Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மைகளைக் கண்டறிந்த அம்மையார் தமிழர் உரிமைகளைப் பெற வழிவகுப்பாரா?

Featured Replies

Eelamurazu%20logo%20lead.jpgஇலங்கையில் உண்மையைக் கண்டறியும் பயணத்தை மேற்கொண்டு, ஆறு நாட்கள் அங்கு நின்றிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், இலங்கைத் தமிழர்களுக்கு நிகழ்ந்துள்ள கொடூரத்தை நேரில் பார்த்து உண்மைகளை அறிந்துகொண்டிருக்கின்றார்.

இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் சிங்களப் பேரினவாதத்தையே சீற்றம் கொள்ள வைத்திருப்பதன் மூலம் இது உறுதிப்படுகின்றது. ‘சிறீலங்காவின் பாதுகாப்பு அமைப்புகளால், மனித உரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளதாக’ குற்றம்சாட்டியுள்ள அவர், ‘சிறீலங்கா எதேச்சாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக’ தனது பயணத்தின் முடிவில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன், தன்னைச் சந்தித்தவர்களுக்கே இத்தனை அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது என்பதை அறிந்துகொண்ட அம்மையார், ‘தன்னுடன் கலந்துரையாடிய மனித உரிமை ஆர்வலர்கள் சிறீலங்காக் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என விசனத்தை வெளியிட்டிருக்கின்றார்.

‘40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து, போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்’ என வலியுறுத்திய அம்மையார், ‘இறுதிக் கட்டப்போரில் நடந்தது என்ன என்பது குறித்து நம்பகமான உள்நாட்டு விசாரணை நடத்தப்படாவிட்டால் அனைத்துலக விசாரணை நடத்தப்படலாம்’ என்றும் சிறீலங்கா அரசுக்கு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கின்றார்.

navi_pillai_lanka.jpg

அத்துடன், ‘போர் நடைபெற்ற வடக்குக், கிழக்கில் இருந்து படையினர் அதிகளவில் குறைக்கப்படவேண்டும்’ என்ற அவரது வலியுறுத்தலை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு உடனடியாக நிராகரித்துள்ளது. அம்மையாருடன் பேசும்போது இந்தக் கோரிக்கையை அவர் விடுத்தபோது ‘ஒரே இரவில் இராணுவத்தைக் குறைத்துவிட முடியாது’ என்று விளக்கமளித்த பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச, பின்னர் ‘தேசிய பாதுகாப்புக்கு எதிராக நவநீதம்பிள்ளையின் கோரிக்கை இருப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக படைகளை விலக்கமுடியாது’ என்றும் கோத்தபாய புதிய விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், ‘இலங்கையில் காணாமல்போன எவரும் இல்லை என்றும் அவ்வாறு காணாமல் போனவர்கள் யாராவது இருந்தால் அவர்களது பெயர்ப் பட்டியலைத் தம்மிடம் தாருங்கள் என்றும் நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் தெரிவித்திருக்கின்றார். பல ஆயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், நவநீதம்பிள்ளை அம்மையார் சென்ற இடமெங்கும் காணாமல் போனவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் படையெடுத்து வந்து போராட்டம் நடத்திய நிலையில் இந்தப் பொய்யை கோத்தபாய ராஜபக்ச நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் கூறியிருக்கின்றார்.

‘பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான வலியுறுத்தல், வழிபாட்டுத் இடங்கள் மீதான தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து தண்டித்தல்’ எனப்பல மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி அவற்றைத் தடுக்க சிறீலங்கா அரசு காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அம்மையார் சிறீலங்கா அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவரது இந்த வேண்டுகோள்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே மாற்றமடையும் என்பது திண்ணம்.

எனினும், சிறீலங்காப் பயணம் குறித்து இம்மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறியுள்ள அம்மையார், மார்ச் மாதத்தில் முழு அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். அந்த அறிக்கைகளே இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரங்களை அம்பலப்படுத்தும் ஒரு ஆதாரமாக அமையும். அந்த அறிக்கையே தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறுவதற்கான வாசலைத் திறந்துவைக்கும் திறவுகோலாகவும் இருக்கும்.

எனவே, உண்மைகளைக் கண்டறிந்த அம்மையார், தமிழர்களின் உரிமையை பெறுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கியுள்ளது. தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களை மட்டுமல்ல, இப்போது நீதிக்காக பேசுகின்ற எவரையும் ‘புலி முத்திரை’ குத்திவிடுகின்ற சிங்களப் பேரினவாதம், நவநீதம்பிள்ளை அம்மையாரின் பூர்வீகம் தமிழ் என்பதால் அவருக்கும் புலி முத்திரை குத்தி சினமூட்டியுள்ளது. சிங்களத்தின் சினத்தைத் தணிப்பதற்காகவோ என்னவோ கிடைத்த சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளையும் அவர் கடுமையாகக் குற்றம்சாட்டியிருக்கின்றார்.

‘இந்தியப் பாரம்பரியத்தில் இருந்து வந்தவள் என்பதால், விடுதலைப் புலிகளின் சார்பு பிரதிநிதி என்று இங்குள்ள சில அமைச்சர்களும், ஊடகங்களும் விபரித்தன. அவர்களின் பணத்துக்காக செயற்படுபவள் என்றும் பெண் புலி என்றும் கூறினர். இது தவறானது என்பதுடன் மிகமோசமான தாக்குதல். பல உயிர்களை கொன்றழித்த இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பே புலிகள் அமைப்பு. நீலன் திருச்செல்வத்தையும் அவர்கள் கொலை செய்தனர். இப்படியான இரக்கமற்ற அமைப்புக்கு, மகிமைமிக்க ஐ.நா அமைப்பில் மரியாதை கிடைக்கும் என்று புலிகளிடம் பணம் பெறும் புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்பார்க்க முடியாது’ என்று அம்மையார் கூறியிருக்கின்றார்.   

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இத்தனை கொடூரங்களையும், இன்று அங்கு நடந்துகொண்டிருக்கும் அச்சுறுத்தல்களையும் நேரிலேயே கண்டறிந்துகொண்டிருக்கும் அம்மையார், விடுதலைப் புலிகள் குறித்தும் அவர்களது போராட்டம் குறித்தும் இன்னமும் சிங்களத்தினதும், பிராந்திய வல்லாதிக்க சக்திகளினதும் பரப்புரைக்குள் சிக்குண்ட தப்பபிப்பிராயங்களையே கொண்டிருக்கின்றார் என்பது தமிழர்களுக்கு வேதனை தரக்கூடியது.

தமிழர்களின் விடுதலைக்காகவே விடுதலைப் புலிகள் இறுதி வரைக்கும் ஆயுதம் தாங்கிப் போராடியவர்கள் என்பதையும், அதற்காகவே உலக வரலாற்றில் எங்கும் இல்லாதளவிற்கு அர்ப்பணிப்புக்களுடன் தங்களையே தியாகம் செய்தார்கள் என்பதையும் அம்மையார் உணர்ந்துகொள்ளவேண்டும்.

புலிகளுக்கு அஞ்சித்தான் தமிழர்கள் இருந்தார்கள் என்றால், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் முற்றாக முடங்கிப்போயுள்ள இந்த நிலையிலும், புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் தமிழீழத் தேசியத் தலைவரின் நிழற்படத்தையும், தமிழீழத் தேசியக் கொடியையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள். ஆண்டுதோறும் நடக்கும் மாவீரர் நிகழ்வில் இத்தனை பேரெழுச்சியாக தமிழ் மக்கள் கலந்துகொண்டிருக்கமாட்டார்கள். தங்கள் மண்ணின் விடுதலைக்காக போராடியவர்கள் என்பதற்காகவே தமிழ் மக்கள் இன்றுவரை அவர்களுக்குத் தலை வணங்குகின்றார்கள். இந்த உண்மையை அம்மையார் புரிந்துகொள்ளவேண்டும்.

அம்மையார் வகிக்கும் பதவியும், பொறுப்பும் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இப்போது வழங்காது போகலாம். ஆனால், தமிழ் மக்களின் ஆதரவுடன், தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட உன்னதமான இந்த விடுதலைப் போராட்டம், உலக வல்லாதிக்க சக்திகளுக்கு அடிபணிய மறுத்ததே அழிக்கப்பட்டதற்குக் காரணம் என்பதை வரலாற்றின் ஒரு கட்டத்தில் அம்மையார் உணர்ந்துகொள்வார் என்றே தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால், காலம் கடந்த அவரது புரிதல், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுத் தரப்போவதில்லை. 

ஆசிரியர் தலையங்கம்

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32811/64//d,fullart.aspx

அவ உண்மையைச் சொன்னாலும், விடுதலையை நாம்தான் போராடிப் பெற்றுக்கொள்ளவேண்டும். அவ சொல்வதில் எமக்கானவற்றை எடுத்து மனச்சாட்சியுள்ள மனிதனேயமுள்ள மக்கள் முன் வைத்து, எமக்குரிய நீதிக்கான மக்களை/அரசுகளை ஒன்றுதிரட்டி, நாம்தான் போராடவேண்டும். எமக்கான விடுதலையை யாராவது தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தருவார்களென கனவு கண்டுகொண்டிருந்தால், கட்டியிருக்கும் கோவணமும் களவுபோய்விடும். ம்ம்...

அவ உண்மையைச் சொன்னாலும், விடுதலையை நாம்தான் போராடிப் பெற்றுக்கொள்ளவேண்டும். அவ சொல்வதில் எமக்கானவற்றை எடுத்து மனச்சாட்சியுள்ள மனிதனேயமுள்ள மக்கள் முன் வைத்து, எமக்குரிய நீதிக்கான மக்களை/அரசுகளை ஒன்றுதிரட்டி, நாம்தான் போராடவேண்டும். எமக்கான விடுதலையை யாராவது தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தருவார்களென கனவு கண்டுகொண்டிருந்தால், கட்டியிருக்கும் கோவணமும் களவுபோய்விடும். ம்ம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.