Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறையாகும் வட தேர்தல்! - கந்தரதன்

Featured Replies

யாழில் சிறீலங்காப் படையினரால் வளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவது தொடர்பாக இப்பகுதியில் பல தடவைகள் வெளியாகியிருந்தன. கடந்தவாரமும் இப்பகுதியில் சிறீலங்காப் படையினரின் ஏற்பாட்டில் வலி வடக்கில் சட்டவிரோத சுண்ணாம்புக்கல் அகழ்வது தொடர்பிலான தகவல்களைத் தந்திருந்தோம்.

Sooraiyadal.jpg

இந்நிலையில் யாழ்குடாவுக்கே தனித்துவம் மிக்க பனை வளமும் சிறீலங்கா படையினரின் பாராமுகத்துடன் தொடர்ந்து அழிக்கப்படுவதாக பனை அபிவிருத்திச் சபையினர் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதற்கு எதிராக சிறீலங்கா காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பனை அபிவிருத்திச் சபையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பனை மரங்கள் சட்டவிரோதமான முறையில் அழிக்கப்படுவது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்படுகின்றபோதும் அதுகுறித்து சட்ட நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் எடுப்பதில் முனைப்புக் காட்டுவதில்லை எனவும் - இதனால் சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க முடியாது உள்ளது எனவும் - பனை அபிவிருத்திச் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொதுமக்களால் தமது சொந்தப் பாவனைக்கு என பனை மரங்கள் வெட்டப்படும் போதும் பிரதேச செயலகத்தில் வெட்டப்படும் பனை மரங்களின் எண் இடப்பட்டு அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறப்பட்டு வெட்டப்பட்டால் பனை அபிவிருத்திச்சபையின் உத்தியோகத்தர்கள் நேரில் பார்வையிட்டு அனுமதியினை வழங்குவர். எனினும் அனுமதி இன்றி வெட்டப்படும் பனைகள் தொடர்பில் காவல்

துறையினருக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டபோதும் அவர்கள் இது குறித்து இதுவரை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

எனினும் சட்டவிரோத பனை வெட்டுதல் குறித்து நாங்கள் காவல்துறையினருக்கு அறிவிக்கலாமே தவிர நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே எதிர்காலத்தில் தடை செய்யும் நோக்குடன் காவல்துறையினர் சட்டரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்  எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் யாழ். பனை உற்பத்திகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அழிப்பு உச்சம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கில் படையினர் மற்றும் படையினருக்குத் துணைபோகும் கும்பல்களினால் தேர்தல் வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் ஆதரவாளர்களினால் ஒட்டப்படுகின்ற சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை அகற்றும் நடவடிக்கையில் படையினரும் காவல்துறையினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண தேர்தலில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களினது சுவரொட்டிகள் அண்மைய நாட்களாக ஆதரவாளர்களினால் பரவலாக ஒட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிராக சிறீலாங்கா அரசின் சிறீலங்கா சுதந்திர மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் சுவரொட்டிகளை ஒட்டுகின்றன. எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டும் கழிவு எண்ணெய் வீசப்பட்டும் காணப்படுவதாகவும் அரசுக்கு சார்பான தேர்தல் வேட்பாளர்களின் சுவரொட்டிகள் அகற்றப்படாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் அரச தரப்பினரால் தேர்தல் விதிமுறைகளை மீறிய வகையில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கண்டாவளை, புளியம்பொக்கணையில் சமுர்த்தி வங்கிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர், வடமாகாணத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமது கரங்களைப் பலப்படுத்துங்கள் என்று குரல்கள் எழுப்பியுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் தமிழ் விழா என்ற பெயரில் மேற்படி அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பரிவாரங்களுடன் கலந்து கொண்டு அரசியல் பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண ஆளுநர் எந்தவொரு பாடசாலை நிகழ்விலும் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பிய போதிலும் அரச தரப்பினர் இதனைக் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை என அங்குள்ள மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் சமுர்த்தி நியமனம் பெற்றவர்களை கட்டாயப்படுத்தி கட்சிப் பத்திரிகை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி. கட்சி ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்த கட்சியின் மூலம் அண்மையில் அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் தேர்தலை இலக்காகக் கொண்டு பலருக்கு வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வேலைவாய்ப்பு பெற்றவர்களை கட்டாயப்படுத்தி அவர்கள் பணியாற்றும் அரச அலுவலங்களில் சக பணியாளர்களுக்கும் அலுவலகங்களுக்கு வருகின்றவர்களுக்கும் தமது கட்சியின் பத்திரிகையை விற்பனை செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பலர் விசனமடைந்துள்ளனர்.

இதேவேளை அரசாங்க சுற்று நிரூபங்களுக்கு விரோதமாக இவர்கள் செயற்பட்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் உயர் அதிகாரிகளும் அச்சம் காரணமாக மௌனம் காத்து வருகின்றனர். குறித்த அரசியல் கட்சியின் பத்திரிகையை இலவசமாகக் கொடுத்தாலும் பொதுமக்கள் வாங்காமல் உதாசீனம் செய்யும் நிலையிலேயே இந்த வன்கொடுமை இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தாயகத்தில் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா படையினரதும் அதன் ஆதரவுக் குழுக்களினதும் வன்முறைக் கலாசாரம் தொடர்ந்தவண்ணமே உள்ளன.

உலகெங்கும் வாழ் தமிழ் உறவுகளே இது உங்களின் கவனத்திற்கு!

நீங்கள் ஓய்ந்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சிறீலங்கா இனவாதத்திற்கு சாதகமே.

சிந்தியுங்கள்!

செயற்படுங்கள்!!

(சூறையாடல்கள் தொடரும்)  

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32297/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.