திருத்திக் கொள்ளலாம் அல்லவா?

இதோ சில பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

காலையில் 4 மணிக்கு எழுவதைத் தள்ளிப் போடாதீர்கள்.

பணிக்குச் செல்லுமுன் குளித்துவிட்டுச் செல்லுங்கள்.

இன்று என்னென்ன பணிகளை – அலுவலகத்தில் – தொழிலில் செய்து முடிக்க வேண்டும் என்பதை ஒரு தாளில் குறித்துக் கொள்ளுங்கள்.

மதியம் ஒருமுறை அதுவரை நடந்துள்ள வேலைகளைக் காண்க்கிட்டுப் பாருங்கள்.

மாலையில் 5 மணிக்கு ஒரு முறை அந்தந் தாளை எடுத்துப்பாருங்கள்.

இரவு 10 மணிக்குப் படுக்கைக்குப் போகுமுன் நீங்கள் அன்று முழுவதும் செய்த செயல்களை வரிசைப்படுத்திப் பாருங்கள்.

விடுபட்ட பணிகளை மறுநாளில் செய்யும் பணிகளில் முதலில் குறித்துக் கொண்டு செய்து முடியுங்கள்.

இப்படிச் செய்யும் பொழுது – ஒவ்வொரு வேலை முடியும் பொழுதும் மனதில் ஒரு புதிய தெம்பு உண்டாகும். அதனால் மன உறுதியின் தொடக்கம். ஒவ்வொரு சிறு செயலின் முடிவும்தான் நம் மன உறுதியை வளர்க்கிறது.

அன்றாடப் பணிகளை இப்படித் திட்டமிட்டுச் செய்கின்றவர்களைப் பாருங்கள். யாருக்கும் அஞ்சமாட்டார்கள். அஞ்சாதை என்பது என்ன? மன உறுதியின் வெளிப்பாடுதான்.

ஆதலின் எடுத்த செயலை முடியுங்கள், அதுதான் மன உறுதி பெறுவதற்கான இன்றியமையாத பண்பு. எடுத்ததை முடிப்போம். முடிந்த பிறகு புதியதைத் தொடங்குவோம் என்பதை இலட்சியமாகக் கொள்ளுங்கள்.

3. தேவையற்றவைகளை ஒதுக்குங்கள்

பலர் தங்களுக்கு எது தேவை, எது தேவையில்லை, எதைச் செய்ய வேண்டும், அதையும் எப்போது செய்யவேண்டும் என்பது பற்றி சரியாகக் கடைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் அதனால் சிக்கல்களுக்கு ஆளாகி மன உறுதி தளர்கிறார்கள்.

அண்மையில் ஒரு நண்பர் சொன்னார் ” நான் எங்கும் தாமதமாகவே செல்கிறேன். இந்தக்கூட்டத்திற்குக் கூடத் தாமதமாக வந்தேன். காரணம் நான் புறப்படும்போது என் இளைய மகன் தன்னைத் தூக்கி வைத்திருக்க வேண்டும் என்று அழுதான். சற்று நேரம் தூக்கி வைத்து இருந்துவிட்டு வந்தேன் ” என்றார். இவர் ஒரு பள்ளி ஆசிரியரும்கூட.

குழந்தையிடம் அன்பு செலுத்த வேண்டியது அவசியம்தான் ஆனால் எப்போது? அப்பா பள்ளிக்குப் புறப்பட்டுவிட்டால் எடுத்து வைத்துக் கொண்டு கொஞ்சமாட்டார் என்ற பழக்கத்தைப் பையனுக்கு நாம் பழக்க வேண்டாமா? சற்று நேரம் அழுதால் என்ன ஆகிவிடும்?

இவர் கடமையில் ஆர்வம் இல்லாதவர் என்பதுதான் உண்மை. இவர் தமது தாமதத்திற்கு ஒரு காரணம் தேடுகிறார் என்பதுதான் அடிப்படையான செய்தி, இப்படி இருப்பவர்களால் என்ன பயன்? தங்கள் தவறுக்கு ஒரு காரணம் தேடிக் கொள்வார்கள்.

அன்பு செலுத்துவது தேவைதான். எப்போது? பள்ளி முடிந்து மாலை 5 மணிக்கு வந்து கொஞ்சுங்களேன். கடமையின் போது இவற்றை ஒதுக்க வேண்டாமா? எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தெரிய வேண்டாமா?

இதுபோல் பொருள்கள் வாங்குவதிலிருந்து ஒரு நண்பரோடு பழகுவது வரை நமக்கு எது தேவை எது தேவையில்லை, இப்போது நமக்கு எது முதன்மையானது என்பதை வரிசைப்படுத்திச் செய்யும் பழக்கம் இன்றியாமையாதது. இப்படிச் செய்தவன் மூலம் நாம் மன உறுதியைப் பெற்றிட முடியும் மன உறதி சிறந்த வெற்றியை நல்கும். ஆதலீன் உங்களின் தேவைகளை – பழக்க வழக்கங்களைக் கூட வரிசைப்படுத்தி முன்னுரிமை கொடுத்துச் செயல்படுங்கள்’ நீங்கள் கவலையே படாதீர்கள். காலம் உங்கள் கவலைகளுக்கு பதில் சொல்லிவிடும.

இன்று முதல் தொடக்கமாக உங்களிடம் உள்ள வேண்டாத குப்பைகளை – வேண்டாத பொருள்களை ஒதுக்குங்கள். உங்கள் சுற்றுப் புறத்தில் வேண்டாத பொருள்களை வைத்திருக்காதீர்கள். கடிதங்களுக்குப் பதில் எழுதி போடுங்கள். வேண்டாத கடிதங்களைக் கிழித்துப் போடுங்கள். வேண்டாத பழைய சமான்களை, பழைய வாகனங்களை ஒரேடியாக அப்புறப்படுத்துக்கள். அதைப் போல் மனதிலும் உள்ள வேண்டாத எண்ணங்களை அப்புறப்படுத்துங்கள். பிறகு பாருங்கள் ஒரு வேகம், ஒரு உறுதி பிறக்கும், வாழ்வு செழுமையாகும்.

விரதம் மேற்கொள்ளுங்கள்

நமது முன்னோர்கள் விரதம் இருப்பதைப் பெரிதும் போற்றினார்கள். நாகரிக உலகில் விரதம் இருக்கும் பழக்கம் மிகவும் அருகிப்போய்விட்டது. வாரம் ஒருமுறை உண்ணா நோன்பு – விரதம் இருப்பது உடலுக்கும் நல்லது மனதிற்கும் நல்லது. மனம் வலிமை பெறும், காந்தியடிகளின் உண்ணா நோன்பே அவருக்கு மிகுந்த மன வலிமையைத் தந்தது என்று அவர்தம் வாழ்க்கை வரலாற்றில் சத்திய சோதனையில் எழுதிஉள்ளார்.

நமது இல்லங்களில் கூட வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை – உண்ணா நோன்பு – விரதம் – இருப்பவர்களைப் பாருங்கள் தெளிவோடும் உறுதியோடும் இருப்பார்கள். ஒரு தந்தை சொன்னார் நான் சனிக்கிழமைதோறும் விரதம் இருப்பவன். ஒரு சனிக்கிழமையன்று பெரிய விருந்து ஒன்றுக்கு அழைப்பு வந்தது. ஒரு சாப்பாட்டுக்கு 600 ரூபாய் வீதம் செலவு செய்து அந்த விருந்நு தயாரிக்கிறார்கள் என்பதும் தெரியும். என் 20 வயது மகள் சொன்னாள் 1 விரதத்தை இன்று மட்டும் விட்டுவிட்டு அப்பா விருந்தில் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்றாள். என் மனைவி சொன்னார் விரத்தை விடமாட்டார், விருந்தை விட்டுவிடுவார் என்றார்.

அவர்கள் இதுபற்றி என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நான் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனால் சாப்பிடாமல் வந்துவிட்டேன். அந்த உண்மையை அவர்கள் தெரிந்தபிறகு அப்பா உண்மையிலே கொள்கையில் உறுதியானவர் என்று என் மகள் என்மீது அதிக மரியாதை வைத்து நடக்கத் தொடங்கினாள். விரதத்தில் இருந்த தளராத வைத்து நடக்க தொடங்கினாள். விரதத்தில் இருந்த தளராத உறுதியால் என் மகளது மனதையே மாற்ற முடிந்தது என்றார்.

இப்படி விரதம் ஒன்று மட்டுமில்லை. எந்தக் கொள்கையையும் தொடர்ந்து கடைப்பிடித்தால் அதுவே விரதம் தான் அதுவே தான் தியானம். பொய் பேசாதிருத்தல், பிறர்பொருள் மீது ஆசைப் படாதிருத்தல், சினம் கொள்ளாதிருத்தல், பொறுமையைக் கடைப் பிடித்தல் – இவைகள் எல்லாம் விரதம்தான், இந்த விரதத்தில் வெற்றிக் கொண்டவர்கள் மன உறுதியில் மாவீரனாகத் திகழ்வர்.

தொடக்க நிலையில் இருப்பவர்கள் முதலில் மாதம் ஒருவேளை உண்ணாநோன்பு இருந்து செயல்படலாம். பிறகு அதனை வாரம் ஒரு நாளாக மாற்றிக் கொள்ளலாம். இந்த ஒரு பழக்கத்தை முதலில் கடைபிடியுங்கள் – உங்கள் மன வலிமையை உணரத் தொடங்குவீர்கள். இது பண்டைக் காலத்தில் சூளுரைத்துக் கொண்டது போன்ற ஒரு செயலாகும். அது சொல்லால் சூளுரை – இது செயலால் சூளுரை, விரதம் இது ஒரு முழுமையான நிலை, விரதம் மன உறுதியைத் தரும் ஒப்பற்ற பயிற்சி.

- இல.செ.க.

 

http://thannambikkai.org/1991/12/01/3613/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.