Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலின் பாணியில் இலங்கை தாக்குதல்

Featured Replies

இஸ்ரேலின் பாணியில் இலங்கை தாக்குதல்!

[13 - August - 2006] [Font Size - A - A - A]

* `சென்னை' புலனாய்வு இதழ் நக்கீரனின் பார்வை இது

"ஸ்ரீலங்கா அரசு இனி ஒருமுறை எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையாக அதனை நாங்கள் கருதாமல், பரந்த அளவிலான ஒரு யுத்தத்தை எங்கள் மீது திணிப்பதாகவே கருதுவோம்" என்று எச்சரிக்கை கொடுத்திருந்தார் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன்.

இவர் இப்படி கூறிய சிலமணி நேரங்களிலேயே பிரச்சினைக்குரிய, மாவிலாறு மதகை திறப்பதற்காகச் சென்ற யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினர் மீதும், புலிகள் தரப்பினர் மீதும் வெடிகுண்டுகளை வீசியது இராணுவம். அதிர்ஷ்டவசமாக இவர்கள் உயிர்தப்ப, மேலும் பதற்றமாகியிருக்கிறது இலங்கைத் தீவு.

"இதனை நாங்கள் யுத்த பிரகடனமாகவே கருதுகிறோம். யுத்தத்தை எதிர்கொள்ள நாங்கள் தயார்" என்று தற்போது அறிவித்துள்ளனர் புலிகள். புலிகளின் அரசியல் தலைநகர் என வர்ணிக்கப்படுவது திருகோணமலை. ஆனால், இம்மாவட்டத்தின் 70 சதவீத பகுதிகள் இலங்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இம்மாவட்டத்தில் பாயும் வளமையான ஆறுகளில் மாவிலாறு முக்கியமானது. 9 தமிழர் கிராமங்கள், 3 சிங்கள கிராமங்கள், 1 முஸ்லிம் கிராமம் என 13 கிராமங்கள் உள்ளடக்கிய சுமார் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசனப்பகுதிகள் மாவிலாற்றால் பயன்பெற்று வருகின்றன. இதில் 3,000 ஏக்கர் பரப்பளவு மட்டும் தான் சிங்களவர்களுக்கானது. இந்தச் சூழலில் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக திடீர் திடீர் தாக்குதல்களை இராணுவம் நடத்தியதால், அப்பகுதிகளிலிருந்த தமிழர்கள் இடம்பெயர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தஞ்சமடைந்தனர்.

இப்படிப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் செய்துகொடுக்கவில்லை. ஜனாதிபதி மகிந்த அரசு. தங்களுக்கான அத்தியாவசிய பொருட்களைத் தேடி மாற்றுப் பகுதிகளுக்குப் போய்வர தமிழர்கள் முயற்சித்தபோது, கல்லாறு இராணுவ முகாம் வழியாகத்தான் போய்வர வேண்டியிருந்தது.

ஆனால், அங்கிருந்த இராணுவத்தினர் இதற்கு அனுமதி தர மறுத்தனர். இதனால், இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்த தமிழர்கள் மீண்டும் இடம்பெயர்ந்து புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தஞ்சமடைந்தனர். தஞ்சமடைவது அதிகமானதால் தண்ணீர் தேவை அதிகரித்தது.

இதனைத் தீர்ப்பதற்காக,

`ஆசிய அபிவிருத்தி வங்கி' அதிகாரிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திட திருகோணமலை மாவட்ட புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் எழிலனுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி எழிலன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழர் கிராமங்களும் சிங்கள கிராமங்களும் பயன்பெறுகிற மாதிரியான ஒரு செயல்திட்டம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதனை மகிந்த அரசு, `ஆசிய அபிவிருத்தி வங்கி'யினரை அழைத்து, `நீர் ஆதார செயல் திட்டம்' சிங்களவர் பகுதிகளுக்கு மட்டும் தான் நிறைவேற்ற வேண்டும். தமிழர் பகுதிகளுக்குக் கூடாது' என்று அழுத்தம் கொடுக்க, திட்டம் முடங்கிப்போகிற சூழல் எழுந்ததால் கோபமும் ஆத்திரமும் அடைந்த தமிழர்கள், படைசூழ திரண்டு மாவிலாறு மதகை இழுத்து மூடினார்கள். இதனால் 3 சிங்கள கிராமங்களுக்குச் சென்றுகொண்டிருந்த தண்ணீர் தடைபட்டது.

இதனால், ஆத்திரமடைந்த மகிந்த, அணை மதகை உடைத்தெறிய இராணுவத்தினருக்கு உத்தரவிட்டார். ஆனால், சிங்கள இராணுவமோ அணை மீது குண்டு வீசாமல், தமிழர்களின் குடியிருப்புகளை குறிவைத்து வான்வழி, தரை வழி தாக்குதலை நடத்த, தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள்.

உடனே, எதிர் தாக்குதலை புலிகள் நடத்த, இந்தத் தாக்குதலில் 12 போராளிகள், 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 8 இற்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன.

மூதூர் துறைமுகம் உள்ளிட்ட தமிழர் பகுதிகள் புலிகள் வசமானது. அடுத்து திருகோணமலையை கைப்பற்றுவது புலிகளுக்கு எளிதாகிவிடும் என்று பதறிய அதிபர் மகிந்த ராஜபக்ஷ, "பேச்சுவார்த்தைக்குத் தயார்" என்று அறிவித்ததோடு, நோர்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கரை அவசர அவசரமாக அழைத்து விவாதித்தார்.

அதிபரை சந்தித்துப் பேசிய நோர்வே தூதர், பிரபாகரனை சந்திக்க முயற்சித்தபோது, எஸ்.பி. தமிழ்ச்செல்வனை சந்திக்கச் சொல்லிவிட்டார் பிரபாகரன்.

இந்தச் சந்திப்பில் "தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை இலங்கை அரசு விலக்கிக்கொண்டுவிட்டு அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், மதகை திறக்க வழி காணப்படும்" என்றார் தமிழ்ச்செல்வன். அதற்கு, நோர்வே தூதர், "மனிதாபிமான அடிப்படையில் மதகைத் திறவுங்கள். உங்கள் கோரிக்கையை தீர்த்து வைக்கிறோம். அதற்கு 4 வாரம் டைம் தாருங்கள்" என்று கூற, இதனை ஒப்புக்கொண்டு விட்டு மாவிலாறு பகுதி தமிழர்களை அழைத்து இது குறித்து நீண்டநேரம் விவாதித்தார் தமிழ்ச்செல்வன். இதற்கிடையில் மகிந்தவை தொடர்புகொண்டு மதகை திறக்க புலிகள் ஒப்புக்கொண்டதை விவரித்தார் நோர்வே தூதர்.

இதனைத் தொடர்ந்து யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ஃப் ஹென்ரிக்சன் திருகோணமலை மாவட்ட புலிகள் அரசியல் பிரிவு தலைவர் எழிலன் மற்றும் அப்பகுதி தமிழர்கள் என ஒரு குழு, மாவிலாறு நோக்கிச் சென்றது. அப்போதுதான் இவர்களை நோக்கி இராணுவத்தினர் குண்டுகளை வீச, கண்காணிப்புக் குழு தலைவரை லாவகமாகச் சுற்றி வளைத்து பதுங்குகுழியில் கிடத்தி பாதுகாத்தனர் புலிகள்.

அன்று இரவே இயக்கத் தலைவர்களை அழைத்து விவாதித்துள்ளார் பிரபாகரன். இந்த ஆலோசனையில், "மக்கள் பிரச்சினை தீராமல் மதகை இனி திறப்பதில்லை" என்று முடிவெடுத்துள்ளனர். அத்துடன், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி மகிந்தவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைப் பொறுத்து ஒரு முடிவு எடுப்போம்." என்று இறுதியில் முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புலிகளின் சமாதான செயலக செயலர் புலித்தேவன், ஷ்ரீலங்கா அரசிடமும் எங்களிடமும் நோர்வே தூதர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதால், பேச்சுவார்த்தைக்குப் பிறகே எங்கள் முடிவு தெரியும்." என்கிறார்.

மகிந்தாவோ, லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை உலக நாடுகள் பெரியளவில் கண்டுகொள்ளாததால், நாமும் தமிழர்கள் பகுதிமீது இறுதிகட்ட தாக்குதலை நடத்தலாமா என்று ஆலோசித்து வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.thinakkural.com/news/2006/8/13/...es_page8362.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.