Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிய நெருக்கடி: ஐநா தீர்மானத்தை பிரிட்டன் முன்மொழிந்தது

Featured Replies

130828154937_suriah_512x288_reuters_nocr

ஐநா கண்காணிப்பாளர்கள்

டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலுக்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியும், அங்கு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை என்று கோரியும் பிரிட்டன், ஐநா பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவருகிறது.

இதற்கு பதிலளித்துள்ள சிரியாவின் கூட்டாளியான ரஷ்யா, ஐநாவின் எந்தவொரு தீர்மானத்தையும் கொண்டுவருவதற்கு முன்னதாக, சிரியாவில் உள்ள ஐநா இரசாயன ஆயுத பரிசோதகர்கள் அவர்களது பணியை முடித்தாக வேண்டும் என்று கூறியுள்ளது.

 

பாதுகாப்பு குறித்த கரிசனைகளால் தமது நடவடிக்கைகள் தாமதமடைந்ததை அடுத்து முன்னதாக டமாஸ்கஸில் பரிசோதகர்கள், தமது பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் தமது புலனாய்வை முடிப்பதற்கு 4 நாட்களாவது ஆகும் என்று ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் ஒரு நாள் மட்டும் நீடிக்கக் கூடிய அளவில் குறிகிய அளவில் இருக்காது என்று ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளது.

இராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி யோசித்து வரும் நாடுகள் - அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் யோசித்து வருவதாக தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையில் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் இருப்பதும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

130828084909_syria_us_chemical_512x288_b

அமெரிக்க போர்கப்பல்

சிரியாவில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரசாயன ஆயுத தாக்குதள் குறித்த உளவுத் தகவல்களை அமெரிக்கா புதன் மாலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்கிடையே, மேற்கு நாடுகள் சிரியா மீது வான் தாக்குதலை ஆரம்பிக்கும்பட்சத்தில் அதற்கு சிரியா பதில் நடவடிக்கைகளை எடுத்தால், தயாராக இருக்குமாறு தமது படையினருக்கு அழைப்பு விடுத்துள்ள இஸ்ரேல், மேலதிக ஏவுகணை அலகுகளையும் நிறுவியுள்ளது.

எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள ஆயுதப்படைகள் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேலில் பதற்றத்துக்கான எந்த சமிக்ஞையும் கிடையாது என்றும், ஆனால் அங்கு விஷவாயுவைத் தடுக்கும் முகமூடிகளுக்காகவும், வடக்கில் வான் தாக்குதலுக்கான பங்கர்களிலும் மக்கள் வரிசையில் நிற்பதாகவும் அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

சிரியா மீது மேற்குலக நாடுகள் தாக்குதல் நடத்தினால், அனைத்து பிராந்தியமுமே ஆபத்துக்குள்ளாகிவிடும் என்று முன்னதாக இரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/global/2013/08/130828_syria.shtml

  • கருத்துக்கள உறவுகள்
சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த இன்னும் முடிவெடுக்கவில்லை: ஒபாமா

 

சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். 

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், அண்மையில் ரசாயன ஆயுதம் மூலம் தாக்குல் நடத்தப்பட்டது. இதில் 1300 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலை நடத்தியது அரசு ஆதரவு படைகள் என்று ஒரு தரப்பினரும்; இல்லை போராட்டம் நடத்தி வரும் எதிர்க்கட்சியினர்தான் என்று மற்றொரு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியது அரசுப் படைகள்தான் என்று உறுதியாக நம்பும் அமெரிக்கா, சிரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, பிபிஎஸ் தொலைக்காட்சி செய்தி நேரம் நிகழ்ச்சியில் புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

சிரியாவுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்தும் முடிவை, அமெரிக்கா இன்னும் எடுக்கவில்லை.ஆனால் சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியவர்களுக்கு, உரிய தண்டனை அளிக்கப்படுவது அவசியம். பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று, சிரியா அரசை பலமான எச்சரிப்பது, உண்மையில் மீண்டும் அந்தத் தவறை (ரசாயன ஆயுதம் பயன்படுத்துதல்) செய்யாமல் தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.ஆதாரங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து விட்டோம். அணு ஆயுதங்களையோ அல்லது ரசாயன ஆயுதங்களையோ எதிர்க்கட்சியினர் வைத்திருந்தனர் என்று நம்புவதற்கு எதுவும் இல்லை.ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது உண்மையில் சிரியா அரசுதான் என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். அப்பாவி குடிமக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதத்தை சிரியா அரசு பயன்படுத்தி இருப்பதால், அதன் விளைவுகளை அந்நாடு சந்திப்பது அவசியமாகிறது.எனினும் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில், நேரடி ராணுவ தலையீடானது, தற்போதுள்ள சூழ்நிலைக்கு உதவாது என்று ஒபாமா தெரிவித்தார்.

http://dinamani.com/latest_news/2013/08/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-/article1758140.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதியலாம்.. இலங்கையில் 2009 இல் இரசாயனத் தாக்குதலை கண்டுகொள்ளாதவர்கள் சிரியாவின்மேல் பாய்கிறார்கள் என..

 

Chemical weapon + Oil = Action :rolleyes:

Chemical Weapon - Oil = Inaction :o:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
 
தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு எண்ணுமாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.