Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு படுகொலை - பிரபாகரனின் சகிப்புத்தன்மையை சீண்டிப்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகிப்புத் தன்மையை சீண்டிப் பார்க்கும் வகையில் முல்லைத்தீவில் சிங்கள விமானப்படையினர் குண்டு வீசியுள்ளனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் கண்காணிப்பில் நிறுவப்பட்டு இயங்கி வரும் செஞ்சோலை என்ற ஆதரவற்ற பள்ளி வளாகத்தில் சிங்கள இராணுவம் குண்டு வீசியதில் 60-க்கும் மேற்பட்ட சிறுமிகள் இறந்துள்ளனர். இது பிரபாகரனின் சகிப்புத் தன்மையை சீண்டிப் பார்க்கும் செயலாகும்.

சிறுமிகளை படுகொலை செய்ததை விடுதலை சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த செயலை மத்திய மற்றும் தமிழக அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா? அல்லது அவர்களைக் கண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கப் போகிறதா? என்பதை உலகத் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

செஞ்சோலையை தாக்கியதன் மூலம் விடுதலைப் புலிகளை போருக்கு வலிந்து இழுப்பது உறுதிப்பட்டு உள்ளது. இதனால் அங்கு உச்ச நிலையில் போர் நடக்கக் கூடிய பேராபத்து உருவாகியுள்ளது. எனவே, சிங்களவர்களின் இனவெறியாட்டத்தைத் தடுக்கவும் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கவும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இதை வலியுறுத்தி சென்னையில் 17 ஆம் தேதி உண்ணாவிரத அறப் போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே, எனது பிறந்த நாள் நிகழ்ச்சியான தமிழர் எழுச்சி நாள் நிகழ்ச்சிகளை அன்று தவிர்த்துவிட்டு, அமைதி அஞ்சலி நிகழ்ச்சியாக மாவட்ட தலைமையிடங்களில் கடைபிடிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசு முல்லைத்தீவில் தமிழின உறவுகளை விமானக் குண்டுவீச்சில் கொன்றபோது ஏன் வாய் திறக்கவில்லை என்று திராவிடர் கழகத்தின் உத்தியோகப்பூர்வ ஏடான "விடுதலை" கேள்வி எழுப்பியுள்ளது.

"விடுதலை" நாளேட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியான ஆசிரியர் தலையங்கம்:

ஜெயவர்த்தனே ஆனாலும் சரி, சந்திரிகா குமாரதுங்க ஆனாலும் சரி, ராஜபக்சே ஆனாலும் சரி இலங்கையில் யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பது முக்கியமல்ல, சிங்கள வாதம் என்கின்ற அரச பயங்கரவாதம்தான் ஆட்சியின் இருக்கையாக இருக்கிறது.

இதற்கு அதிக எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. இலங்கை அரசு, அங்கு வாழும் தமிழ் இன மக்களைத் தங்கள் நாட்டுக்கு உரியவர்கள்தான் என்று இதயபூர்வமாக கருதுமேயானால், தம் சொந்த நாட்டு மக்கள் மீது முப்படைகளை ஏவுமா? குண்டுமாரி பொழியுமா? என்கிற கேள்விகளுக்கு இந்திய அரசும் சரி, உலக நாடுகளும் சரி ஏன் அய்க்கிய நாடுகள் மன்றமும் சரி இதுவரை பதில் அளித்துள்ளனவா?

தமிழ் இன மக்களின் வாழ்வுரிமை என்பது அங்கு கேள்விக்குரிய தாக்கப்பட்டு விட்டது. அவர்களுடைய உயிர், உடைமை, மான வாழ்வு, இன அடையாளம் அத்தனையையும் அழிப்பதையே தம் குறிக்கோளாகக் கொண்டு ஆளுகின்ற ஆட்சி, வாழுகின்ற சிங்கள மக்கள் செயல்படும் நிலையில் இந்தியா போன்ற நாடுகள் இலங்கை ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளையாமல் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறுவதை விடப் பொறுப்பற்ற யோசனை, கருத்து வேறு ஒன்றும் இருக்க முடியாது.

ஆகஸ்ட் 14 ஆம் நாள் காலை 7 மணி அளவில் முல்லைத்தீவில் பாடசாலைச் சிறுமிகள் மீது சிங்கள இராணுவம் குண்டுமாரி பொழிந்து 61 உயிர்களைப் பலி கொண்டது என்ற திடுக்கிடும் செய்தி மனிதாபிமானம் உள்ளவர்களின் குருதியை உறையச் செய்திருக்கிறது.

129-க்கும் மேற்பட்ட சிறுமிகள் படுகாயமுற்று உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது மேலும் வேதனைக்குரிய தகவல் ஆகும்.

சிங்கள விமானப் படை - போர் விமானங்கள் மூலம் 16 குண்டுகளை வீசி ஈவிரக்கமற்ற தாக்குதல் நடத்திய இடம், ஒரு குழந்தைகள் காப்பகம்.

செஞ்சோலைச் சிறார் இல்லம் என்று பெயரிடப்பட்ட இல்லத்தில்தான் - போரில் அனாதைகளாக்கப்பட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

போர்க்களத்தில் போராளிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள், முதலுதவிப் பயிற்சிக்கு வந்திருந்த பச்சிளங் குழந்தைகளைக் குண்டுவீசிக் கொன்றொழித்தது மன்னிக்க முடியாத மாபாதகம். மனித உரிமைகள், குழந்தைகள் உரிமைகளைப்பற்றி வாய்கிழியப் பேசும் பார்ப்பன ஊடகங்கள், தமிழ்ப் பிஞ்சுகளின் மரண ஓலத்துக்கு என்ன நீதியை வழங்கப் போகின்றன?

இலங்கை இராணுவம் என்பது முழுக்க சிங்களவர்களைக் கொண்டது. அங்கு வாழும் தமிழர்களுக்கு இராணுவத்திலோ, காவல்துறையிலோ அறவே இடம் கிடையாது. இந்த நிலையில், தமிழ் இன அழிப்பு என்கின்ற மூர்க்கதனத்தோடு குழந்தைகள் என்று கூட பாராமல் கொன்று குவித்ததைப் பற்றி இந்தியா ஏன் வாய் திறக்கவில்லை?

யுத்தத்தில் கூட சில வரைமுறைகள் உண்டு. ஆனால், எந்த வரைமுறைக்கும் கட்டுப்படாமல் காட்டுமிராண்டித்தனமாய் மருத்துவ மனைகள், செஞ்சிலுவைச் சங்க நிறுவனங்கள், வழிபாட்டு இடங்கள் போன்றவற்றின் மீது கூட தாக்குதல் தொடுத்த கேவலம் இலங்கை இராணுவத்திற்கு மட்டுமே உரித்தான ஒன்று ஆகும்.

உலக மனித உரிமை அமைப்புகள் இந்த பிரச்சினைகள் மீது உரிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அழுத்தம் காட்ட வேண்டாமா?

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் பங்குபெறச் சென்றுள்ள இந்திய வீரர்களைப் பற்றிக் கவலைப்படும் இந்திய அரசு, பச்சிளம் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது குறித்து, வாய் திறக்கவில்லையே என்று எண்ணுகின்றபோது இந்தியா என்றால், தமிழர்களுக்கு இந்த அளவுக்குத்தான் அக்கறை என்ற எண்ணம் உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்படத்தானே செய்யும்.

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட வேண்டியவர்கள்தான். அதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அதே நேரத்தில் பச்சிளம் குழந்தைகளைப் படுகொலை செய்த பாதகத்தைப் பற்றி இந்திய அரசு இதுவரை கவலை செலுத்தாதது குறித்து நமது வருத்தத்தை, வேதனையை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியவர் களாக இருக்கிறோம்.

மாவிலாறு என்ற அணைதான் போருக்குக் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில், அணை திறக்கப்பட்ட பிறகும் கூட நியாய தர்மத்திற்கு கட்டுப்படாமல் தமிழர்களை அழிப்பதற்கு யுத்த முறையை மேற்கொண்ட சிங்கள அரசின் போக்கை இந்திய அரசு புரிந்துகொண்டு அங்கு பாதிக்கப்படும் தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் தென்பகுதியில் வாழும் தமிழ் இனத்தின் இரத்த உறவுக்காரர்கள் என்ற உணர்வுகூட இந்தியத் தேசியவாதிகளுக்கு ஏற்படாதது ஆச்சரியமே என்பதைவிட அதிர்ச்சியானது என்று அத்தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthinam.com

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவர் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் ஆதரவு இருக்கும்,,,, :idea:

எதற்கும் கொழும்பில் இருக்கும் தமிழ்மக்கள் தங்களை பாதுகாக்கின்ற வழிமுறையை நேரம் கடத்தாமல் கையாள்வது நன்று. ஒரு சில நூறு சிங்கள காம இராணுவம் கொல்லப்பட்டதுக்கே பிஞ்சு சிறுவர்களை குண்டு போட்டு அழித்த சிங்களம், 40 ஆயிரம் சிங்கள காடையர்கள் மண்ணுக்குள் புதையும் போது சும்மா இருக்கமாட்டார்கள் நியாபகத்தில் வைத்திருக்கவும்,

கண்காணிப்பு குழு, யுனிசெவ் கூறும் அறிக்கைகளையே தட்டிகழித்து, அதுக்கு வியாக்கியானம் கொடுக்கும் மண்டைகழண்ட சிங்கள தலைமை யாழ்குடா நாட்டில் அசம்பாவிதம் நடக்கும் பொழுது உங்களின் உயிர்களை மதிக்கவே மாட்டார்கள்.... :idea:

வாய் திறந்தால் பிறகு எப்படி ஆயுதம் கொடுக்கிறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை தான் மேற்கொண்டார்கள் என்பதை அரசாங்கம் மறந்து விட்டது.

ஒரு முழு அளவிலான யுத்தம் வரும் போது தெரியும் யாரோட மோதுகிறார்கள் என்று

வாய் திறந்தால் பிறகு எப்படி ஆயுதம் கொடுக்கிறது?
:D:D:D

கொழும்பில் பள்ளிக் கூடங்கள் அடைப்பு.

------------------------------------

இலங்கைத் தலைநகர் கொழும்பில் கண்ணிவெடி சம்பவத்தை அடுத்து சாலைகளில் புதிய புதிய பாணி பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலாகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே வேளையில் தலை நகரில் பள்ளிக்கூடங்கள் எல்லாம் 15 நாட்களுக்கு மூடப் பட்டு இருக்கின்றன.

புலிகள் பகுதியில் அமைந் துள்ள முல்லைத் தீவு பகுதியில் சிறார் இல்லத்தில் ராணுவம் குண்டு போட்டு 61 மாணவி களைக் கொன்றதற்குப் புலிகள் அமைப்பு பதிலடி கொடுக்கக் கூடும் என்ற அச்சத்தில் பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டுவிட்ட தாக அதிகாரிகள் கூறினர்.

இலங்கையில் முல்லைத் தீவில் சிறார் விடுதியில் ராணுவம் குண்டுபோட்டதில் கொல்லப்பட்டவர்கள் விடு தலைப் புலிகள் என்று ராணு வம் கூறுவதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஜநா சிறார் அமைப்பு தெரிவித்துள் ளது.

அதேபோல் முல்லைத் தீவில் அரசுப் படைகள் குண்டுத் தாக்குதல் நடத்திய பகுதியில் எந்தவித ராணுவ நிலை களையோ, ஆயுதங்களையோ காணமுடியவில்லை என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்திருக் கிறார்.

இதற்கிடைய 61 பிள்ளைகள் கொல்லப்பட்டதற்கு அனு தாபம் தெரிவிக்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி நாளாகக் கடைப் பிடிக்கப்படும் என்று விடு தலைப் புலிகள் அமைப்பு தெரி வித்தது.

முல்லைத்தீவில் அமைந் திருக்கும் ‘செஞ்சோலை' சிறுவர் இல்ல வளாகத்தில் இலங்கை விமானப் படை ‘கிபிர்' ëஜட் விமானங்களின் கொடூர குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி அழிந்தது. அங்கு தங்கியிருந்த எதுவும் அறியாத அப்பாவிச் சிறார்கள் சுமார் 61 பேர் துடிதுடித்துப் பலியாயி னர்.

படுகாயங்களுக்குள்ளான மேலும் 130 சிறார்கள் உயிருக் காகப் போராடிக் கொண் டிருக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான சிறு வர்கள் உட்பட செஞ்சோலை இல்லத்தைச் சேர்ந்த குழந்தை கள் மற்றும் சிறுமிகளும் ஒன்றாகக் கூடி யிருந்த வளாகம் மீதே விமானப் படை விமானங் கள் குண்டுகளைப் போட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த இல்லத்தில் இருந்தவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் என்று ராணுவம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பகுதிக்கு இலங்கை அமைதிக் கண்காணிப்புக் குழுவினர் நேரில் சென்ற னர். அங்கு சென்ற எங்கள் பேராளர்கள் "அங்கு தாங் கள் ராணுவ நிலைகளை அல்லது ஆயுதங்களைக் காணவில்லை” என்பதை எங்களிடம் உறுதிப்படுத்தி யுள்ளனர் என்று ஹென்றிக் சன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட பகுதிகளில் 10 குண்டுகள் வரை விழுந் திருப்பதற்கான அடை யாளங்கள் காணப்பட்டன.

குறிப்பிட்ட நேரத்தில் நான்கு விமானங்கள் தாக்கு தல் நடத்தின என்பதை நேரில் கண்டவர்கள் தெரி வித்தனர்.

எமக்குக் கிடைத்த தகவல் களின்படி 61 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். தாக்குதல் நடந்த பகுதியில் ஆயுதங்களோ, போர்த் தளங் களோ இருப்பதற்கான அடையாளங்களைக் காண முடியவில்லை. நாம் அறிந்த வரை இப்பகுதி போர்த் தளத்திற்கான பகுதி அல்ல. என்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் குறிப் பிட்டுள்ளார்.

இவ்வே£யில் அந்தப் பகுதிக்குச் சென்ற ஐநா சிறார் அமைப்பு (யுனிசெப்) பேராளர்கள் நேற்று சில விவரங்களைக் கூறினர்.

ராணுவம் சொல்வதைப் போல் அங்கு கொல்லப் பட்டவர்கள் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் களாகத் தெரியவில்லை.

கொல்லப்பட்டவர்கள் ஏதுமறியாத சிறுமிகள் என்று அந்த அமைப்பின் பேராளர் ஜோனாவார் ëஜர்டன் கூறினார்.

சம்பவம் நிகழ்ந்த இடத் துக்குச் சென்ற எங்கள் குழு வினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர் என்றார் அவர்.

இவ்வேளையில் ஐநா தலைமைச் செயலாளர் கோபி அன்னான், திங்கட் கிழமை 61 பிள்ளைகள் கொல்லப்பட்டது குறித்து தான் மிகுந்த அதிர்ச்சி அடைவதாகவும் கவலைப் படுவதாகவும் கூறினார்.

இவ்வேளையில் வடக்கே கடும் மோதல் தொடர்வ தாக நேற்று தெரிவிக்கப் பட்டது.

இவ்வேளையில் இலங்கை யின் இரண்டு தரப்புகளும் மோதலைக் கைவிட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று அமெரிக்கத் துìதரகம் கோரிக்கை விடுத்தது. அண்மைய வன்செயல்களில் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபம் தெரிவித்த துìதரக அறக்கை முல்லைத் தீவில் 61 மாணவிகள் கொல்லப்பட்டது குறித்து வாயைத் திறக்கவே இல்லை.

TAMILMURASU-SINGAPORE

கொழும்பில் என்ன நடந்தாலும் (நடக்காது என்று சொல்லவர வில்லை) அங்கு பல்நாட்டு ஊடகங்கள், சர்வதேச அமைப்புகள், தூதுவராலயங்கள் இருக்கு என்பதால் விடையத்தை மூடி மறைக்க முடியாது. ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கும் பொழுது ஒப்பீட்டளவில் தகவல்கள் உடனடியாக வெளியில் வரும். ஆனால் யாழ்பாணத்தில் நிலமை அப்படி இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.