Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்றத்தில் ஒரு பயனும் இல்லை! : வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்றத்தில் ஒரு பயனும் இல்லை! : வைகோ

TUESDAY, 08 OCTOBER 2013 08:41

vaiko_02.jpg

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் பதவியேற்றிருப்பதால் ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஒரு முன்னேற்றமும் ஏற்பட்டு விடாது என வைகோ கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்து வருகிறது. இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பதவியேற்றதில் துளியளவும் மகிழ்ச்சி இல்லை. விக்னேஸ்வரன் முதல்வரானாலும் தமிழருக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை!. காரணம், அவருக்கு ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும்? இலங்கை வடக்கு மாகாண தேர்தல் உலகை ஏமாற்றும் செயல்.

இவரால் பிரயோஜனம் இல்லை என்று மக்களுக்கு தெரிந்திருந்தும் ஏன் வாக்களித்தார்கள் என்றால், ராஜபக்சே கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் வாக்களித்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் 1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். உலகில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் அங்கு பயன்படுத்தப்பட்டது. சிரியாவில் உள்நாட்டு போரில் ரசாயன ஆயுத தாக்குதலில் பொதுமக்கள் இறந்ததை கண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் சிரியாவை தாக்க தயாராயின. ஆனால், லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்த இலங்கைக்கு இந்திய அரசு பாராட்டுப் பத்திரம் வழங்கியுள்ளது," என்றார்.

மேலும், 'காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 7-வது நாளாக தியாகு உண்ணாவிரதம் நடத்தி வருகிறார். அறவழியில் போராடும் இவரை அப்புறப்படுத்த கால்துறை முயற்சி எடுக்கக்கூடாது. மீறி அப்புறப்படுத்தினால் தமிழக அரசுதான் காரணம் என்று நாங்கள் குற்றம் சாட்டுவோம். மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கை சென்றுள்ளதால் எந்த தீர்வும் ஏற்பட்டு விடாது. துரோகிகள் கூடும் இடமாகத்தான் இலங்கை இருக்கும்," என்றார்.

இதேவவேளை, பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தோழர் தியாகு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமைக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கிறார்.

http://www.4tamilmedia.com/newses/india/17770-2013-10-08-06-41-24

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.