Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் தமிழகத்திற்க்குள் ஊடுருவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்து பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நவாஸ் செரிப், இம்ரான் கான், முசாரஃப் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழகத்தின் கடற்கரை வழியாக சென்னை வந்திரங்கி இருக்கிறார்கள் எனவும், அவர்கள் மத்திய சென்னையை தாக்க இரண்டு பல்லவன் பேருந்துகளில் ஏறி சென்று கொண்டிருப்பதாகவும், ஒரு பல்லவன் பேருந்து வழக்கம் போல பழுதாகி ஜெமினி பாலத்திற்கு 100 அடிக்கு முன்னால் நிற்பதாகவும், அடுத்த பேருந்தில் ஏறியவர்கள் சில்லரை கொடுக்காத காரணத்தினால் இடையிலேயே இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே தாக்குதல் எந்தப்பகுதியில் எப்படி நடக்கும் என்று தெரியாத காரணத்தினால் அவசர நிலை சென்னையில் பிரகடனப்படுத்தி இருக்கிறது.

பாதுகாப்பு வேண்டுவோர் கேப்டன் விஜயகாந்தின் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் விஜய்காந்த் , தற்போது பயங்கரவாதிகளை தாக்கி அழிப்பதில் வல்லவரான ‘கமல ஹாசனுடன்’ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாகவும், சுப்ரமணிய சாமி தனது 30 லட்சம் தொண்டர்களுடன் மெரினா கடற்கரையில் பயங்கரவாதிகளை திருப்பி தாக்க காத்திருப்பதாகவும் தெரிகிறது.

தாக்குதல் நடந்தவுடன் துக்ளக் பத்திரிக்கையில் இவர்களது புகைப்படங்களை வெளியிடுவதற்காக தயார் நிலையில் வைத்து இருப்பதாக சொல்கிறார்கள்....

மயிலாப்பூரில் இந்த பயங்கரவாதிகள் மீது கிருஷ்ணபகவான் தாக்குதல் நடத்த 44மணி நேர சிறப்பு யாகம் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

கடலில் நிலை கொண்டிருக்கும் மீனவர்கள் படகிற்குள் பதுங்கி கொள்ளுமாறும் இல்லையெனில் இந்தியக்கொடியை கோவணமாக மாட்டிக்கொண்டு இலங்கை ராணுவத்திற்கு அடையாளம் காட்டுமாறு இலங்கை கடற்படை கேட்டுக்கொள்கிறது.

தீவிரவாதிகளை கண்டவுடன் காவ்ல்துறைக்கோ, கமலஹாசனுக்கோ உடனடியாக தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிரது. அவர்களது அங்க அடையாளங்களாக புலனாய்வுதுறை இவர்களது இரண்டு கண்களுக்கு நடுவே மூக்கு இருக்கும் என்று கண்டறிந்துள்ளது.

இன்னும் மேலதிக தகவல்களை இந்தியாவின் பாகிஸ்தான் எதிர்ப்பு சிறப்பு புலனாய்வின் தலைவர் அர்ஜீன் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

//இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது/

Thirumurugan ghandi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.