Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்ந்து தமிழக ஊடகங்கள் தமிழர்களின் பிரச்சனைகளை மூடிமறைத்தும், அவற்றைத் திசைதிருப்பியும் வருகின்றன.

Featured Replies

 

தொடர்ந்து தமிழக ஊடகங்கள் தமிழர்களின் பிரச்சனைகளை மூடிமறைத்தும், அவற்றைத் திசைதிருப்பியும் வருகின்றன.

தமிழகத்தில் உள்ள திருடர்களின் ஊடகங்கள் சிபிஐக்குப் பயந்து இயங்குகின்றன. அதனைப் போன்று வடவர்களின் அடிவருடிகளின் ஊடகங்களும் இயங்குகின்றன. இவை தொடர்ந்து பாகிஸ்தான் அல்லது சீனாவைப் பற்றித் தான் அதிகம் பேசிக்கொண்டே இருக்கின்றன. இவை பாகிஸ்தான், சீனாவின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டப்படவேண்டும் என்று விவாதங்களை நடத்தி உரக்கக் குரல் எழுப்பி வருகின்றன. 

வடவர் அடிவருடிகளே, திருடர்களே தமிழர்களுக்கும் தமிழினத்திற்கும் எதிராக தினமும் அட்டூழியங்களை மேற்கொள்ளும் சக்திகளைப் பற்றி ஏனடா வாய் திறக்க மறுக்கிறீங்க? தமிழக மீனவர்களுக்கு தமிழக கடல் எல்லையில் சிங்கள அரசால் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களைப் பற்றிப் பேசுவதற்கு மறுத்துவிட்டு தமிழினத்திற்கே சம்பந்தப்படாத பிரச்சனைகளைப் பற்றி ஏன் விவாதித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? 

தற்போது எனது தமிழினத்திற்கு பாகிஸ்தானாலும், சீனாவினாலும் பெரிய கொடுமைகள் நாளுக்கு நாள் நடைபெறுகிறது என்பது போலவும், அவர்களால் தான் எனது இனத்திற்கு ஆபத்துள்ளது என்பது போலவும் சிபிஐக்கு பயந்து இயங்கும் திருடர்களின் ஊடகங்களும், வடவர்களின் அடிவருடிகளின் ஊடகங்களும் தமிழர்களின் பிரச்சனைகளை மூடிமறைத்தும், அவற்றைத் திசைதிருப்பியும் வருகின்றன.

ஈழத்தில் தமிழர்களின் இடங்களில் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல், இராணுவ மயமாக்கல், நாளுக்கு நாள் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் போன்ற விடயங்களை ஏன் தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்கள் அச்செய்திகளை வெளியிடுவதற்கு மறுக்கின்றன? தமிழக ஊடகங்கள் தமிழினத்திற்கு சம்பந்தப்படாத பிரச்சனைகளைப் பற்றி விவாதங்களாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து ஊதிக்கொண்டே இருக்கின்றன.

"ராஜபக்ச ஒரு திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி, இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் அங்கே இல்லை. சிறிலங்கா ஒரே நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது" என்று சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அவர்கள் கூறிய கருத்தை பல முன்னணி தமிழக ஊடகங்கள் செய்தியாக வெளியிடவில்லை. இச்செய்தியை விகடனும் பிரசுரிக்கவில்லை. முன்னர் விகடன் தமிழீழப் போராட்டத்தையும், ஈழத்தமிழர்களையும் வைத்து பிழைப்பு நடத்தியது. இன்று மகிந்தவிற்கு எதிரான செய்திகளை வெளியிடுவதற்கு மறுத்து தமிழீழப் போராட்டத்தை இழிவு படுத்தும் செய்திகளை வெளியிடுகிறது. அதனைப் போன்று தந்தி தொலைக்காட்சியைத் தவிர முன்னணி தமிழகத் தொலைக்காட்சிகளும் இச்செய்தியைக் கூறுவதற்கு மறுத்துவிட்டன. இவை மஹிந்தவிற்கு ஆதரவாகவும் இந்திய அரசினதும், அதன் புலனாய்வுப் பிரிவின் வழிநடத்தலின் கீழ் இவை இயங்கி வருகின்றன.

ஈழத்தில் சிங்கள அரசும் இந்திய அரசும் இணைந்துகொண்டு அணு அணுவாய் துடிதுடிக்க தமிழினத்தை இனவழிப்பு மேற்கொண்ட போது அதனை மூடிமறைத்தன தமிழக ஊடகங்கள். கூடங்குளம் விடயத்திலும், தமிழக மீனவர்களின் விடயத்திலும் இதனைப் போன்ற பல தமிழர் விவகாரங்களில் இந்திய அரசினதும் அதன் புலனாய்வுப் பிரிவின் வழிநடத்தலின் கீழ் தமிழக ஊடகங்கள் இயங்கி வருகின்றன. 

இந்திய சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அநீதிகளை தமிழ் மக்களிடம் வெளிக்கொண்டு வந்தால் இந்திய சிங்கள அரசிற்கு எதிராக தமிழர்கள் கொதிப்படைவார்கள், அதனால் போராட்டம் வெடிக்கும் எனபதனால் தமிழக ஊடகங்கள் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை மூடிமறைக்கின்றன. தமிழக ஊடகங்கள் தமிழின விரோதப் போக்கில் தான் இயங்கிக் கொண்டுவருகின்றன.

தமிழக ஊடகங்கள் இந்திய வடவர் நலன் சார்ந்தவற்றை மட்டுமே அதிகம் பேசிக்கொண்டே இருக்கின்றன, ஈழத்தில் தமிழ் மக்கள் கொடூரமாகக் கொன்று புதைக்கப்பட்ட இடங்களில் புற்கள் முழைத்த பின்னரே தமிழகத்தில் சிங்களத்திற்கு எதிரான போராட்டங்களும ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களும் மிகப்பெரிதாக வெடித்தன. இதற்கு மிகமுக்கிய காரணிகளாக தமிழக ஊடகங்கள் இருந்தன என்றால் அது மிகையாகாது.

தமிழினம் கொன்று புதைக்கப்பட்ட இடங்களில் புற்கள் முழைத்த பின்னரே தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் அந்தச் செய்திகளை தமிழக மக்களுக்குக் கூறுகிறது என்றால் அவை பொறுப்புடன், தமிழினத்தின் நலன் சார்ந்து செயல்படவில்லை என்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது. இப் பயணத்தில் மாற்றமில்லாது தமிழக ஊடகங்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. தமிழர்களே நீங்கள் தூங்கிக் கிடக்காமல் விழிப்புடன் இருங்கள்.

1186299_224353621052005_1239858107_n.jpg

 

இன்றுவரை தமிழர் கைகளில் உருப்படியான ஆங்கில ஊடகம் (ஒருசில இணைய ஊடகங்கள் தவிர) இல்லை!

குறிப்பாக ஆங்கில அச்சு ஊடகமும், ஆங்கில தொலைக்காட்சி ஊடகமும் மிக அவசியமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.