Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரிகோணமலை துறைமுகம் மீது புலிகள் கடும் தாக்குதல்!

Featured Replies

திரிகோணமலை துறைமுகம் மீது புலிகள் கடும் தாக்குதல்!

ஆகஸ்ட் 12, 2006

கொழும்பு:

திரிகோணமலை துறைமுகம் மீது விடுதலைப் புலிகள கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதே போல பலாலி விமானதளம் மீதும் விடுதலைப் புலிகள் விமானம் மூலம் சரமாரித் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நிலைமை மேலும் சிக்கலாகி வருகிறது. மாவிலாறு அணையின் மதகுகளை புலிகள் திறந்து விட்ட போதிலும், இலங்கை ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தாமல் தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு விடுதலைப் புலிகள் கடுமையான பதிலடி கொடுத்த வருகின்றனர்.

அல்லை பகுதியில் உள்ள ராணுவ கிட்டங்கியை புலிகள் குண்டு வீசித் தகர்த்தனர். இதில் 41 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், திரிகோணமலை துறைமுகம் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடற்படை செயதித்தொடர்பாளர் தசன நாயகே கூறுகையில், திரிகோணமலை துறைமுகம் மீது கடும் தாக்குதல் நடந்து வருகிறது. உயிர்ப்பலி குறித்தும், சேதம் குறித்தும் தகவல்கள் கிடைக்கவில்லை. கடற்படை வீரர்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர் என்றார்.

விடுதலைப் புலிகளின்கடும் தாக்குதலை சமாளிக்க முடியாமல், கடற்படை வீரர்கள் சிதறி ஓடுவதாக கூறபபடுகிறது. 10 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையின் கிழக்கில் உள்ள திரிகோணலை துறைமுகம் மிகவும் முக்கியமான இடமாகும். இந்தத் துறைமுகத்தை ராணுவத்தின் பிடியிலிருந்து மீட்க புலிகள் மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சண்டை கடும் உக்கிரமாக இருப்பதாகவும், உயிர்ப் பலிமேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

பலாலி விமான தளம் மீதும் தாக்குதல்?

இதற்கிடையே, பலாலி விமானதளம் மீது விடுதலைப் புலிகள் விமானம் மூலம் பறந்தபடி கடும் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்ததாக விடுதலைப் புலிகள் தரப்பு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இலங்கை வீரர்கள் பலர் பலியானதாகவும் அந்த செய்தி கூறுகிறது. இதன் காரணமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு யானை இரவு பகுதியில் ராணுவம் பதிலடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு ராணுவம் கடுமையான விலையை கொடுக் வேண்டியிருக்கும் என விடுதலைப் புலிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் இருசய்யா இளந்திரையன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது வீரர்கள், மாலுமிகள், விமானப்படை வீரர்கள், கடற்படை வீரர்களை முழு அளவில் பயன்படுத்தி எங்களது தாயகத்தையும், எங்களது மக்களையும் காப்போம்.

பலாலி விமானதளம் மீது எங்களது போர் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியில் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இந்தப் பதிலடி கொடுக்கப்பட்டது. ராணுவத்தின் வசம் உள்ள யாழ் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அவர்கள் தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர்.

தப்பிச் செல்லும் தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவம் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது என்று கூறினார் இளந்திரையன்.

ஆனால் புலிகளின் இந்த செய்தியை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. பலாலி விமான தளம் ராணுவத்தின் முழுக் கடடுப்பாட்டில் தான் உள்ளது. சண்டை நடந்து வருகிறது. ஆனால் புலிகளின் விமானம் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான செய்தி என்று ராணுவம் தெரிவித்துள்ளது

. இதற்கிடையே, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் தென்மராச்சி பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகளின் வானொலி கேட்டுக் கொண்டுள்ளது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் உடனடியாக மக்கள் அங்கிருந்து வெளியேறு மாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், எழுத்துமடுவல், புலோ பல்லாய், கிலாலி, கொடிகாமம், கச்சை, வரனி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறி விடுமாறும் விடுதலைப் புலிகளின் வானொலி எச்சரித்துள்ளது. இந்தப் போர் பதட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

thatstamil.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.