Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

CAF பணியாளர்களின் சடலங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூதூரில் படுகொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பிரெஞ் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த 17 ஊழியர்களின் உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம், பாதுகாப்பு அமைச்சு, அவுஸ்திரேலிய தூதுவராலயம், மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் நலன் குறித்து செயல்படுபவர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகளை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களின் பிரேத பரிசோதனை முன்னர் அனுராதபுர சட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி வைத்தியரட்னவினால், மேற்கொள்ளப்பட்டது.

பிரேதங்கள் பழுதடைந்த நிலையிலேயே பிரேத பரிசோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டதாக தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி, அதன் காரணமாக கொலைக்கு உபயோகிக்கப்பட்ட ஆயுதங்கள் குறித்து உறுதியான தகவல்களை பெற முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.

தலைகளிலும், ஏனைய பகுதிகளிலும் காயங்கள் காணப்பட்டதாகவும், விசாரணைகள் மேலும் தொடர வேண்டி இருப்பதனால் உடல்களை தோண்டி எடுக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டதன் பின்னர், அவுஸ்திரேலிய நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் இலங்கை வைத்தியர்கள் மீள பிரேத பரிசோதனையில் ஈடுபடுவர் என தெரிகிறது.

அதேவேளை, பிரான்சில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரெஞ் தொண்டர் அமைப்பின் தலைவர் பேணோயிட் மிரிபெல், சம்பவம் நடந்த மூதூர் பிரதேசத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலை மாவிலாறுக்கான மற்றொரு சுலுசுக்கதவை ஆக்கிரமிப்பதற்கான இராணுவ நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவம் தயாராகி வருகின்றது.

கடந்த இருநாட்களில் படைத்தரப்பு மேற்கொண்ட நகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

"வோட்டர் செட்" என்ற 15 நாட்கள் இராணுவ நடவடிக்கை மூலம் சிறிலங்கா இராணுவத்தினர் வெருகல் ஆற்றிலிருந்து சிங்களப் பகுதிக்கான மாவிலாறு-கல்லாறு கால்வாய்க்கான சுலுசுக்கதவை ஆக்கிரமித்தனர்.

இந்த சுலுசுக்கதவுக்கு 1 கிலோமீற்றர் தொலைவில் வெருகல் ஆற்றுக்கு குறுக்காக மற்றொரு சுலுசுக்கதவு உள்ளது. இந்த சுலுசுக்கதவு, விடுதலைப் புலிகளிடம் தற்போது உள்ளது.

இந்த சுலுசுக் கதவைப் பூட்டி வைப்பதால் மாவிலாறு கால்வாய்க்கு தண்ணீர் செல்வதற்கான தண்ணீர் மட்டம் உயர்த்தப்படும். இந்த தண்ணீர் மட்டம் உயர்ந்தால்தான் கால்வாய்க்குள் தண்ணீர் செல்லும். இந்த சுலுசுக்கதவை திறந்து விட்டால் மாவிலாறுக்கான தண்ணீர் மட்டம் கிடைக்காது போகச் செய்யலாம்.

அதனைத் திறப்பதன் மூலம் வெருகல் ஆறு தண்ணீரை கடலுக்குள் செல்ல விடலாம். இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மாவிலாறு சுலுசுக்கதவுக்கும் விடுதலைப் புலிகளிடம் இருக்கின்ற வெருகல் சுலுசுக்கதவுக்கும் இடையில் ஒரு கிலோமீற்றர் தொலைவு உள்ளது.

கடந்த இருநாட்களில் இதற்கான நகர்வு முயற்சியை இராணுவம் மேற்கொண்டது. அவை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

ஆனால் பெரும் நடவடிக்கை ஒன்றின் மூலம் அதனை ஆக்கிரமிக்க இராணுவத் தரப்பு தயாராகிக் கொண்டிருக்கின்றது. இதற்காக ஏற்கனவே நகர்த்தப்பட்ட இராணுவத்தினர் அங்கிருந்து மேலும் நகர முடியாத நிலை காணப்படுகின்றது.

மாவிலாறு ஒரு பின்கதை

இலங்கையின் அதிநீளமான ஆறு மகாவலி கங்கை.

இந்த கங்கைதான் அதிகளவு தண்ணீர்ப் பாய்ச்சல் கொண்ட ஆறு. இந்த ஆறு பொலநறுவை கடந்து திருகோணமலைக்குள் பாய்ந்து கடலில் கலக்கின்றது.

சிங்களத்தின் உலர்வலயப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மகாவலி அபிவிருத்தித்திட்டம் சிறிலங்கா அரசால் கொண்டு வரப்பட்டது.

அநுராதபுரம்-பொலநறுவை மாவட்டங்களில் இதன் முதன்மையான அபிவிருத்திகள் அமைந்திருந்தன. இதன் ஒருபகுதி மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் வருகின்றன. இந்த மாவட்டங்களில் மகாவலி திட்டம் மூலம் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன.

மகாவலி திட்டத்தில் அனுராதபுரம் ஊடாக வடக்கு வன்னிக்கும் மணலாறுக்கும் வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் அதன் வரைபுகளில் உள்ளன. இதன் வழியாக வன்னியிலும் சிங்களக் குடியேற்றங்களை கொண்டு வருவதுதான் நோக்கம்.

இதன் ஒருகட்டமாக மகாவலி எல் வலயத்திட்டமாக மணலாறு வெலி ஓயாவாக மாற்றப்பட்டு அங்கு சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டது.

திருகோணமலையில் மகாவலி திசை திருப்பப்பட்டு அல்லைக் கந்தளாய் என்ற குளம் கட்டப்பட்டு அதன் மூலம் பெரும் சிங்களக்குடியேற்றம் அமைக்கப்பட்டு அதன் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சேருவல என்ற திருகோணமலையின் பகுதி சேருநுவரவாக மாற்றப்பட்டு அல்லைக்கந்தளாய் வழியாக சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன. இந்த சேருவலவின் கிழக்குப்பகுதி அல்லைக்கந்தளாய் தண்ணீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன.

இதேபோல சேருவிலவின் தெற்குப்பகுதி மேற்குப்பகுதிக்கு தண்ணீர் வழங்க வேண்டும். இந்தப் பகுதிகள் கடும் வறட்சியான இடங்கள்.

இந்த இடங்களுக்கு நீர்ப்பாசனத் திட்டங்களை கொண்டு வருவதன் மூலமே மக்களை குடியேற்ற முடியும். குறிப்பாக சேருவில என்ற சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

இதனால் பொலநறுவை வழியாக குறிஞ்சாமுனையில் இருந்து வரும் வரும் மாகாவலியின் கிளை கிழக்காக வெருகல் என்ற பெயரில் திரும்புகின்றது.

இந்த வெருகல் ஆறு பிரியும் இடம் வெருகல் என்ற பெயரில் மக்கள் வாழ்கின்ற இடத்துக்கு மேற்காக 10 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கின்றது. இந்த இடத்துக்கு பழைய பெயர் மாவில்லு என்பதாகும்.

இப்பகுதியில் 1960 இல் வாய்க்கால் மாவிலாறு உருவாக்கப்பட்டது.

மாவிலாறுக்கான அணைக்கட்டு 3.5 கிலோமீற்றர் நீளமானது. 30 அடி உயரமானது.

வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்க 5 சுலுசுக்கதவுகள் உள்ளன. மாவிலாறிலிருந்து முதலாவது குடியிருப்பு வாய்க்கால் தொடங்கி 6 கிலோமீற்றர் தொலைவில் கல்லாறில் இருக்கிறது.

வெருகல் ஆறு அணைக்கட்டு மூலம் தடுக்கப்பட்டு தண்ணீர் உயர்த்தப்பட்டு மாவிலாறு வழியாக சேருவிலப் பகுதிக்கு திருப்பப்பட்டது. இதன் முலம் 30 ஆயிரம் ஏக்கர் வயற்பரப்பு தண்ணீரைப் பெறுகின்றது.

சேருவில-மேன்காமம்-மல்லிகைத்தீவு-கல்லாறு-சுங்கன்குழி-பாலத்தோப்பூர்-உட்பட்ட பகுதிகள் நீரைப் பெறுகின்றன். இவற்றில் பெரும்பான்மை வயற்பரப்புக்கள் சிங்களவருடையது.

இவற்றில் ஈச்சிலம்பற்று என்ற தமிழரின் பகுதியும் வருகின்றது.

ஈச்சிலம்பற்றின் பூநகர் உள்ளிட்ட அதிவறட்சிப்பகுதிக்கும் இந்த வாய்க்கால் செல்கின்றது.

தற்போது இது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக உள்ளது. இந்த வாய்க்கால் சேருவில வழியாக வரும் வாய்க்காலின் கடைசிப்பகுதி.

காலம் காலமாக இந்த இந்த வாய்க்கால் ஈச்சிலம்பற்றுக்கு திறக்கப்படுவதில்லை. இதன் தண்ணீர் முழுமையும் சிங்களக் குடியேற்றவாசிகளாலேயே பயன்படுத்தப்பட்டு விடும்.

இந்த மக்களுக்கு சிங்கள வயல்களில் நிரம்பி வரும் கழிவு தண்ணீர்தான் கிடைக்கும். கழிவு தண்ணீர் என்பது நிச்சயமற்ற வருகைக்குரியது. வறண்ட இப்பகுதி மக்களுக்கு குடிதண்ணீர், குளிதண்ணீர் அனைத்துமாக இந்த வாய்க்கால் தண்ணீராக இருக்க, அதை சிங்களவர் தடை செய்து வந்திருக்கின்றனர்.

இதனால் தமிழ் மக்கள் தொலைவுக்குச் சென்று குடிதண்ணீர் பெற்று வந்துள்ளனர். இந்த மக்கள் தண்ணீருக்காக அவலப்பட்ட வாழ்வே வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனால் முன்னர் தமிழ் மக்கள் மாவிலாறு சுலுசுக்கதவை அடிக்கடி மூடிவிடுகின்ற நிலைமை இருந்துள்ளது. இதனால் தமிழ்-சிங்கள வன்முறைகள் நடந்துமுள்ளன.

இதனையடுத்து அங்கு சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

பொட்டளி என்ற இடத்தில் சுலுசுக்கதவு அருகில்தான் இந்த முகாம் இருந்தது.

இந்த இடத்துக்கு செல்ல வேண்டுமானால் சேருவிப் பகுதிக்கு ஊடாக செல்ல பாதை இல்லை. மாவிலாறுக்கு வடக்காக இருக்கும் கல்லாறுப் பகுதிக்கு தெற்கில் சில கிலோமீற்றர் தொலைவு வரை அரைகுறை ஒற்றையடிப்பாதை இருக்கிறது.

இது மாவிலாறு வரை செல்லாது. இடையே காடும் சதுப்பு நிலங்களும் இருப்பதால் இதன் வழி போக்குவரத்துச் செய்யமுடியாது.

இதனால் இதற்கான வீதி மட்டக்களப்பின் கதிரவெளிக்கு ஊடாகவே அமைக்கப்பட்டது.

வெருகல் ஆறுக்கு தெற்காக மேற்கு நோக்கி இந்தப்பாதை அமைந்துள்ளது.

இதன் ஊடாகவே நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் சென்று சுலுசுக்கதவைத் திறப்பர்.

இது தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளது. 1991 இல் இதனை இராணுவத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

சிறிலங்கா இராணுவ இலகு காலாட்படை, 5 ஆம் பட்டாலியன் கப்டன் கே.ஏ.எல்.யு.ரத்னாயக்க,

6 ஆவது கெமுனுவோச் கேணல் அதுல கொடிப்பிலி,

இலகு காலாட்படை 6 ஆவது றெஜிமன்ட் கேணல் ஜயந்த

ஆகியோர் தலைமையில் 1991 பெப்ரவரி 7 இல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது மாவிலாறின் 2 சுலுசுக்கதவுகள் உடைபட்டன. இந்த உடைப்பை தடுக்க 6,000 மண் சாக்குகள் அப்போது பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து அங்குள்ள பொட்டளியில் படைமுகாம் அமைந்தது.

1994 இல் யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்கான "சூரியக்கதிர்" இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இங்கிருந்து ஒரு பகுதி படையினர் அகற்றப்பட்டனர்.

1997 இல் வன்னி ஆக்கிரமிப்பு "ஜெயசிக்குறு" நடவடிக்கைக்காக மாவிலாறு முகாம் படையினர் முற்றாக விலக்கப்பட்டனர்.

அப்போது அண்மையில் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க திருகோணமலைக்கு தளபதியாக இருந்தார். இதன் பின்னர் மாவிலாறு மீண்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

யுத்த நிறுத்தம் வந்தபோது விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியை வரையறுத்து இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிடம் வழங்கிய வரைபடத்தில் மாவிலாறு உள்ளடக்கப்பட்டிருந்தது.

மாவிலாறுக்கான பாதை கதிரவெளி உட்பட்ட வாகரை மற்றும் வெருகல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் விடுதலைப் புலிகளால் இதனை இலகுவாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

சிறிலங்கா இராணுவம் இதனை வைத்திருக்க வேண்டுமாயின் வாகரை-வெருகல் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

இப்போது மாவிலாறு பிரச்சனை தொடர்ந்த வண்ணமுள்ளது.

மாவிலாறால் ஒரு பெரும் இராணுவப் படையணி முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே "வோட்டர் செட்" நடவடிக்கையில் ஆட்டிலெறித்தளம் வெடித்துச் சிதறியதில் 9 ஆட்டிலெறிகள் படைத்தரப்பால் இழக்கப்பட்டுள்ளன.

அடுத்தகட்ட தயார்படுத்தலுக்கு இந்த ஆட்டிலெறிகளை ஈடுசெய்ய வேண்டிய தேவையும் அவர்களுக்கு இருக்கிறது.

20060813008.jpg

puthinam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.