Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழ் மக்கள் பூர்வீக தாயகத்தில்

Featured Replies

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அரச, இராணுவ பயங்கரவாதங்கள் காரணமாக தாயகத்தில் வாழ முடியாத நிலையில் புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று அங்கு பிரஜாவுரிமை பெற்றுத் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகள் தற்போது தமது பூர்வீக தாயகத்திற்கு திரும்பியிருக்கின்றனர்.

Maveerar%20kallarai111.jpg

புலம்பெயர் தேசத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பருவகால விடுமுறையைப் பயனுள்ளதாக களிப்பதற்காகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதேசங்களைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகள் தாயத்திற்கு வந்திருக்கின்றனர். பல வருடங்களாக காணாமல் இருந்த தமது ஊர் உறவுகளை நேரில் பார்த்து இவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். தாயகத்தில் கால் பதித்துள்ளமையால் இவர்கள் இரட்டிப்பு சந்தோசத்தில் திழைத்திருக்கின்றனர்.

குடாநாட்டின் பல இடங்களிலுள்ள ஆலயங்களிலும் தற்போது திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த திருவிழாக்களில் அதிகளவு புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்துகொண்டு தமது முன்னைய நேர்த்திகளை நிறைவேற்றி வருகின்றமையைக் காண முடிகின்றது.

புலம்பெயர் நாடுகளுக்குச் சென்ற நிலையில் பல தசாப்த காலமாக தாயகத்திற்கு திரும்பாமல் இருந்த புலம்பெயர் உறவுகள்கூட தற்போது தாயத்திற்கு திரும்பியிருக்கின்றனர். புலம்பெயர் நாடுகளில் பிறந்த அவர்களின் பிள்ளைகள் மற்றும் உறவுகளுடன் அவர்கள் தாயகத்திற்கு வருகை தந்திருக்கின்றனர்.

நீண்ட காலமாக இங்கு வருகை தராதிருந்த இவர்கள் தாயகத்திலுள்ள முக்கியமான, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயங்கள், கசூரினா, சாட்டி கடற்கரைகள் போன்றவற்றுக்கும் சென்று வருகின்றனர். வன்னி யுத்தத்தின் போது சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கும் சென்று இவர்கள் துயர் பகிர்ந்துகொள்கின்றனர்.

இவற்றைவிட போரின் காரணமாக அழிவடைந்த இடங்களையும் இவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும், வன்னியில் தமிழீழ தேசியத் தலைவர் வாழ்ந்தாக படைத்தரப்பால் தெரிவிக்கப்பட்டு வருகின்ற வீடுகளையும் இவர்கள் பார்வையிட்டு தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர். வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருந்த கட்டமைப்புக்களின் எஞ்சிய இடங்களையும் சில சான்றுகளையும் பார்வையிட்டு இவர்கள் மெய் சிலிர்ப்பதையும் போராளிகளின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் உரையாடுவதையும் அவர்களின் வீரத்தை மெச்சுவதையும் அவதானிக்க முடிகிறது.

விடுமுறையில் தாயத்திற்கு வந்திருக்கின்ற குறிப்பிட்டளவான புலம்பெயர் உறவுகள் ஆடம்பரமான செயற்பாடுகளுக்கு நிதியை வீண் விரயம் செய்கின்ற அதேவேளை சில புலம்பெயர் உறவுகள் தாயகத்தில், தமது ஊர்களில் இடம்பெறுகின்ற அபிவிருத்திச் செயற்பாடுகள், புனரமைப்புகள் போன்றவற்றுக்கு நிதி உதவிகள் வழங்கியிருக்கின்றனர்.

சிறிலங்கா அரச படையினர் கடந்த முப்பது வருட காலமாக தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட கொடூரமான யுத்தம் காரணமாக பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து சென்று வெளி நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் தாயகம் திரும்பி வந்து தமது சொந்த உறவுகளைப் பார்வையிட முடியாதவாறு சிறிலங்கா அரசாங்கம் அவர்களைத் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்திருக்கின்றது.

இந்த நிலையில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது தாயகத்திற்கு திரும்பியிருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi24.com/news/32203/64//d,fullart.aspx

சேமனைச் சங்கதி. இது யாரின் ஆய்வு என்று போடமுடியவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.