Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுப்பு அணைகள் திறக்கப்படும் காலம் நெருங்கி வருகிறது

Featured Replies

தடுப்பு அணைகள் திறக்கப்படும் காலம் நெருங்கி வருகிறது

-இதயச்சந்திரன்-

மூதூரில் நடந்து முடிந்த தாக்குதல், பின்னகர்வு போன்ற நிகழ்வுகள் மிகப் பாரியதொரு இராஜதந்திர நகர்வாகக் கருத இடமுண்டு.

வெறும் இராணுவ வெற்றி வாய்ப்புக் கண்ணோட்டத்தோடு அணுகினால் ஆழமான அர்த்தங்கள் மலினப்படலாம். அண்மையிலேயே போர் நிறுத்த அனுசரணையாளர்கள் இரண்டாவது தடவையாக பாரிய பொறிக்குள் சிக்குண்டுள்ளார்கள். தாமே விரித்த ஐரோப்பிய ஒன்றியத் தடை வலைக்குள் விழுந்து நிமிர முடியாமல் இன்னமும் தள்ளாடும் நிலையில் மூதூரில் இன்னுமொரு பெரிய பொறி வலைக்குள் மாட்டிக் கொண்டுள்ளார்கள்.

அத்துடன் ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலைத் துறைமுகத்தையும், அதனைச் சூழவுள்ள பிரதேசத்தை எந்நேரத்திலும் புலிகள் தமது ஆளுகைக்குள் கொண்டுவர முடியுமென மூதூர் சமர் விளம்பும் செய்தியானது சர்வதேச சமூகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.

சர்வதேச சமூகத்தின் போர்நிறுத்த ஒப்பந்த நியமனங்களிற்கேற்ப தமது பழைய நிலையை நோக்கி விடுதலைப் புலிகள் சென்று விட்டார்கள். அத்துடன் புதிய அனுசரணையாளர் பௌவரின் வேண்டுதலுக்கிணங்க கண்காணிப்புக் குழுத் தலைவருடன் எழிலன் சென்று மாவிலாறு அணையைத் திறக்க மேற்கொண்ட முயற்சியினை இலங்கை அரசானது பாரிய எறிகணை வீச்சின் மூலம் தடுத்துள்ளது.

விடுதலைப் புலிகள் தமது பழைய நிலைகளுக்குத் திரும்பிய நிகழ்வும் கண்காணிப்புக் குழுவுடன் சென்று அணையைத் திறக்க எடுத்த முயற்சியும் சர்வதேச சமூகத்தைப் புலிகளின் இராஜதந்திர நகர்வுப் பொறிக்குள் மாட்டிவிட்டது. மயிரிழையில் உயிர் தப்பிய உல்ப் ஹென்றிக்சன், அணையைத் திறக்கும் மனிதாபிமான நோக்கினைவிட வேறொரு நோக்கம்கூட இலங்கை அரசிற்கு இருப்பதாக கடுமையான தொனியில் கூறியுள்ளார்.

அந்த உள்நோக்கம் என்னவென்பதை அவர் கூறமாட்டார். அப்படியே அதை வெளிப்படுத்தினால் அவர்களின் கால நீட்சித் தந்திர நகர்விற்கு ஊறாக அமையலாம். அத்துடன் இறுதிப் போரிற்கான வாசலைத் தாமே திறந்துவிட தற்போதைய நிலையில் அனுசரணையாளர்கள் விரும்பமாட்டார்கள்.

தனது கிளிநொச்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு வழமைபோல பேச்சுக்கள் ஆக்கபூர்வமாக அமைந்ததெனக் கூறி திருமலை சென்ற பௌவருக்கு சிறிலங்கா அரசு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

எறிகணைத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாத பெரும் ஏமாற்றத்துடன் கொழும்பு திரும்பியவர், யுத்த முனைப்பில் அரசு இருப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

எதுவுமே புரியாதது போலப் பாசாங்கு செய்தவர்கள் தமது முகத்திரையை தாமே கிழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மாவிலாறு அணை திறக்கப்பட்டாலும் எறிகணை வீச்சுக்கள் நிறுத்தப்படமாட்டாதென்பதை சர்வதேசம் இனிப் புரிந்துகொள்ளும். அரசின் சதிவலையில் சிக்குண்டு, புலிகளைத் தமது நாடுகள் தடை செய்ததையிட்டுக் கவலை கொள்ளும் காலம் தவிர்க்க முடியாமல் கனிந்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்த தாம் மேற்கொண்ட வெட்டி ஓடும் காய் நகர்த்தல் நகர்வுகள் தம்மையே சர்வதேசத்தினின்றும் தனிமைப்படுத்தும் போக்கிற்கு இட்டுச்செல்லுமென்பதை சிறிலங்கா அரசு இனிவரும் நாட்களில் உணர்ந்து கொள்ளும். இதுகாலவரை வாவென்று கூவி அழைத்த இந்தியாவை, எண்ணெய் கிணறு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததோடு சமகால பிராந்திய அரசியல் களத்திலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முரணான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டால் பாரிய பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி வருமென காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அண்மையில் கூறியதை இணைத்துப் பார்க்க வேண்டும். அண்மைக் காலமாகவே சிறிலங்காவின் சர்வதேச இராஜதந்திர உறவு நிலையில் தரநிலை மாற்றமேற்படுவது போல் தெரிகிறது.

சர்வதேச சமூகத்தின் பிராந்திய நலன்களுக்குச் சார்பானவர்களாகத் தம்மை உருவகப்படுத்தி அவர்களூடாக விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தும் காய் நகர்த்தல்களில் பெற்ற தற்காலிக வெற்றிகளுடன் இனியும் காலத்தைக் கடத்த முடியாதென்பதை உணர்ந்து சீனாவில் தஞ்சம் கோரும் நகர்வினை நோக்கிச் செல்வது போலுள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தால் ஏற்படவிருக்கும் பாதிப்பினை நிவர்த்தி செய்ய சீனாவுடன் இணைந்து அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுகம் அமைக்கும் வேலைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அத்துடன் மன்னார் வளைகுடா எண்ணெய் அகழ்வாராய்ச்சி ஒப்பந்தத்தினை சீனாவுடன் ஏற்படுத்த முனைகிறது.

கால மாற்றத்தில் சிறிலங்கா, சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்பட்டால், மாலைதீவு, மியன்மார் (பர்மா) போன்று சீனாவிற்கு தளமமைக்கும் வசதியை மன்னாரில் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கையில் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் பணிப்புரையின்பேரில் மாவிலாறு அணை திறந்து விடப்பட்டுள்ளது. எவ்வித முன் நிபந்தனைகளுமின்றி அணைத் திறப்பு மேற்கொள்ளப்பட்டதானது, அரசின் போலிப் பரப்புரைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துள்ளது.

அடுத்தடுத்து வரும் புலிகளின் அதிரடி அரசியல் நகர்வுகளால் சர்வதேசத்தின் மீது விழுந்துள்ள பொறிவலை பரந்து போவதை அவதானிக்கலாம். இதனையும் மீறி மாவிலாறுப் பகுதியை அரசு ஆக்கிரமிக்க முயலுமாயின் புலிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் கைங்காரியத்தை சர்வதேச சமூகம் செய்ய வேண்டிய அழுத்தத்துள் தள்ளப்படலாம்.

இதனையே புலிகளின் தந்திரோபாய அரசியல்மயப்பட்ட நகர்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சமீப காலமாக அடிக்கடி கூறும் வாக்கியமான 'இனி ஒரு தாக்குதல் தொடுக்கப்பட்டால், அதைப் போரிற்கான பிரகடனமாகக் கொள்வோம்" என்பதன் தர்க்கபூர்வ அரசியல் கருத்தியலை இனிவரும் நாட்களில் உணரக்கூடிய வாய்ப்புண்டு.

எந்தவொரு தேசிய விடுதலைப் போராட்டத்திலும் அரசியல் முன்னெடுப்புக்களும் இராணுவ உத்திகளும் பிரிக்க முடியாத வகையில் மூல இலக்கை நோக்கிய பயணமாக அமையும்.

மூதூர் சமரை முடித்து புலிகள் தமது தளம் திரும்பியதையிட்டு சகல உலகத் தமிழர்களும் ஆழ்ந்த வேதனையடைந்தது உண்மை.

இறுதிப் போர் ஆரம்பமாகிவிட்டதெனத் தவறாகக் கற்பிதம் கொண்டதன் விளைவாகவே மக்கள் விரக்தி நிலையடைந்தார்களென்று கூறலாம். இவர்கள் விடுதலைப் புலிகளின் இறுதி இலக்கினை புரிந்து கொண்டாலும் அவர்களின் நடைமுறை இராணுவ உத்திகளை இறுதிக் கனவுடன் கலந்ததாலேயே இவ்வாறான தடுமாற்றங்கள் ஏற்பட்டன.

மூதூர் பரீட்சார்த்தக் களத்தில் அரசியல் இராணுவ ரீதியிலான முன்னேற்றகரமான வெற்றிகள் புலிகளுக்குக் கிடைத்துள்ளது. போரியல் ஆய்வின்படி மூதூர் சமரில் புலிகளின் படை வலுச் சமநிலை அரசை விட ஒருபடி மேலோங்கி இருப்பது தெளிவாகின்றது. புலிகளின் பிரதேசத்தினுள் இராணுவத்தால் ஒரு அடிதானும் உட்புக முடியவில்லை.

ஆனால் புலிகளோ 17 முகாம்களைத் தகர்த்து இறங்குதுறைவரை சென்று மீண்டு வந்துள்ளனர். பல்துளை புல்லாங்குழல்களும் கிபீர் கழுகுகளும் சிறிலங்காவின் வலுச் சமநிலையை உருவாக்க முடியவில்லை.

மாவிலாற்றை மையப்படுத்திய மூதூர் சமரின்போது தென்னிலங்கை அமைதியாக இருந்தது. மாவிலாற்று அணை திறக்கப்பட்டவுடன் கொழும்பில் வெடித்த குண்டு முக்கிய செய்தியொன்றை வெளிப்படுத்துகிறது. அச்செய்தி புதிய பரிமாணத்திற்கான திசையினை சுட்டிக்காட்டுகிறது.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (12.08.06)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.