Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகமாலைஎழுதுமட்டுவாள் பகுதிகளில் புலிகளை விரட்ட படையினர் சமர

Featured Replies

முகமாலைஎழுதுமட்டுவாள் பகுதிகளில்

புலிகளை விரட்ட படையினர் கடுஞ்சமர்

முறியடித்துவிட்டதாக புலிகள் அறிவிப்பு

முகமாலை நாகர்கோவில் கிளாலி முன்னரங்கப் பாதுகாப்பு அரண்களை ஊடறுத்துக் கொண்டு எழுதுமட்டுவாள் பகுதிக்குள் முன்னேறியுள்ள விடுதலைப் புலிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக அரசுத் துருப்புகள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன என்று களமுனைத் தகவல்கள் தெரி விக்கின்றன.

முகமாலை மற்றும் எழுதுமட்டுவாள் பகுதிகளில் இருந்து புலிகளைப் பின்வாங்கச் செய்வதற்கான படை நடவடிக்கை ஒன்றை நேற்று அதிகாலை முதல் அரசுப் படைகள் ஆரம்பித்தன என்று பாதுகாப்புத் தரப்பில் இருந்து அறிய முடிகின்றது. படையினரின் இந்தத் தாக்குதலை தாங்கள் வெற்றி கரமாக முறியடித்துவிட்டனர் என்று விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர். ஆனால், இராணு வத் தரப்போ ஏ9 வீதியில் தாங்கள் இழந்த சோதனைச் சாவடிப் பிரதேசத்தை மீளக்கைப்பற்றி விட்டதாக தெரிவித்திருக்கிறது.

குடாநாட்டிலுள்ள படையினரின் ஆட்டி லறி நிலைகள் அனைத்திலிருந்தும் கடும் ஷெல் மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்கு தல்கள் புலிகள் நிலைகொண்டிருக்கின்றனர் என்று கூறப்படும் எழுதுமட்டுவாள் பகுதியை நோக்கி நேற்று அதிகாலை முதல் நடத்தப்பட்டன. அத்துடன், படையினரின் விசேட கொமாண்டோ அணிகள் அந்தப் பகுதியில் படை நடிவடிக்கை ஒன்றை ஆரம்பித்தன என்றும் தெரிகிறது. இராணுவத்தின் 53ஆவது படையணியினரால் மேற்கொள் ளப்பட்ட இந்தத் தாக்குதலை தமது போராளி கள் தீவிர எதிர்ச்சமர் புரிந்து முறியடித்து விட்டனர் என்று கிளிநொச்சியில் புலிகளின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இந்த எதிர்ச்சமரின்போது இராணுவத்தின் கவச வாகனம் ஒன்று தகர்க்கப்பட்டதாகவும் மற்றொரு கவச வாகனம் சேதப்படுத்தப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சமரில் படுகாயமடைந்த நூற் றுக்கு மேற்பட்ட படையினர் சிகிச்சைக்காகக் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள னர் என்றும் கூறப்படுகிறது. 250 படையினர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கொழும் பிலுள்ள இராணுவ வட்டாரங்களை மேற் கோள்காட்டி தமிழ்நெற் செய்தி தெரிவித் தது. காயமடைந்த படையினரை சிகிச்சைக் காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல கொழும்பில் 16 அம்புலன்ஸ் வண்டிகள் நேற்று அதிகாலை முதல் சேவையில் ஈடுபடுத்தப் பட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளியன்று முகமாலையில் சண்டை ஆரம்பித்த பின்னர் அந்தப் பகுதி யில் மட்டுமன்றி அங்குள்ள முன்னணிப் பாது காப்பு அரண்களுடன் தொடர்புபட்ட கிளாலி, நாகர்கோவில் முன்னரங்குகள் மீதும் புலி களின் படையணிகள் கடும் தாக்குதலை நடத் தின. இந்த முன்னரங்கப் பாதுகாப்பு நிலை களில் சில இடங்களில் தமது அரண்களைப் படையினர் இழக்க நேரிட்டது. அவ்வாறு இழந்த பகுதிகள் ஊடாகவே புலிகள் முன் னேறி இருந்தனர்.

புலிகள் ஏ9 கண்டி வீதி வழியாகவா எழுதுமட்டுவாள் பகுதிக்கு முன்னகர்ந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. முக மாலையில் ஏ9 வீதிப் பகுதியைத் தவிர்த்து வேறு ஒரு பக்கத்தால் முன்னேறி வந்தே புலிகள் எழுதுமட்டுவாள் பகுதிக்குள் நுழைந் தனர் எனத் தெரியவருகிறது.

நேற்று இந்தப் பகுதியிலேயே கடும் மோதல்கள் இடம்பெற்றன. ஷெல் மற்றும் பீரங்கி வெடிப்புகளால் அந்தப் பிரதேசம் பகல் முழுவதும் அதிர்ந்து கொண்டிருந்தது.

புலிகளை விரட்ட படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரி ழப்புகள் சேதங்கள் தொடர்பான தகவல்கள் இச் செய்தி அச்சுக்குப் போகும் வரை தெரியவரவில்லை.

நேற்று நடத்தப்பட்ட தீவிர தாக்குதல் களில் அப்பகுதியில் தமது படைகள் புலி களுக்குப் பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத் தின என்றும், அதன்பின் முகமாலைச் சோத னைச்சாவடிப் பிரதேசம் மீண்டும் தமது கட் டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது என வும் அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான படை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டி ருக்கிறார் எனினும், இந்தப் பிரதேசத்தில் சிறு சிறு மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.

முகமாலை சோதனைச் சாவடிப் பகுதி யில் சில வாகனங்கள் தீக்கிரையாகிக் காணப் படுவதாகவும் படைத்தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.

uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.