Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அயல்வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறிய விக்னேஸ்வரன், இந்திய அரசின் தலையீட்டை பாராட்டுவது ஏன்? சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
seeman-040313-seithy-150.jpg

ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தீர்மானித்தவர் செல்வா அவர்கள்தான். தமிழ் நாடு இதனை முடிவுசெய்யவில்லை என்பது விக்னேஸ்வரனுக்கு தெரியாதோ? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்க மாட்டார்கள்.

  

ஈழத் தமிழர்களின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முதலில் சிங்கள காவல்துறையையும், பிறகு இராணுவத்தையும் ஏவிவிட்டு தமிழர்களை திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கிய இலங்கையை ஆண்டு வந்த சிங்கள பெளத்த இனவாத அரசுகளின் இனவெறிபிடித்த நடவடிக்கைகளே அங்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டது என்கிற வரலாறும் விக்னேஸ்வரன் அறியாதவரோ? அதனால்தான், ஏதோ தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையை பேசுவதனால்தான் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கதை விடுகிறார்.

இலங்கைத் தமிழினத்தின் அரசியல் விடுதலை வரலாறு விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர் கொழும்புவில் சட்டப் பணியாற்றிக்கொண்டு, பிறகு நீதிபதியாகி வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். சிங்கள அதிகார, அரசியல் குடும்பங்களோடு திருமண சம்பந்தம் செய்துகொண்டு பாதுகாப்பாக வாழ்ந்து வந்தவர்.

 

எனவே, ஈழத் தமிழினத்தின் 60 ஆண்டுக்கால துயரம் விக்னேஸ்வரன் அறியாதது. அந்த துயரத்திற்குக் காரணமான சிங்கள பெளத்த இனவாத அரசியல் அவருக்கு புரிந்திருக்கவில்லை. அதனை விக்னேஸ்வரன் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஈழத் தந்தை செல்வா ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வந்துள்ள புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும்.

 

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சினை, ஒரு குடும்பத்தின் கணவருக்கும் மனைவிக்குமான பிரச்சினை போன்றது, அதில் பக்கத்து வீட்டார் தலையிடக்கூடாது, நாங்கள் அடித்துக்கொள்வோம், பிறகு கூடிக்கொள்வோம் என்று விக்னேஸ்வரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். விக்னேஸ்வரன் கூறியுள்ள இந்த எடுத்துக்காட்டை தமிழீழ மக்களிடம் கூறினால் வாயால் சிரிக்க மாட்டார்கள்!

 

சிங்கள பெளத்த இனவாத அரசியலின் அடிப்படையை புரியாத அல்லது இல்லாததுபோல் காட்டிக்கொள்ள விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார். தமிழருக்கும் சிங்களவருக்கும் உள்ள பிரச்சினைதான், இதில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், பிறகு இந்திய அரசின் தலையீட்டை பாராட்டுகிறார்! ஆக, ஈழத் தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ்நாடு உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்றால், டெல்லி உங்களுக்கு யார்? அதனை விளக்க வேண்டும்.

 

தமிழருக்காக பேசும் சிங்களவர்களும் உள்ளார்கள் என்று கூறுகிறார். தமிழர்களுக்காக நியாயமாக பேசும் சிங்கள புத்திசீவிகள் அனைவரும் தமிழீழ விடுதலையே தமிழருக்கான ஒரே தீர்வு என்று கூறுகிறார்கள் என்பதை விக்னேஸ்வரனை விட நாங்கள் அதிகம் அறிந்தவர்கள்.

 

இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் வரை யாருக்கும் தெரியாத நபர் விக்னேஸ்வரன். ஆனால், அவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறது என்றால், அதன் பின்னணி சதியில் சிங்கள பெளத்த இனவாத அரசும், டெல்லியும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. தமிழனின் அரசியலைக் கொண்டே தமிழினத்தின் விடுதலையை முடக்குவது என்கிற சீறிய சதித் திட்டத்தின் வெளிப்பாடுதானே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=92920&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

திரு விக்னேஸ்வரன் ஐயா அவர்கட்கு நான் பகிரங்கமாகக் கூறிக்கொள்வது என்னவெனில், பல்லாயிரம் தமிழ்ச்சொந்தங்களையும் உயிர் உடமைகளையும் இழந்து பல பதிண்ம வருடங்களாக நடைபெற்றுவரும் தமிழர் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை, சிங்களவனுக்கும் வெள்ளைக்காரனுக்கும் காவடி தூக்கி வந்த பட்டயங்களை தங்கள் பெயருக்கு முன்னால் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்துச் சாதித்திமிர் பிடித்த பொன்னம்பலம் ராமநாதன் பொன்னம்பலம் அருணாச்சலம் ஆகியோர் வழிவந்ததாய் பீற்றிக்கொள்ளும், பல்லாயிரம் தமிழ்ச்சொந்தங்கள் இன்னலுக்குள் சிக்குண்டு அல்லலுறுகையில் இம்மென்றோ ஆமென்றோ வாயே திறவாது, சிங்களச் சீராளர்களுக்குள் சம்பந்திகளைக் கொழும்பின் மேட்டுக்குடித் தெருக்களில் தேடிக்கொண்டிருந்ததுபோல் அல்ல சாமானிய வடக்குக் கிழக்குத் தமிழர்களது எண்ணமும் எதிர்பார்ப்பும். அதிஉச்ச பயங்கரச் சட்டங்களை தமிழர்கள் மீது ஏவி அவர்களை இன இழிப்புக்கு ஏதுவானவார்களாக மாற்றும் முயற்சியில் சிங்களம் ஈடுபட்டபோதெலாம் அவர்களால் நிர்வகிக்கப்பட்ட தமிழர்க்கான நீதிக்கொலைக்கூடங்களில் மரச்சுத்தியல் சகிதமாக உட்கார்ந்து அனைத்தையும் ஆமோதித்தபின் ஓய்வுபெற்று கொழும்பு வீதிகளில் உள்ள சமய வழிபாட்டிடங்களிலும், கேட்போர் கூடங்களிலும் சமயச் சொற்பொழிவாற்றி சும்மா இருந்த உங்களை இப்போ தமிழர் கூத்தமைப்பு எதோ வாராதுவந்த மாமணியாய்க் கிடைத்ததாக புழகாங்கிதம் அடைந்திருக்கும் வேளையில், கள்ளுண்ட வண்டாக நீங்கள் கனக்கக் கதைப்பதை எம்மால் பொறுக்கமுடையாது.

 

எந்தப் பதின்மூணாம்  அரசியல் வரைவு எனும் பம்மாத்தில் வடக்கும் கிழக்கையும் இணக்கும் சரத்தைக் கிள்ளியெறிய நீதிமன்றம் தலைப்பட்டதோ, அதே நீதி அதிகாரத்திலிருந்து நீங்கள் அப்போதே வெளிவந்து அரச அடாவடித்தனங்களுக்குச் சாமரம் வீசாதிருந்தால், உங்களை நாம் ஆகா ஒகோ எனப் புகழ்ந்திருப்போம். அதுவிடுத்து அரசுப்பணி அதிகார ருசி இவைகளையெல்லாம் அனுபவித்துவிட்டு காடுவா வீடுபோ எனச் சொல்லி மல்லாந்து கிடக்கும்வேளையில் சம்பந்தர் உங்களை அழைத்ததால் தாற்பரியம் இல்லாது பேசகூடாது.

 

ஈழத்தமிழன் எனது ரத்தம் என மாய்ந்து கிடக்கிறான் தமிழ்நாட்டுத்தமிழன். கெந்தகநொடி முள்ளிவாக்காலில் அடங்கிடினும் என் தொப்புள்கொடி உறவு தீயில் கருகிடும் நொடி அவ்வப்போது உங்கள் நாசித்துவாரத்தில் வங்கக் கடலில் காற்ருடன் கலந்துவந்து தாக்குவது புரியவில்லையா உங்களுக்கு. சிங்களவன் கொல்லையில் சீமந்தம் செய்தது நீங்கள் மட்டுமே,  நாம் எவரும் அதனுடன் உடன்படோம் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை எனில் துண்டு துப்பட்டாக்களை உதரிவிட்டு சம்பந்தி வாசுதேவா நாணயமில்லாதாகாராவுடன் மகிந்தவின் வாசற்படியை மிதிக்கவும். உங்களுக்குச் சொந்தமென அவரே திருவாய் மலந்தருளியிருக்கிறார். அதைக் கேட்டதுமே நாம் எல்லோரும் பொட்டம்மான் இல்லாதுவிடினும் எமக்குப் புலனாய்வுக்குஆட்கள் இருக்கினம் சிங்களவனுக்குள்ளேயே என புழுகிக்கொண்டிருக்கிறம் தவிர அத்தருணத்திலிருந்தே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறம் நீங்கள் எப்போ எந்தைடத்தில் அடிடாராமா அடிடா எனக் குத்துக்கரணம் அடிப்பியள் என.

 

உங்களுக்கு விழும் வாக்குகள் எல்லாம் கூத்தமைப்புக்கோ அன்றேல் உங்களுடன் கூட்டுவைத்துள்ள கடந்தகால ஒட்டுக்குழுக்களுக்கோவென உங்களில் யாராவது நினைத்தால் அது எங்கட பிழை இல்லை. நாங்கள் வாக்களிக்கவிருப்பது யாருக்கோ எதோவொரு செய்திசொல்ல அந்தச் செய்தி என்ன என்பதை தேர்தல் முடிந்ததும் நீங்களே அறிவீர்கள்.

 

தவிர இதோடு எங்களுக்குச் சுபீட்சம் வரும் என நாங்கள் நினைக்கமாட்டம் காரணம் எதிர்காலத்தில் உங்களையும் சமாளிச்சு தமிழர் விடுதலைக்கான பாதையைச் சீரமைக்கும் வழிவகைகளை இப்போதே கண்டுகொள்ள இரவுபகலாக எல்லோரும் உழைத்திடுவோம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.