Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகத்தின்மக்கள் வைத்த நம்பிக்கை ஒரு மாயைதோற்றம்

Featured Replies

மீண்டும் மூண்ட போரும் சர்வதேச சமூகமும்

[14 - August - 2006] [Font Size - A - A - A]

மீண்டும் மூண்டுவிடக்கூடாதென்று கடந்த நான்கு வருடங்களுக்கும் அதிகமான காலமாக நாமெல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த முற்றுமுழுதான போர் ஆரம்பித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். வடக்கு, கிழக்கில் பலமுனைகளில் இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன. இரு தசாப்த கால உள்நாட்டுப் போரின் அவலங்களில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மக்கள் மீண்டும் அதைவிடக் கொடூரமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலநாள் சண்டைகளிலேயே ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடு வாசல்களைவிட்டு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். தோன்றக் கூடிய மனிதாபிமான நெருக்கடி முன்னென்றுமே கண்டிராத வகையிலானதாக அமையப் போகின்றது என்பதில் சந்தேகமில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. இடம்பெயர்ந்து பாடசாலைக் கட்டிடங்களிலும் கோவில்களிலும் மரங்களின் கீழும் தஞ்சமடைந்திருக்கும் மக்களை மனிதாபிமான உதவிப் பணிகளில் ஈடுபடுகின்ற தன்னார்வ நிறுவனங்கள்கூட அணுக முடியாத நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த உடன்படிக்கை சீர்குலைவதைத் தடுப்பதில் அக்கறை காண்பித்து வந்ததாகக் கூறப்படுகின்ற சர்வதேச சமூகமும் இலங்கை மீண்டும் போருக்குள் தள்ளப்பட்டிருக்கின்ற தற்போதைய இடரார்ந்த நிலை உருவாவதைத் தடுக்க இயலாத கையறு நிலையிலேயே இருந்தது. குறுகிய சில தினங்களுக்குள்ளாகவே பல நூறுபேரைப் பலியெடுத்து மேலும் உக்கிரமடைந்து கொண்டிருக்கும் மோதல்களைக் கண்ட கூட்டுத்தலைமை நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே) வெறுமனே அறிக்கையொன்றை மாத்திரம் விடுத்திருக்கின்றன. அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மோதல்களை உடனடியாக நிறுத்தி பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டுமென்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

2003 ஜூனில் டோக்கியோவில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் மகாநாட்டுக்குப் பிறகு இலங்கை நெருக்கடியில் குறிப்பாக நோர்வே அனுசரணையுடனான சமாதான முயற்சிகளில் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த கருத்துகளை வெளியிட்டுவந்த இக் கூட்டுத்தலைமை நாடுகளின் பிந்திய அறிக்கையும் முன்னைய அறிக்கைகளைப் போன்று ஒரே வாய்ப்பாட்டில் அமைந்திருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது, வன்முறை மேலும் தீவிரமடைவதையும் உயிரிழப்புகள் ஏற்படுவதையும் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உச்சபட்ச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன நெருக்கடியைத் தீர்ப்பதற்கு வன்முறை வழியாகாது. அப்பாவிக் குடிமக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் வேதனைகள் சகித்துக் கொள்ள முடியாதவை. சமாதான முயற்சிகளையும் நோர்வே அனுசரணையாளர்களின் பெறுமதிமிக்க பணிகளையும் கூட்டுத் தலைமை தொடர்ந்தும் உறுதிபட ஆதரிக்கிறது. போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அதிகரிக்கும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் கூட்டுத் தலைமை கடும் விசனமடைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மூன்று சமூகங்களையும் சேர்ந்த மக்களைச் சென்றடைந்து நிவாரண உதவி நிறுவனங்கள் அவற்றின் பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை, இலங்கை நிலைவரம் தொடர்பில் மதிப்பீடு செய்து உகந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய விரைவில் கூட்டுத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் சந்திக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே கூட்டுத்தலைமை நாடுகள் கடந்த மூன்று வருட காலத்தில் இலங்கை நெருக்கடி தொடர்பில் எத்தனையோ அறிக்கைகளை விடுத்திருக்கின்றன. அத்துடன், பல தடவைகள்கூடி தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கின்றன. ஆனால், நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கான சூழ்நிலை இலங்கையில் தோன்றுவதையோ அல்லது குறைந்தபட்சம் சமாதான முயற்சிகளின் ஒரேயொரு உருப்படியான விளைபயன் என்று ஒரு கட்டத்தில் வர்ணிக்கப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையாவது சீர்குலைந்து போகாமல் இருப்பதையோ கூட்டுத்தலைமை நாடுகளினால் உறுதிசெய்யக் கூடியதாக இருக்கவில்லை. இந்தப் பின்புலத்தில் நோக்குகையில் கூட்டுத்தலைமையின் பிந்திய அறிக்கையும் இலங்கையின் தற்போதைய நிலைவரத்தில் எத்தகைய மேம்பாட்டையும் கொண்டுவருவதற்கில்லை என்றுதான் கூறவேண்டும்.

சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்டத்தில் சர்வதேச சமூகம் காட்டிய ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் கண்ட இலங்கை மக்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் மீண்டும் போர் மூளக்கூடிய ஒரு சூழ்நிலை தோன்றுவதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்கப் போவதில்லை என்று உறுதியாக நம்பினார்கள். ஆனால், இச் சர்வதேச சமூகம் என்பதன் பிரதிபலிப்பு உலகின் வல்லாதிக்க நாடுகளின் நலன்களுக்கு இசைவானதாகவே இருக்கும் என்று சில முற்போக்கான அரசியல் சக்திகள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இன்று மீண்டும் இருண்ட சூழ்நிலைக்குள் நாடு தள்ளப்பட்டிருப்பதை நோக்கும்போது சர்வதேச சமூகத்தின் மீது இலங்கை மக்கள் வைத்த நம்பிக்கை ஒரு மாயைத் தோற்றம் போன்றதென்பதை உணரக்கூடியதாகவிருக்கிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து இனநெருக்கடிக்கு நியாயபூர்வமான அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு உதவுவதில் சர்வதேச சமூகத்துக்கு உண்மையானதும் ஆழமானதுமான அக்கறை இருந்திருந்தால் நிலைமை இந்தளவுக்கு வந்திருக்க நியாயமில்லை. உலகின் பல பிராந்திய நெருக்கடிகளில் தலையிட்ட சர்வதேச சமூகம் பின்னர் மக்கள் அழிக்கப்படுவதை கைகட்டிபார்த்துக் கொண்டிருந்த பல முன்னுதாரணங்கள் எம்முன்னால் விரிந்து கிடக்கின்றன. இலங்கை நெருக்கடியை பொறுத்தவரையிலும்கூட, போர் உக்கிரமடைந்து மக்கள் ஆயிரக்கணக்கில் அழிவதை சர்வதேச சமூகம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.