Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 28 ஆண்டுகள் !

Featured Replies

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 28 ஆண்டுகள் ! 

1146637_434248673360322_133846715_n.jpg

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 28 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.

மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.

இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

 
 
நன்றி 

Kubenthiran Eelamமுகனூல் பக்கம் 

 

 

971265_709011502459268_253900172_n.jpg
 

 

1173818_709008589126226_167971038_n.jpg

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். இன்றோடு தமிழீழ விடுதலை புலிகளின் மகளிர் படையணி ஆரம்பிக்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 

பூ என்றும் கொடி என்றும் பெண்ணை வர்ணித்து பெண்மை என்பது நலிவின் வடிவம் என இலக்கணங்களிலும் இலக்கியங்களிலும் வரையறுத்து பெண்களை ஆணாதிக்க சமூகத்தில் அடிமைகளாக அடுத்தவரில் சுமையாக தங்கி வாழும் இழி நிலையில் வாழப் பணித்திருந்த எம் தமிழ் குமுகாயத்தில் ஆணுக்கு பெண் அறிவில் மட்டுமல்ல ஆற்றலிலும் நிகரே என சாதனைகள் படைத்து வரலாற்றில் பெண் வீரத்துக்கு புது விதி எழுதியவர்கள் எம் தமிழீழ விடுதலை பெண் போராளிகள்.

1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் விடுதலைக்காக அரும்பணியாற்றி ஈகையாலர்களாக தம் உயிரள்ளிக் கொடுத்துள்ளனர். இன்றும் கூட இலங்கை சிறைக்கூடங்களில் எம் பெண்போராளிகள் பல்லாயிரம் பேர்கள் தாங்கொணா சித்திரவதைகளை நித்தமும் அனுபவித்து அணுவணுவாக அனுபவிக்கும் கொடுமைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எம் தேசத்தின் மேல் இவர்கள் கொண்ட பற்று காரணத்தால் எம் பெண் போராளிகள் பட்ட வலிகள் கொஞ்சம் அல்ல. அதே போல் அத்தனை வலிகளையும் கடந்து அவர்கள் படைத்த சாதனைகள் போல் உலகில் எந்த ஒரு பெண்களும் அருஞ்செயல்கள் செய்ததே இல்லை. 

பெண்கள் படையணியினரின் சிங்கள இராணுவதுனருடனான தாக்குதல்கள் முதன் முதலாக மன்னார் அடம்பனில் இடம்பெற்றது. அன்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை பெண்புலிகளின் வீரதீரச் சரிதங்கள் எம் விடுதலை வரலடற்று நெடுகிலும் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் வரை வியக்கத்தகும் வெற்றி சரிதங்கள் பலவற்றை படைத்துள்ளன. ஒப்பற்ற ஈகைகளையும் செய்துள்ளன. 

இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார். 

பெண்கள் தரையில் மட்டும் அன்றி கடலிலும் வெற்றிச் சரிதம் படைத்தார்கள். எம் தேசியத் தலைவர் வழிநடத்தலில் பெண் புலிகள் கால்வைக்காத துறையே இல்லை எனலாம். அத்தனை துறைகளிலும் வியக்கத் தக்க ஆளுமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி சாதனை படைத்தவர்கள் எம் பெண்புலிகள்!

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி .19 ஆண்டுகளுக்கு மாபெரும் வெற்றிச்சரிதம் படைத்து தடை நீக்கியாக 

மனுருதியோடு வியக்கத்தக்க சாதனை படைத்தவர்கள் எம் பெண் மாவீரர்கள். பெண்புலிகள் சோர்ந்து கிடந்த தமிழ் பெண்களுக்கு புது வீரம் ஊட்டி போராடக் கற்றுக் கொடுத்தவர்கள்! ஒவ்வொரு தமிழச்சிகளுக்கும் வீரத்தை ஊட்டும் விடுதலை பெருநேருப்புக்களாய் வரலாறு வாழும் வரை எம் பெண் புலிகள் வாழ்வார்கள் வரலாற்றில் என்பது உறுதி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.