Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகள் புலத்திலும் தாயகத்திலும் எதிர் நோக்கும் பிரச்சனைகள் கலந்துரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் போராளிகள் புலத்திலும் தாயகத்திலும் எதிர் நோக்கும் பிரச்சனைகள் கலந்துரையாடல்

ltte-former.jpgதம் வாழ்வில் பற்பல இன்னல்களையும், விரக்திகளையும், ஆதங்கங்யும் கொண்டுள்ள முன்னாள் போராளிகள் என்ற ஓர் குழுமத்தை இலங்கையில் நடைபெற்ற 30 வருட ஆயுதப்போரட்டம் உருவாக்கியிருக்கிறது.இலங்கையிலும், வெளிநாடுகளிலும் இப்பொழுது வாழ்கின்ற இநத முன்னாள் போராளிகளின் நிலைமைகள் பற்றியும், அவர்கள் தற்போது எதிர்கொள்கின்ற இன்னல்களையும், பிரச்னைகளையும், தேவைகளையும்  இனம் கண்டு அவர்களின் கொளரவமான சமூக வாழ்விற்கு உதவிகளையும் சரியான வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ள வழி சமைப்பதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக லண்டன் தமிழர் தகவல் நடுவம், கிங்ஸ்ரனில் உள்ள அதன் அலுவலகத்தில் கடந்த ஞாயிறு , 07ந்திகதி ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தியிருந்தது.

 

முன்னாள் போராளிகள் பலரும், சமூக ஆர்வலர்களும், தமிழ் இன நலன் பற்றிய அக்கறை கொண்டவர்களும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.ஈழ விடுதலைகாகப் போராடிய முன்னாள் போராளிகள் நலன்பற்றிய பொறுப்புணர்வும் அவர்களின் எதிர்காலம் பற்றிய மானசிகமான அக்கறையும் அனைத்துத் தமிழர்களுக்கும் இருக்க வேண்டும்இது அவர்களது மனிதாபிமானதும், தார்மீகச் சமூகக் கடமையும் என்பதை அவர்கள் உணர்ந்து செயற்படுவது அவசியம் என எடுத்துரைக்கப்பட்டது.

 

இலங்கையிலும் வாழும் இப் போராளிகள் பாதுகாப்பு இல்லாதஅச்ச உணர்வு கொண்ட, வாழ்வாதாரங்கள் அற்ற, சுயகொளரவம் இழந்தவர்களாக, சொந்த சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் சூனிய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  

 

இலங்கை அரசாங்கத்தின் கெடிபிடிகளிலிருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள் பலருக்கு, சரியான வழிகாட்டலும் உதவிகளும் இல்லாது, சர்வதேச பாதுகாப்பு மறுக்கப்பட்டு பல நாடுகளில் கடுமையான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

 

ஈழமண்ணின் மைந்தர்களான இநத முன்னாள் போராளிகள், இலங்கை அரசாங்கம், உள்ளூர் சமூகம் மற்றும் சர்வதேச சமூகம் ஆகிய அனைத்தினாலும் கைவிடப்பட்டு ஆதரவின்றித் தனித்து விடப்பட்டுள்ளனர். 

இக் கலந்துரையாடலில், இப் போராளிகளின் நிலைமைகள் பற்றியும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களும், அமைப்புகளும், செய்யக்கூடிய விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டு, அவை பற்றிய கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

 

மேற்கொண்டு இவ் விடயங்கள் சம்பந்தமான வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு, தற்காலிகமாகச் செயற்பட முன்வந்த முன்னாள் போராளிகளைக் கொண்ட முன்னாள் போராளிகள் குழுமம்ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இக் குழமம் முன்னாள் போராளிகள், அவர்களது பிரச்னைகள், தேவைகள் ஆகியவை உள்ளளடங்கிய பட்டியல் ஒன்றையும், அவை சம்பநதமான செயற்திட்டங்களையும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்தான தேவைகளையும் தயாரித்துவெளிநாடுகளில் இயங்கும் தமிழ்ச் சமூகம் மற்றும் அமைப்புகளினதும்  உதவிகளையும், ஆதரவுகளையும், அனுசரணைகளையும பெற முயற்சிகள் எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

 

இது சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு, லண்டன் தமிழர் தகவல் நடுவம் தொலைபேசி:020 8546 1560, E-Mail: info.tic@sangu.org, தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

 

http://nerudal.com/nerudal.58954.html

முன்னாள் போராளிகளால் மற்றவர்கள் புலத்திலும் தாயகத்திலும் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி கலந்துரையாட மாட்டியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளால் மற்றவர்கள் புலத்திலும் தாயகத்திலும் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி கலந்துரையாட மாட்டியளோ?

 

கருத்தரங்கு

அல்லது

பிரச்சினைகள் பற்றி ஆராய்வதாக இருந்தால்

இதுவும் அங்கு செய்யப்படணும்

காரணம்

மக்கள் மேல் பாசமுள்ள போராளிகளை மிகவும் சீரளிக்கும் வேலைகளைப்பலர் செய்யத்தொடங்கியுள்ளனர்.

இவர்களை   தெரிந்தவர்கள்  மக்களுக்கு  அவர்களை இனம் காட்டவேண்டும்

அந்த கடைப்பாடு அவர்களுக்கு உள்ளது

அவர்களால்  மட்டுமே அது முடியும்.

கருத்தரங்கு

அல்லது

பிரச்சினைகள் பற்றி ஆராய்வதாக இருந்தால்

இதுவும் அங்கு செய்யப்படணும்

காரணம்

மக்கள் மேல் பாசமுள்ள போராளிகளை மிகவும் சீரளிக்கும் வேலைகளைப்பலர் செய்யத்தொடங்கியுள்ளனர்.

இவர்களை   தெரிந்தவர்கள்  மக்களுக்கு  அவர்களை இனம் காட்டவேண்டும்

அந்த கடைப்பாடு அவர்களுக்கு உள்ளது

அவர்களால்  மட்டுமே அது முடியும்.

:icon_idea:  :icon_idea:  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தரங்கு

அல்லது

பிரச்சினைகள் பற்றி ஆராய்வதாக இருந்தால்

இதுவும் அங்கு செய்யப்படணும்

காரணம்

மக்கள் மேல் பாசமுள்ள போராளிகளை மிகவும் சீரளிக்கும் வேலைகளைப்பலர் செய்யத்தொடங்கியுள்ளனர்.

இவர்களை   தெரிந்தவர்கள்  மக்களுக்கு  அவர்களை இனம் காட்டவேண்டும்

அந்த கடைப்பாடு அவர்களுக்கு உள்ளது

அவர்களால்  மட்டுமே அது முடியும்.

 

விசுகு,

நாங்கள் மகிந்தவுக்கு அனைத்துலகம் போர்க்குற்ற விசாரணை செய்யக்கோரி உலகத்தை அழுத்துகிறோம்.  ஆனால் இந்த உலகமோ கடைசிவரை களத்தில் நின்று ஊனங்களோடும் இழப்புகளோடும் புலம்பெயர்ந்துள்ள பல போராளிகளை சர்வதேச நீதி மன்றில் நிறுத்துவதற்கான முயற்சிகள் செய்கிறது. இதை நீங்கள் அறிந்தீர்களோ தெரியாது.

பல போராளிகள் தளபதிகளை இந்த ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்ரேலிய அரசாங்கங்கள் புலிகள் செய்த போர்க்குற்றங்கள் மீதான சர்வதேச விசாரணையைக் கோரி பல போராளிகளது வாழ்வை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

 

புலம்பெயர்ந்த நாடுகளில் பல போராளிகளுக்கு கிடைக்க வேண்டிய சமூக உதவிகள் கூட அதாவது உணவுக்குக்கூட உதவியில்லாத நிலமையில் நண்பர்கள் தெரிந்தவர்களின் உதவிகளில் வாழ்கிற போராளிகள் பலர் இருக்கிறார்கள்.பலர் மனநோயாளிகளாக மனஅழுத்தத்தால் பாதிப்புற்றவர்களாக இப்படி பல துன்பங்களுடன் இருக்கிறார்கள்.

தமிழ் வழக்கறிஞர்கள் பலர்  இத்தகைய போராளிகளின் வாழ்வையே நாசம் பண்ணியுள்ள நிலமையும் இருக்கிறது. பணத்துக்காக அவர்களது வழக்கு விண்ணப்பங்களைக் கூட இழுத்தடித்து பலரது வாழ்வை இக்கட்டில் வீழ்த்தியுள்ளனர். நீங்கள் வாழும் நாட்டில் கேஸ் எழுதித் தருகிறோம் என்பவர்களுக்கு பணத்தையும் இழந்து அவர்களது வழக்குகள் கூட குறித்த போராளிகளை சிக்கல்களில் மாட்டியுள்ளது.

 

இப்படி பல வகையில் அவலப்படும் போராளிகளுக்கு சட்ட , சமூக உதவிகளை சரியான முறையில் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழரின் கையிலும் உள்ளது. அந்தக் கடமையுணர்வே இந்தக் கலந்துரையாடல் மூலம் செய்யப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் 40மேற்பட்ட போராளிகள் கலந்து கொண்டு தங்கள் நிலமைகள் தேவைகள் பற்றிப் பேசியுள்ளனர்.

மண்ணில் உள்ள போராளிகள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த போராளிகளும் தனது சமூகத்தாலேயே கைவிடப்பட்டு தற்கொலைக்கு போய் காப்பாற்றப்பட்டும் , தனது இயலாமையை எண்ணி நோயாளர்களாகவும் மாறியிருக்க போராளிகளின் வாழ்வை சீர்படுத்தவே இந்த முயற்சி முதலாவதாக எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் துயரமான நிலமையில் உள்ளவர்கள் பற்றி செய்தியில் கூட தங்கள் வக்கிர புத்தியை குறிகாட்டி மூலம் வெளிப்படுத்தியும் நக்கலடித்தும் கொச்சைப்படுத்தும் நல்லவர்களும் இதே திரியில் தங்கள் பங்கை வெளிப்படுத்தியுள்ளார்கள்.  அவர்கள் நல்லாயிருப்பார்கள்.

 

 

பல இன்னல்களை தாண்டி புலம்பெயர்ந்த பல முன்னாள் போராளிகளை காட்டி குடுத்ததும் முன்னாள் போராளிகளே... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல இன்னல்களை தாண்டி புலம்பெயர்ந்த பல முன்னாள் போராளிகளை காட்டி குடுத்ததும் முன்னாள் போராளிகளே... 

 

காட்டிக்குடுப்பு எல்லா போராட்டங்களிலும் எல்லா போராளிக் குழுமங்களிலும் இருந்து வருகிறது. கிபூப விடுதலையை வென்றெடுக்க ஆர்ஜென்டீனாவில் பிறந்து  தென்னமெரிக்க , ஆபிரிக்க காடுகளிலும் மலைகளிலும் தனது காலத்தை அழித்த சேகுவரா முதல் தலைவர் பிரபாகரன் வரை போராளிகளை வஞ்சமும காட்டிக் கொடுப்புமே அழித்துக் கொண்டிருக்கிறது.

 

சிலரின் தவறுகளை பலருக்கு உதாரணமாக்குவது விவாதத்துக்கு காரமாக இருக்கும் ஆனால் ஆதரவு தேவைப்படுகிற போராளிகளின் வாழ்வுக்கு அரைச்சாண் உயர்வையும் தராது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசுவோம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போராளியை பயங்கரவாதி போர்க்குற்றவாளியென ஐரோப்பிய நாடொன்று மனிதாபிமானமற்று நடந்து கொள்ளும் ஒரு போராளியின் உண்மை கீழ்வரும் பதிவு:இது ஒரு உதாரணம் மட்டுமே.

 

அன்று போராளி இன்று போர்க்குற்றவாளி ?

"இறுதியுத்தத்தின் போது தமிழ் மக்களை மனிதக்கேடயங்களாக புலிகள் பயன்படுத்தினார்கள். கட்டாய ஆட்சேர்ப்பை நடாத்தினார்கள். கட்டாயமாக களத்தில் கொலை செய்தார்கள் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்தினார்கள்.இப்படியான மனிதகுலத்துக்கு எதிரான காரியங்களை புலிகள் செய்தார்கள்.அதனால் அந்த அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அந்த அமைப்பில் இருந்ததற்காக இவை எதிலும் அவன் சம்மந்தப்பட்டது கூறப்பட்ட குற்றங்கள் ஒன்றுகூட நிரூபிக்கப்படாதிருந்தும் அந்த இளைஞன் ஜனநாயகத்தின் வாசலான நாடு ஒன்றில் அகதித்தஞ்சம் கோரியபோது போர்க்குற்றவாளியாக்கப்பட்டு அகதியாக ஏற்றுக் கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த நாட்டில் இவனுக்கு மருத்துவம் இல்லை , உணவுக்கான உதவியில்லை  , தொழில் செய்ய முடியாது வீட்டுக்காவலில் இருப்பதுபோல நிலமை. இன்றோ நாளையோ என்றோ திருப்பியனுப்பப்படும் நிலமையில் உள்ள மகனை நினைத்து ஊரிலிருந்து தினமும் ஏங்குகிற பெற்றோர்களின் துயர் மட்டுமன்றி ஏற்கனவே களத்தில் காயமுற்ற உடல்வலி மனவலியும் கூட தினம் தினம் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஓர் இளம் போராளியின் நிலமையே கீழ் வரும் உண்மை"

 

இவன் தனது சிறு வயதில்; புலிகள் அமைப்பில் இணைந்து இறுதி வரையும் வன்னிக்கள முனையிலே இருந்தவன். விடுதலைப்புலிகளின் பல முக்கியமான படைப்பிரிவுகளில் அவன் தன்னை அர்ப்பணித்து ஆற்றிய பணியென்பது விடுதலைப்பாதையில் வரலாறுகளாய் பதியப்பட வேண்டிய ஆயிரமாயிரம் கதைகளைக் கொண்டவை. இவனுடைய போராட்ட வாழ்க்கையில் இவன் சந்தித்தவை துன்பங்களும் துயரங்களும் மட்டும்தான். ஆனால் எல்லாவற்றையும் அவன் சவாலாகச் சந்தித்து முறியடித்து அத்தகைய பெரும் ஆபத்துகளிலிருந்தும் அவன் வெளியேறிய பாங்கு வியப்புக்குரியது.

 

இவனது ஆழுமை ஆற்றல் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. ஆயுதங்களோடு சமராடிக்கொண்டிருந்தவனை கல்வி கற்க வைத்து இன்றைய உலகம் எதிர்பார்க்கிற கல்வியையும் அவன் கற்க வேண்டுமென்று அவனை வளர்த்த தளபதியின் விருப்பத்தையும் நிறைவேற்றி கல்வியையும் கற்றான். பல முக்கிய இராணுவ நகர்வுகளில் இவனது பங்கும் வெற்றியும் வரலாற்றில் எங்கும் பதியப்படாதவை.

 

2008 இறுதிப்போர் கிளிநொச்சியை அண்மித்த வேளையில் தலைவரின் விசேட பணிப்பிற்கமைய 100பேர் கொண்ட அணியொன்றை எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இரகசியமாக ஊடுருவி பின்புறமாக வழிநடத்தியபடி முன்னேறிக்கொண்டிருந்த போது எதிரியின் எதிர்த்தாக்குதலில் காயமுற்றான். உடலின் பாகங்களில் கணிசமானவை பாதிப்புற்று பிணங்களோடு அடுக்கப்பட்டவன்.

 

பின்பு தனது வாழும் கணங்களை எண்ணிக் கொண்டிருந்த போது எதிர்பாராத அதிசயமாக மருத்துவர் ஒருவரின் கவனமும்  கடவுளின் கருணையாலும் அவனின் தன்னம்பிக்கையும் இவனைக் காத்து இன்றுவரையும் வாழ வைத்துள்ளது.

 

காயமடைந்ததும் அனேகம் போராளிகள் குப்பியடிக்கவே முயற்சிப்பார்கள் இதன் காரணமாக முற்கூட்டியே அருகில் நிற்பவர் முதல் பணியாக குப்பியை அறுத்தெடுத்துவிடுவது வளமை. இவனும் காயத்தின் தாக்கம் உயிர் தப்புவது சிரமம் என்ற நிலமையில் குப்பியைத் தருமாறு தோழர்களிடம் வேண்டினான். காயமடைந்த களத்திலிருந்து அகற்றி மருத்துவத்துக்காகக் கொண்டு செல்ல 13மணித்தியாலங்கள் வரையும் காத்து போராடி இவனைக் காக்க வேண்டுமென்று முயற்சித்தவர்கள் குப்பியை கொடுக்கவேயில்லை.

அப்ப குப்பிடியச்சிருந்தா இப்ப தினம் தினம் சாக வேண்டி வந்திராது. இப்படித்தான் இப்போது அடிக்கடி சொல்லிக் கொள்கிறான். இப்போது அந்தக் குப்பியைத் தராத தோழர்கள் மீது கோபம் வருகிறது. தாயகம் என்ற கனவோடு கல்வியை நல்வாழ்வை குடும்ப உறவுகளை வெறுத்த தாயகக்கனவுக்கு இந்தக்காலமும் இந்தக்கால மனிதர்களும் கொடுத்துள்ள தண்டனையை நினைக்கும் போதெல்லாம் வெளியிட முடியாது வெறுப்பும் கோபமும் மிஞ்சுகிறது....!

2009 மே 17 அன்று கடும்காயத்தோடு சரணடைந்து முகாம் வாழ்வு அன்றாட உணவுக்கு வரிசையில் நின்று மயங்கிவீழ்ந்து மீண்டும் காயம் கடுமையாகி இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பலமுறை கிழித்து சீர் செய்யப்பட்ட வயிற்றுக்காயம் உறவுகளை எங்கேயென்று தேட முடியாத அவலத்திலும் ஏதோ வளியாய் குடும்ப உறவுகளின் தொடர்பு கிடைத்தது. சிறைக்கு கொண்டு செல்லப்பட இருந்த வேளையில் ஒரு சிங்களமருத்துவத்தாதியின் மனிதநேய உள்ளத்தால் காப்பாற்றப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற உதவி கிடைத்தது.

பிணங்களோடு குறையுயிரில் புதைக்கப்படாது காப்பாற்றப்பட்டவனை பெற்றோரும் வெளிநாட்டில் இருந்த உறவொன்றின் மூலம் ஐரோப்பா அனுப்பி வைத்தனர். ஐரோப்பியநாடு அமைதியையும் பாதுகாப்பையும் தருமென்ற நம்பிக்கையோடு அகதி விண்ணப்பம் நிரப்பினான்.

 

ஐரோப்பாவில் வழக்கு நடத்துவதில் தற்போது தமிழ் சட்டத்தரணிகள் நிறைய நிறுவனங்களாக இயங்குகின்றன. தமிழ் சட்ட வல்லுனர்களால் மட்டுமே தன்னைக்காப்பாற்ற முடியுமென்று நம்பிய இந்த இளைஞன் தமிழ்சட்ட வல்லுனர் ஒருவரிடம் தனது வழக்கை தாக்கல் செய்ய ஆதரவை நாடினான். அந்தத் தமிழ்சட்ட வல்லுனர் தானே வழக்கை எழுதி இவனுக்கான வாழ்வு வருமென்று நம்பிக்கை கொடுத்தார். அந்த நாட்டில் அவன் தடைசெய்யப்படும் வரை தனது தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் பயன்படுத்தி மேற்படிப்பை தொடர்ந்தான். தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை உருவாக்கினான். ஆனால் காலம் அவனை விடாமல் கலைத்தது.

வலுவற்ற உடலின் காய வலியும் இரவுகளைத் துரத்துகிற பயங்கரம் மிக்க கனவுகளும் மன அழுத்தத்தைக் கொடுத்து ஓய்ந்து உறங்க முடியாத அவலத்தோடு அல்லப்பட்டுக் கொண்டிருந்தவன் போர்க்குற்றவாளி என அவன் வாழ்கிற நாடு தீர்ப்பு வழங்கியது.

 

வந்தநாள் முதல் இன்று வரை சமூக உதவிக் கொடுப்பனவும் இல்லை மருத்துவம் இல்லை வேலைசெய்ய முடியாத தடை இப்படி எல்லா வழிகளையும் ஜனநாயக நாடொன்று மறுத்து இவனைப் பயங்கரவாதியாய் பட்டியலிட்டு வைத்திருக்கிறது.

 

இப்போது மறுமுறையீடு நிராகரிக்கப்பட்டு தினம் தினம் நாடுகடத்தப்படுவேனோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போது இவன் ஒரு போர்க்குற்றவாளியாக கருதப்பட்டு(ஆனால் நிரூபிக்கவில்லை) அடிப்படை மனிதவுரிமைகளும் மீறப்பட்டு மருத்துவமும் கிடைக்காது அவதிக்குள்ளாகியுள்ளான்.

 

இந்த இனத்தை நம்பி இந்த இனத்துக்காக போராடிய பலரது வாழ்வு இன்று ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்ரேலிய நாடுகளால் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்படுகிறது. தாயகக்கனவோடு போன எங்களுக்கு உலகமும் எங்களினமும் கொடுத்திருக்கிற வாழ்வின் கொடுமையை அனுபவிக்கிற ஒவ்வொரு போராளிக்கும் தினம் தினம் மரண வேதனையாகவே கழிகிறது.

 

எங்களுக்கென்றொரு நாடு வேண்டி தங்கள் காலத்தை தந்தவர்கள் எங்கள் கண்முன்னால் எதுவுமேயற்றுத் தவிக்கிறார்கள். புலம்பெயர்ந்து பயங்கரவாதிகள் எனப்படுகிற முன்னாள் போராளிகளுக்கான ஆதரவை வழங்க எங்கள் மனக்கதவைத் திறப்போமா ?

10.12.2012

http://mullaimann.bl.../blog-post.html

Edited by shanthy

காட்டிக்குடுப்பு எல்லா போராட்டங்களிலும் எல்லா போராளிக் குழுமங்களிலும் இருந்து வருகிறது. கிபூப விடுதலையை வென்றெடுக்க ஆர்ஜென்டீனாவில் பிறந்து  தென்னமெரிக்க , ஆபிரிக்க காடுகளிலும் மலைகளிலும் தனது காலத்தை அழித்த சேகுவரா முதல் தலைவர் பிரபாகரன் வரை போராளிகளை வஞ்சமும காட்டிக் கொடுப்புமே அழித்துக் கொண்டிருக்கிறது.

 

சிலரின் தவறுகளை பலருக்கு உதாரணமாக்குவது விவாதத்துக்கு காரமாக இருக்கும் ஆனால் ஆதரவு தேவைப்படுகிற போராளிகளின் வாழ்வுக்கு அரைச்சாண் உயர்வையும் தராது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசுவோம்.

 

என்னை கேட்டால் நான் தூரத்தில் இருக்கவே விரும்புகிறேன்... !   நம்பிக்கை வைத்து பின்னாலை போற அளவுக்கு நம்பிக்கையானவர்கள் இங்கை யாரும் கிடையாது... அப்படி எல்லாரையும் அரவணைத்து போகும் விட்டு கொடுப்பு அமைப்புக்களும் கிடையாது...  

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை கேட்டால் நான் தூரத்தில் இருக்கவே விரும்புகிறேன்... !   நம்பிக்கை வைத்து பின்னாலை போற அளவுக்கு நம்பிக்கையானவர்கள் இங்கை யாரும் கிடையாது... அப்படி எல்லாரையும் அரவணைத்து போகும் விட்டு கொடுப்பு அமைப்புக்களும் கிடையாது...  

கடைசிவரை மண்ணில் நின்று எல்லாம் இழந்து வந்துள்ள போராளிகளை ஒரு போராளி நீங்களே கைவிடப்போறீங்களா ?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.