Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆட்சி! தேர்தலில் மண்ணை கவ்வியது ராஜபக்ஷே கூட்டணி!' - தினமலர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
vikneshvaran-seithy-20130923.jpg

இலங்கையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், நடைபெற்ற தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, அபார வெற்றி பெற்றது. அந்த கூட்டமைப்பை சேர்ந்த, இலங்கை, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன், மாகாணத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார். தேர்தலில், அதிபர் ராஜ்பக்ஷேயின், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மண்ணை கவ்வியது. இவ்வாறு தமிழக நாளேடான தினமலர் தனது இன்றைய பதிப்பில் முதன்மைச் செய்தியாக பிரசுரித்துள்ளது. இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே, பல ஆண்டுகளாக நடந்த போர், 2009ல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும், வடக்கு மாகாணத்தில், நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது.

  

இதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அதிபர் ராஜபக்ஷேயின், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இடையே கடும் போட்டி நிலவியது. உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களின் கண்காணிப்புடனும், பலத்த போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்புடனும், நடைபெற்ற தேர்தலில், பதிவான ஓட்டுக்கள், நேற்று முன்தினம் மாலை, 6.00 மணி முதல் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின், துவக்கத்தில் இருந்தே, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.

 

வடக்கு மாகாணத்தில், மொத்தமுள்ள, 38 இடங்களில், 30 இடங்களை இந்த கூட்டமைப்பு கைப்பற்றியது. மீதமுள்ள, எட்டு இடங்களில், ராஜபக்ஷேயின், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஏழு இடங்களிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இலங்கையின் விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படி, அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சி, கூடுதலாக இரண்டு பேரை, நியமன உறுப்பினர்களாக, நியமித்துக் கொள்ளலாம். அதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, கூடுதலாக இரண்டு இடங்களைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு மற்றும் வவுனியா என, ஐந்து மாவட்டங்களிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டமைப்புக்கு, 78 சதவீத வோட்டுக்கள் பதிவாகியிருந்தன. முல்லைத்தீவு மாவட்டத்தில், மொத்தமுள்ள, ஐந்து இடங்களில் நான்கையும், வவுனியாவில், ஆறுக்கு நான்கு, கிளிநொச்சியில், நான்கு இடங்களில் மூன்று, என்ற அளவில், கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

 

இலங்கையின் வடக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளதால், "உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட, இம்மாகாணத்தில், வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும், தங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும்' என்ற மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவே, தேர்தல் முடிவுகள் உள்ளதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேர்தல் முடிவு தொடர்பாக, வடக்கு மாகாணத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியுமான, விக்னேஸ்வரன் கூறியதாவது:

 

ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில், மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இதை, இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். ராணுவத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் தமிழர்கள், சுயாட்சியை விரும்புகின்றனர் என்பதையும், தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன. எனவே, வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். ஒன்றிணைந்த இலங்கையில், தமிழர்களுக்கு சுயாட்சி என்ற சுதந்திரமான அமைப்பையே, நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, விக்னேஸ்வரன் கூறினார்.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர், சுமந்திரன் கூறுகையில், 'தமிழர்களின் பிரச்னைக்கு, அரசியல் ரீதியான ஒரு தீர்வை தீர்மானிக்கும் வகையில், தேர்தல் முடிவுகள் உள்ளன. இதன் மூலம், மக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்,' என்றார்.

 

இலங்கை அரசின் மூத்த அமைச்சரும், செய்தித் தொடர்பாளருமான, கெகிலிய ரம்புகேவெல்லா கூறுகையில், 'தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி, இலங்கை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி,' என்றார்.

 

அதே நேரத்தில், இலங்கையின், மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் நடைபெற்ற தேர்தலில், ராஜபக்ஷேவின், ஆளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி, வெற்றி பெற்றுள்ளது.

 

இராணுவத்தினர் எதிர்ப்பு

 

இலங்கையின், வடக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை, அங்குள்ள தமிழர்கள், பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். ஆனாலும், சில இடங்களில், ராணுவத்தினரின் தொடர் கண்காணிப்பால், அவர்களால், வெற்றியை கொண்டாட முடியவில்லை. இதை, இளைஞர்கள் பலர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

 

இதுதொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர், சம்பந்தன் கூறுகையில், 'தமிழர்களின் எதிர்காலம் குறித்து, புதிதாக சிந்திப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது,' என்றார்.

 

சுயாட்சி கிடைக்குமா?

 

தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தாலும், மாகாண முதல்வருக்கான அதிகாரம் மிகவும் குறைவே. அதனால், இங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு, அதிபர், ராஜபக்ஷேயிடம் கையேந்தும் நிலையே ஏற்படும். அதனால், வடக்கு மாகாணத்தில், தமிழர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

 

இலங்கையில், 25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த, வடக்கு மாகாண தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதல்வராக விக்னேஸ்வரன் பதவியேற்கிறார். இலங்கையில், ஒன்பது மாகாணங்கள் உள்ளன. இதில், வடக்கு உட்பட, மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில், வடக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. இங்குள்ள, ஐந்து மாவட்டங்களில், மொத்தம், 38 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, 30 இடங்களை கைப்பற்றி உள்ளது.

 

முதல்வர் யார்?

 

முதல்வராக பதவியேற்க உள்ள சி.வி.விக்னேஸ்வரன், 1939 அக்., 23ல், கொழும்பில் பிறந்தார். இவரது பெற்றோர், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் அருகே மணிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள். தந்தை கனகசபாபதி, அரசுப் பணியில் இருந்தார். அதனால், அவரது குடும்பம் அடிக்கடி வெவ்வேறு இடங்களில் குடியேறியது.விக்னேஸ்வரன் துவக்க கல்வியை, "குருநாகல் கிரைஸ்ட்ச் சர்ச்' கல்லூரியிலும், அனுராதாபுரம் பள்ளியிலும் படித்தார். பி.ஏ., படிப்பை, லண்டன் பல்கலைக் கழகத்திலும்; சட்டப்படிப்பை, கொழும்பு பல்கலையிலும் முடித்தார். 1962ல், சட்டக் கல்லூரி மாணவர் சங்க தலைவராக இருந்தார்.

 

சுப்ரீம் கோர்ட் நீதிபதி:

 

கடந்த, 1979 மே, 7ல், நீதிபதியானார். துவக்கத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் மாவட்ட கோர்ட்களில் பணியாற்றினார். 1987ல், கொழும்பு மாவட்ட நீதிபதியாக பதவியேற்றார். 1988ல், ஐகோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். பின், 2001ல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உயர்ந்தார். 2004 வரை அப்பதவியில் இருந்தார். 2013 ஜூலை 15ல், வடக்கு மாகாண தேர்தல், தமிழ் தேசிய கூட்டமைப்பு முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93537&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.